Thursday 16 August 2012

அஸ்ஸாம் கலவரம் மறைக்கப்படும் உண்மைகள்...!!!


பகிர்வு : இன்று ஒரு தகவல் (பக்கம்)

கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி முதல் அஸ்ஸாமில் முஸ்லிம்களின் மீதான தாக்குதல் கொடூரமாக நடந்து வருகின்றது. போடா லேண்ட் பகுதியிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியே தீருவோம் என திட்டமிட்டு முஸ்லிம்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கின்றனர், தனி நாடு
கேட்டு ஆயுதம் ஏந்தி போராடும் போடோ தீவிரவாதிகள். இதுவரை பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். போடோ தீவிரவாதிகளின் இந்த வெறிச்செயலை வேடிக்கை பார்க்கின்றது மத்திய, மாநில அரசுகள். இவர்களின் இந்த தீவிரவாதத் தாக்குதல் ஒடுக்கப்படவில்லை என்றால் போடோ லேண்ட் பகுதில் வசிக்கும் லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்

கலவரத்தின் பின்னணி :

போடோ லேண்ட் சிறுபான்மை மாணவர் பேரவையின் தலைவர் முஹிப்புல் இஸ்லாம் மற்றும் அஸ்ஸாம் சிறுபான்மை மாணவர் பேரவையைச் சேர்ந்த அப்துல் சித்தீக் சேக் ஆகியோர் போடோ தீவிரவாதிகளால் ஜூலை 20 அன்று கொல்லப்படுகின்றனர். இந்த போடோ தீவிரவாதிகள்தான் முஸ்லிம்களைக் கொலை செய்து கலவரத்திற்கு வித்திட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக போடோ தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் மறுநாள் கொல்லப்படுகின்றனர். இதனால் இரு சமூகங்களுக்கிடையே பயங்கர கலவரம் ஏற்படுகின்றது.
போடா லேண்ட் பகுதியின் கொக்ரஜ்ஹர், சிராங், பக்ஸா மாவட்டத்திலும் மற்றும் துப்ரி மாவட்டத்திலும் கலவரம் காட்டுத்தீ போல் பரவுகின்றது. இதுவரை இந்த கலவரத்திற்கு 58க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

1,70,000 பேர் தங்களுடைய இருப்பிடங்களை விட்டுவிட்டு அகதிகளாக அண்டை மாவட்டங்களிலும், அண்டை மாநிலமான மேற்கு வங்கத்திலும் குடிபெயர்ந்துள்ளனர்.

யார் இந்த போடோ தீவிரவாதிகள்?

போடோ லிப்ரேஷன் டைகர் போர்ஸ் (Bodo Liberation Tigers Force) என்று அழைக்கப்படும் இந்த போடோ தீவிரவாதிகள் அஸ்ஸாமில் உள்ள போடோ லேண்ட் பகுதியை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என போராடக்கூடிய தீவிரவாத குழு ஆவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.

AK 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் என தனி போர்ப்படையை வைத்துக் கொண்டு இந்திய அரசிற்கு சவால்விடும் வகையில் அஸ்ஸாமின் போடோ லேண்ட் பகுதியில் தனி இராஜ்யம் நடத்திக் கொண்டிருப் பவர்கள்தான் இந்த போடோ தீவிரவாதிகள். இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் இவர்களைப் பொருத்தவரை தீவிரவாதிகள். சற்றும் யோசிக்காமல் கொன்று குவித்துவிடுவார்கள்.
மொண்டல் என்பவர் கோக்ராஜ்ஹர் பகுதியில் பல இடங்களுக்கு உரிமையாளர். முஸ்லிம்களுக்கு எதிரான போடோ தீவிரவாதிகளின் தாக்குதலைப் பற்றி மொண்டல் குறிப்பிடுகையில், “கடந்த 20 ஆண்டுகளில் போடோ தீவிரவாதிகள் இதுபோன்ற ஒரு தாக்குதலை நடத்தியதில்லை. அந்த அளவிற்கு கொடூரமாக முஸ்லிம்கள் மீது இந்த போடோ தீவிரவாதிகள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்றார்.

இந்தக் கலவரத்தில் போடோ தீவிரவாதிகளிடமிருந்து தனது சகோதரரை மயிரிழையில் காப்பாற்றிய மொய்னுல் ஹக் என்பவர் கூறுகையில்…

இந்த போடோ தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் 1987-ல் இருந்து நடந்து வருகின்றது. இவர்களின் நோக்கம் தனி நாடு. போடோ இனத்தைத் தவிர பிற இன மக்களை போடோ லேண்ட் பகுதியிலிருந்து துரத்துவதுதான் இவர்களின் குறிக்கோள். இந்தப் பகுதியில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள். எனவே இவர்களின் தனி நாடு கோரிக்கைக்கு இடையூறாக இருக்கும் முஸ்லிம்களைக் கொல்வதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

ராணுவ வேடத்தில் வந்து மசூதி இல் தாக்குதல் நடத்திய போடோ தீவிரவாதிகள் !

கொக்ராஜர்:அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகள் கொக்ராஜர் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். முஸ்லிம்கள் தராவீஹ் (இரவு) தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது ராணுவ உடையில் துப்பாக்கிகளுடன் வந்த போடோ தீவிரவாதிகள் மசூதி க்கு காவல் நின்றவர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். எந்த நிமிடமும் போடோக்கள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கையுடன்
மசூதி க்கு காவலுக்கு ஆட்களை நிறுத்திவிட்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர். அப்பொழுது ராணுவ உடையில் வந்த போடோக்களை பார்த்தவர்கள் ராணுவம் என்று கருதி அசட்டையாக இருந்துவிட்டனர். அவ்வேளையில் திடீரென துப்பாக்கியால் போடோ பயங்கரவாதிகள் சுடத் துவங்கியுள்ளனர். இச்சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்

உண்மையை மறைக்கும் தமிழக ஊடகங்கள்:

ஆங்கில ஊடகங்கள் இந்த பயங்கர நிகழ்வை சரியாக படம்பிடித்துக் காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழக ஊடகங்களோ இப்படி ஒரு கலவரமே நடக்காததுபோல் ஒரு துணுக்குச் செய்தியைக்கூட வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கின்றது. தமிழக ஊடகங்களின் இந்த முஸ்லிம் விரோதப்போக்கு இந்திய இறையாண்மையை அசைத்து பார்க்க கூடியது....

செயலிழந்த மாநில அரசு; வேடிக்கை பார்த்த மத்திய அரசு:

அஸ்ஸாம் மாநிலத்தின் போடா லேண்ட் பகுதியே பற்றி எரிகின்றது. மாநில முதல்வரோ பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு டீ பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார்.அஸ்ஸாமில் ஒன்றுமே நடக்கவில்லை எனவும் பத்திரிகைகள் பெரிதுபடுத்தி எழுதுகின்றன எனவும் உளறிக் கொட்டி கேவலப்பட்டுக் கொண்டு இருகின்றார்.

அஸ்ஸாம் மாநில முதல்வர் தரூன் கோகாய் மத்திய அரசு போதிய உதவி செய்யவில்லை. இராணுவத்தை அனுப்பவில்லை என மத்திய அரசை குறை சொல்கின்றார்.

மத்திய அரசோ மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறை சொல்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் மாநில அரசும் காங்கிரஸ்தான்; மத்திய அரசும் காங்கிரஸ்தான். இவர்களின் இந்த பூச்சாண்டி விளையாட்டால் பலியாவது அப்பாவி மக்கள் தான் . இத்தனைக்கும் இந்த மன்மோகன்சிங் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்துதான் மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது இன்னும் கேவலமான விஷயம்.

முஸ்லிம்கள் என்றாலே இரண்டாந்தர குடிமக்களாக பார்க்கும் காங்கிரஸ் அரசின் பச்சைத்துரோகம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

நியாமாக பார்த்தால் கலவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடவடிக்கை எடுக்காத மாநில முதல்வர் தரூன் கோகாய் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

அரசுகள் செய்ய வேண்டியது என்ன?:

லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் தற்போது அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் அவர்களின் வசிப்பிடங்களுக்குச் செல்லவிடாமல் ஆயுதமேந்திய போடோ தீவிரவாதிகளால் தடுக்கப்படுகின்றனர்.

1. மத்திய அரசு தனது இராணுவ பலத்தை பயன்படுத்தி முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ஆயுதங்களுடன் ஆக்கிரமித்துள்ள போடோ தீவிரவாதிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும். அப்பாவி மக்கள் அவர்களின் இருப்பிடங்களில் பாதுகாப்புடன் வசிக்க வழிவகை செய்ய வேண்டும்.

2. மீண்டும் இது போல கலவரம் நடக்காமல் இருக்க சட்ட விரோதமாக போடா தீவிரவாதிகள் வைத்திருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

3. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அகதிகளாக உள்ள குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

4. நாட்டின் அமைதியை சீர் குலைக்கும் போடோ தீவிரவாதிகள் மீது இராணுவத் தாக்குதல் நடத்த வேண்டும்!!

இந்தக் கலவரம் இதுவரை 80 உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. மேலும் போடோ தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் சொந்த ஊருக்குள் திரும்ப விடாமல் அச்சுறுத்துகின்றனர்.

முஸ்லிம்கள் நோன்பு நோற்று இறைவனை வழிபடும் இந்தப் புனித மாதத்தில் முஸ்லிம்களைக் கொன்றொழித்துக் கொண்டிருக்கும் போடோ தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத அஸ்ஸாம் மாநில அரசையும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மத்திய அரசையும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

Wednesday 15 August 2012

இலவச செல்போன் வழங்க மன்மோகன் அரசு திட்டம்..


ஆங்கிலேயர் தெற்காசியாவில் தேயிலையை அறிமுகப்படுத்துவதற்காக, லீட்டர் லீட்டராக ஓசி தேநீர் கொடுத்தார்களாம்…! ஒசியில் குடித்து குடித்து சுவைக்கு அடிமையான மக்கள் ஓசி திட்டம் முடிந்ததும் காசு கொடுத்து தேனீர் வாங்கி குடித்தார்களாம்..!

தற்போது மத்திய அரசு அறிவிக்க இருக்கும் ஓசி செல்போன் திட்டத்திலும் இவ்வாறான மாயவலை பின்னப்பட்டுள்ளதோ என சந்தேகம் வலுக்கிறது.

நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த சுமார் 3 கோடி பேருக்கு ரூ.7 ஆயிரம் கோடியில் இலவச செல்போன் வழங்க மத்திய அரசு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

மாதம் 200 லோக்கல் கால்களையும் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய திட்டக் கமிஷன் மற்றும் தொலைதொடர்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் 15,ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங், தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றுகிறார்.

அப்போது இந்த புதிய திட்டம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சந்தானத்தின் கேள்வியும் பிரபலங்களின் பதில்களும்.




இந்திய சுதந்திர தினத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக 'நாட்டிற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?' என்கின்ற கேள்வியை நகைச்சுவை நடிகர் சந்தானம் அவர்கள் சில முன்னணி சினிமா பிரபலங்களிடம் கேட்கின்றார், அதற்க்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்பதுதான் இப்பதிவு. இது முழுக்க முழுக்க கற்பனையே; யாரையும், எதையும் புண்படுத்துவது நோக்கமல்ல.......
கமல்ஹாசனிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

கமல் :- வெல், இதை கேள்விக்கு பதிலளிக்கணுமின்னா ....... சுதந்திர காலத்தில நம்ம முன்னோர்கள் எவ்வளவு பாடுபட்டிருக்கிறாங்க எங்கிறத நாம நினச்சு பாக்கணும், அப்புறம் அமெரிக்கா எப்பிடி நல்ல வளத்தோட இருக்கிறாங்க எங்கிறத நாம தெரிஞ்சிக்கணும், நான் தசாவதாரம் பண்ணும்போது அமெரிக்காக்கு மூணு வாட்டி போயிருந்தன்,ஒவ்வொரு தடவையும் அமேரிக்கா பாக்கிறத்துக்கு புதுமையா இருக்கும், அந்த நேரங்களில் சின்ன வயசில எங்க தெருவில இருந்த....

சந்தானம் :- சார் கேள்விக்கு பதில் வரலையே....

கமல் :- நான் பதிலுக்குத்தான் வந்துகிட்டிருக்கிரன்......

சந்தானம் :- (உங்ககிட்டயிருந்து பதில் வாறதுக்குள்ள அடுத்த சுதந்திர தினம் வந்திருமே) பரவால்ல சார் நீங்க நின்னு நிதானமா ஜோசிச்சு பதில் சொல்லுங்க, இவரு நோட் பண்ணிக்குவாரு, டேய் தம்பி இங்கவா; சார் சொல்றதை நோட் பண்ணிக்கோ..... எனக்கு வயிறு கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு, நான் கிளம்புறன், நீங்க இவர்கிட்ட தெளிவா பதிலை சொல்லுங்க...
நடிகர் விஜயிடம்
சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

விஜய் :- இந்த குடியரசு தின நன்னாளிலே...

சந்தானம் :- சார் இது சுதந்திர தினம்!!!!

விஜய் :- இருக்கட்டுமே, அதனால என்ன? எல்லாம் நம்ம காந்தி தாத்தா வாங்கி குடுத்ததுதானே?????

சந்தானம் :- (சுத்தம்) சார் அதுவந்து.......

விஜய் :- இப்ப அதுவா முக்கியம்; மேட்டருக்கு வாங்க; நான் நாட்டுக்கு செய்த மிகப்பெரும் சேவையாக நினைப்பது இந்திய தேசத்திற்கு ஒரு டாக்டரை உருவாக்கியதுதான்.

சந்தானம் :- யாராவது பசங்களை படிக்க வச்சு டாக்டராக்கினீங்களா ??

விஜய் :- யோவ்; நான் என்னை சொன்னன், ஐ ஆம் டாக்டர் விஜய்...

சந்தானம் :- (ஏன் அதோட நிறுத்தீட்டா(ய்)? அப்பிடியே 'மொக்கை' 1 டெரா ஹேட்ஸ், 'பிளேட்' 1 ஜீடா பைட்ன்னும் சொல்லன்.. ) சரிசார்; நன்றி, நாங்க கிளம்பிறம்!!!!!!

இயக்குனர் விஜயிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

இயக்குனர் விஜய் :- அன்று வெள்ளையன் எம் மண்ணிலே எமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல வளங்களை சுருட்டிக்கொண்டு சென்றான். அதற்க்கு பதிலடியாக நானும் என்சக சில இயக்குனர்களும் சேர்ந்து வெள்ளையனின் திரைப்படங்களை அவனுக்கு தெரியாமல் இங்கு ஆட்டையை போட்டுக் எம் மண்ணுக்கு கொண்டு வந்துள்ளோம், கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம், கொண்டு வருவோம்!!!!

சந்தானம் :- இப்பிடி ஒரு பதிலை சத்தியமா நான் எதிர்பாக்கல, எனி வே, மிக்க நன்றி.
'தமிழன்' சீமானிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

சீமான் :- என் நாடு ஈழத்திற்கு என்ன செய்தது? அங்கு வாழும் எம் இனத்தின் விடிவிற்கு ஒன்றுமே செய்யாத இத்தேசத்தின் இன்றைய அரசியல் சுயலாப சக்திகளுக்கு சரியான பாடம் புகட்டுவேன்...

சந்தானம் :- கோபப்படாதீங்க சார், நீங்க நாட்டிற்கு என்ன செய்தீங்கென்னுதானே கேட்டன்....

சீமான் :- எனக்கு ஈழத்திற்கு செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கு....

சந்தானம் :- (அதுக்கு நீ ஈழத்துக்குத்தான் போகணும் ) சாரிசார், தப்பான ஆள்கிட்ட கேள்வியை கேட்டிட்டன், நான் வாறன்சார்.
டீ.ராஜேந்தரிடம்
சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

டீ.ராஜேந்தர் :- நான் என்ன செய்யலையின்னு கேளு!!!!

சந்தானம் :- சரிசார், நீங்க நாட்டுக்கு என்ன செய்யலை ?

டீ.ராஜேந்தர் :- டேய் நான் நாட்டுக்கு என்ன செய்தனின்னு கேளு!!!!

சந்தானம் :- (யார்ரா அவன்? என்னை இவன்கிட்ட கூட்டியாந்தது...) சரிசார் இப்ப என்னதான் சொல்லப்போறீங்க??

டீ.ராஜேந்தர் :- அப்பிடி கேளு; வெய்யிலுக்கு தேவை மோரு, என் பையனுக்கு தேவை பீரு(Beer), ஓட்டுறதுக்கு தேவை காரு (Car), கிரிக்கட்டுக்கு தேவை போரு (Four), ரோட்டுக்கு தேவை தாரு, வீட்டுக்கு தேவை டோரு (Door), நாட்டுக்கு தேவை பாரு (Bar)...

சந்தானம் :- (முதல்ல இந்த இடத்தைவிட்டு மாறு, இல்லை மூஞ்சீல விடுவன் சேறு) சூப்பரா சொன்னீங்க சார், இந்தமாதிரி பேச உங்க ஒருத்தராலதான் முடியும்.......
எஸ்.ஜே.சூர்யாவிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

எஸ்.ஜே.சூர்யா :- நான் நிறைய பொண்ணுங்களை....

சந்தானம் :- பொண்ணுங்களை!!!!!!

எஸ்.ஜே.சூர்யா :- யோவ், எதுக்கு இப்பிடி பறக்கிறா(ய்)? படிக்கவைக்கணுமின்னு இருக்கிறன் எண்டு சொல்லவந்தன்.

சந்தானம் :- சார் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, 'படி'க்கத்தானே!!!!!!

எஸ்.ஜே.சூர்யா :- ஆமாய்யா....

சந்தானம் :- நல்ல முயற்சி சார், பாராட்டுக்கள்.......
நமீதாவிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க? மேடம்

நமீதா :- ஹாய் மச்சான்..... எப்பிடி இருக்கிறது?

சந்தானம் :- (என் அப்பன்கூட உங்கம்மா பொறந்தாளா ? இல்லை என் அம்மாகூட உங்கப்பன் பொறந்தானா ? இல்லை உன் அக்கா தங்ககச்சியை நான் கட்டினனா? இல்லை என் அண்ணன் தம்பியை நீ கட்டினியா? இல்லை நானும் நீயும் தோஸ்தா? எதுக்கு இப்ப இந்த மச்சான்? ) நான் இப்பவரை நல்லாத்தான் இருக்கிறன், நீங்க பதில் சொல்லுங்க மேடம்....

நமீதா :- எனக்கு காந்தி தாத்தா பிடிக்கும்.

சந்தானம் :- கதர் சட்டை இல்லாம கலர் சட்டையா இருந்தாலும், காந்தித் தாத்தா வேட்டி சைசில ட்ரெஸ் பண்ணியிருக்கிறதை பாக்கிறப்பவே அது தெரியுது மேடம்...... நீங்க நாட்டுக்கு என்ன நல்லது பண்ணியிருக்கிறீங்க?

நமீதா :- நான் விஜயகாந்த் சார், அர்ஜுன் சார் கூட படத்தில நடிச்சிருக்கு....

சந்தானம் :- புரியல மேடம் !!!!

நமீதா :- விஜகாந்த் சார், அர்ஜுன் சார் படங்கள்ல நிறைய தீவிரவாதிகள் பிடிக்கும், அது நாட்டுக்கு செய்யும் சேவைதானே? அவங்க கூட நான் நடிச்சது ராமர் பாலம் கட்ட அணில் ஹெல்ப் செஞ்சது போலதானே?

சந்தானம் :- (வாட் எ கிரேசி லேடி..... ) ஓகே மேடம், சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
சிம்புவிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

சிம்பு :- ஆக்சுவலி நான் என்ன சொல்ல வாறேன்னா; எனக்கு சுதந்திர தினம்னா ஞாபகத்துக்கு வாறது என்கூட இருக்கிற பசங்க எல்லாம் என்னை பாடச்சொல்லி, என்னோட பாட்டுக்கு கிளாப் அடிச்சு ஜாலியா இருக்கிறதுதான். என்னாலையே நம்பமுடியாத சில விசயங்களை என்னையும் அறியாம நான் செய்யிறதை எனக்கே அப்ப நம்ப முடியாம இருக்கும்.

சந்தானம் :- நான், எனக்கு, என், என்னை, என்னோட, என்னாலையே, என்னையும், எனக்கே; இந்த சொல்லுகள் இல்லாம உங்களால பேச முடியாதா?

சிம்பு :- எனக்கு அப்பிடியெ பேசி பழகிடிச்சு, என்னாலையே உடனடியா அதை கன்ரோல் பண்ண முடியல, நான் நினைச்சா முடியும், ஆனா எனக்குத்தான் இதையெல்லாம் ஜோசிக்க நேரமில்லையே, ஏன்னா நான் ரொம்ப பிசி.

சந்தானம் :- சரி பதிலை சொல்லுங்க?

சிம்பு :- ஆக்சுவலி நான் என்ன சொல்ல வாறன்னா.........

சந்தானம் :- ரொம்ப நன்றிசார் நான் கிளம்பிறன்.
கவுண்டமணியிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

கவுண்டமணி :- நீ என்ன பண்ணியிருக்கிறா(ய்)

சந்தானம் :- (என்ன பதில் சொன்னாலும் இந்தாளு நம்மள நாஸ்தியாக்காம விடமாட்டான்...) நான் எதுவும் பண்ணல சார்.

கவுண்டமணி :- அப்ப என்ன மயி...துக்கு மைக்கையும் கமராவையும் தூக்கிகிட்டு இங்க வந்தா(ய்)?

சந்தானம் :- (ஆகா சனியன் சடை போட ஆரம்பிச்சிடிச்சு, இனி பொட்டு வச்சு பூ வைக்காம போகாதே) இல்லைசார் பேட்டி எடுக்க சொன்னாங்க!!

கவுண்டமணி :- அவங்க ஆயிரம் சொல்லுவாங்க மான்(Man), நீ உடனே மைக்கை தூக்கீட்டு வந்திடுவியா? கன்றி புரூட்ஸ்; இந்தா 1 ரூபா, போ, போயி அந்த மூலைக் கடையில வாழைப்பழம் வாங்கீட்டுவா?

சந்தானம் :- (என்னது வாழைப்பழமா??? ) சார் நான் உங்களை பேட்டி எடுக்க வந்தவன் சார்!!!!

கவுண்டமணி :- ஆ..ஆ... இவரு பெரிய முதல்வன் அர்ஜுனு, நான் ரகுவரன், பேட்டி எடுக்க வந்திட்டாராம். என்னோட மாடுலேசனை கொப்பி அடிக்கிற நாய்க்கு பந்தாவை பாரு. போ, போயி பழம் வாங்கீட்டுவா!!!

சந்தானம் :- (சீனியர் ஆட்டிஸ்ட் கேக்கிறாரு, வாங்கித்தான் குடுப்பமே) இந்தாங்க சார் வாழைப்பழம், நீங்க இன்னும் பதில் சொல்லலையே!!!!

கவுண்டமணி :- இந்த மூஞ்சிக்கெல்லாம் பதில் சொல்றதில்லை.

சந்தானம் :- அதுக்காக நான் வேற மூஞ்சிய மாத்திக்கவா முடியும்?

கவுண்டமணி :- ஓ...., கவுண்டருக்கே கவுண்டரா? அம்புட்டு பெரிய பிஸ்தாவா நீ?

சந்தானம் :- அய்யய்யோ நீங்க எவளவு பெரிய அப்பாட்டக்கரு, உங்க முன்னாடி நானெல்லாம்....

கவுண்டமணி :- இப்ப எதுக்கு இப்பிடி பம்மிறா(ய் )? உனக்கு நான் பதில் சொல்லனுமின்னா நான் கேக்கிற 3 விசயத்தில ஒண்ணை கொண்டுவா?

1) கருங்கல்லு வேர்
2) கருவாட்டு இரத்தம்
3) கொக்கு மூத்திரம்

சந்தானம் :- (கவுண்டர் கவுண்டர்தான்) சரி அண்ணே நான் அப்புறமா உங்களை சந்திக்கிறன்.

கவுண்டமணி :- தம்பி பாத்துப்போ, தெருவில நாலஞ்சு சொறிநாய்கள் நிக்கும்,பாவம் அதுகள கடிச்சு வச்சிராத.....

சந்தானம் :- (தப்பிச்சன்டா சாமி) .............



Friday 10 August 2012

சீனாவில் கனமழை: உலக அதிசயமான சீன பெருஞ்சுவர் பாதிப்பு


சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால், உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீன நாட்டின் மீது எதிரி நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குவதை தவிர்ப்பதற்காக(1368-1644) இடைப்பட்ட கால கட்டத்தில் வடக்கு சீனாவில் ஹைபே மாகாணத்தில் இந்த பெருஞ்சுவர் கட்டப்பட்டது.

தற்போது இவை உலக அதிசயங்களுள் ‌ஒன்றாக பாதுகாப்பட்டு வருகிறது. இந்நிலையில் இம் மாகாணத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருதையடுத்து சுமார் 36 மீட்டர் நீள அளவிற்கு பெருஞ்சுவரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அ‌திக மழையால் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் நாடுகளில் சீனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 9 August 2012

::: சாராய பூமி :::



மதுக்கடை காசிலே மாநில
வளர்ச்சியா ?
எங்கள் கோமணத்தை உருவி தான்
நீங்கள் கோட்டை கட்ட வேண்டுமா ?

நாங்கள் மயக்கதிலே கொடுத்த
காசுதான் இம்மாநிலத்தை
வளர்க்குதாம் _ எங்களை
அம்மணமாய் ஆக்கிய பின்
வெள்ளி அரனான் கயறு எதற்கு ?

வாங்கி குடித்து முடியும் வரை
வாடிக்கையாளர் என்பீர் _ அவர்கள்
குடித்து முடித்து வெளியே வந்தால்
சமூக விரோதி என்பீர்

திருத்த வேண்டிய கடமை மறந்து
ஊத்தி கொடுத்து கெடுத்து வைத்தீர் _ வெறும்
பொழுதை போக்க குடித்தவனை _ இன்று
பொழுதோரம் குடிக்க வைத்தீர்

வருமானம் பற்றாமல்
வலுவிழுந்து போனால்
விபசாரத்தையும் பொதுவாக
தத்தெடுத்து _ விலைமாதை
வரி போட்டு விற்பீரா ?


அரசே ....

பலர் ஆரோக்கியத்தை கெடுத்த
பணம் பாவம் அதை தீண்டாதே
சந்தனக்கட்டையிலே சாக்கடையை
நோண்டாதே


புகழோடு வாழ்ந்து வந்த
தமிழ் மகனை _ சாக்கடை
புழுவோடு புரள வைத்த
புண்ணியவான்களே

தன் மக்களை குடிக்க வைத்து
லாபம் பார்க்கும் அரசுக்கும்
தன் மகளை தாசியாக்கி வயறு
வளர்க்கும் அப்பனுக்கும்

என்ன வித்தியாசம் ?.

அளவுக்கு மீறினால் தண்ணீரும் விஷம்


தண்ணீர் குடிப்பது நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஒருவர் தினமும் 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு.
ஆனால் தண்ணீர் நல்லது என்று கருதி அளவு கடந்து இஷ்டத்துக்கு குடித்தால் அதுவும் விஷம் போலத் தான்.

நிறைய தண்ணீர் குடிக்கிற போது, உடலில் சுரக்கிற திரவங்கள் நீர்த்துப் போகின்றனவாம். இதனால் உடலில் சோடியத்தின் அளவு குறைந்து போய் சமயங்களில் உயிராபத்தையும் ஏற்படுத்தி விடுமாம்.

தண்ணீரை தாகத்துக்கு குடியுங்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர் ஆய்வாளர்கள்.

100 கிலோ எடை உடைய ஒருவர் அதிகபட்சம் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாமாம். அதாவது ஒரு கிலோ எடைக்கு 3 மில்லி தண்ணீர் என்ற விகிதாச்சாரத்தில் தான் தண்ணீர் குடிக்க வேண்டுமாம்.

பிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்!


டெல்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.

இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்:

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.

ஈமு கோழி விளம்பரம் சத்தியராஜ், சரத்குமார் மீது வழக்குப் பதிவு!


ஈமு கோழி வளர்ப்பு விளம்பரத்தில் நடித்த பிரபல நடிகர்கள், சத்தியராஜ், சரத்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



சுசி ஈமு நிறுவனம் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக நடிகர்களை வைத்து விளம்பரம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தில் விளம்பரப்படத்தில் மாடல்களாக பிரபல நடிகர்கள் சத்தியராஜ், சத்தியராஜ் நடித்துள்ளனர்.

நடிகர்கள் சொன்னால் நம்பி ஏமாறும் மக்கள் அவர்களின் கவர்ச்சிகரமான விளம்பரத்தினைக் கண்டு பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர். ஆனால் சுசீ ஈமு நிறுவனம் சொன்னதைப் போல ஊக்கத்தொகையும், போனஸ் பணமும் வழங்கவில்லை. இதனால் கடந்த இரண்டு நாட்களாக அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.



இதனிடையே ஈமு கோழி நிறுவன உரிமையாளர்கள் மீது செக்சன் 420ன் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது செக்சன் 120 (பி)யின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



சரத்குமார் நடிகர் மட்டுமல்ல சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும், தென்காசி தொகுதியின் எம்.எல்.ஏவும் ஆவார். விளம்பரப் படத்தில் நடித்த நடிகர்கள் மீது முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் கீழ் முதன் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செக்ஸ் தரும் நன்மைகள் என்ன? சில உண்மைகள்!


காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பமுடியாமல் தடுமாறித்தான் போயிருக்கிறார்கள். சிற்றுயிர்கள் முதல் ஆறு அறிவு படைத்த மனிதர்கள் வரை அனைவரின் வாழ்வும் காமத்தில்தான் முற்றுப்பெருகிறது.



இரு உடல்கள் இணைவது இனப்பெருக்கத்திற்கு மட்டும்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் அது உண்மையில்லை என்று அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர். செக்ஸ் என்பது சிறந்த உடற்பயிற்சி என்றும் இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்புகள் குறையும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளனர். அதைப்போல கலவியில் ஈடுபடுவதன் மூலம் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும் என்று பல்வேறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பட்டியலில் உள்ள தகவல்கள் சுவாரஸ்யமானவை படியுங்களேன்.



சிறந்த பேச்சாளராக்கும்



படுக்கை அறையில் தம்பதிகளிடையே ஏற்படும் ஆத்மார்த்தமான உறவு அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறதாம். மிகப்பெரிய கூட்டத்தில் தைரியமாக பேசக்கூடிய அளவிற்கு மனதைரியத்தை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள். இதனால் மனஅழுத்தம், மேடைக்கூச்சம் நீங்கி தைரியமாக தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும் உறுதியாக கூறுகின்றனர் நிபுணர்கள்.



நோய் எதிர்ப்பு திறன் கொண்ட முத்தம்



உறவின் தொடக்கம் முத்தம்தான். இது சாதாரண சமாச்சாரமல்ல. முத்தத்தின் மூலம் நோய் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். மூளையின் செல்கள் சுறுசுறுப்படைகின்றனவாம். முகத்தின் அத்தனை தசை நரம்புகளும் இயங்குவதோடு முகத்தை சுருக்கமின்றி பாதுகாக்கிறதாம்.



ரத்த அழுத்தம் சரியாகும்



உறவின் வகைகள் பல உண்டு. அதில் ஒன்றான வாய்வழிப் புணர்ச்சியும் பல நன்மைகளை செய்கின்றதாம். பெண்ணை நுகர்ந்து, நாவின் மூலம் கிளர்ச்சியூட்டும் ஆண்கள் உள்ளனர். இதனால் பெண்களுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் வழக்கமாக உடலுறவின் மூலம் உயர்ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



முகத்தை பொலிவாக்கும் விந்தணு



விந்தணு என்பது ஆண்மையின் அடையாளம். ஒரு துளியில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் காணப்படுகின்றன. இதன் எண்ணிக்கையை வைத்துதான் அவர்களின் ஆரோக்கியம், குழந்தை பேறு போன்றவை முடிவு செய்யப்படும். இந்த விந்தணு சிறந்த மாய்ஸ்சரைசிங் கிரீம் ஆக செயல்படுகிறதாம். இதில் உள்ள புரதச் சத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இறுக்கமாக மாற்றுகிறதாம். விந்தணுவில் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், ப்ரக்டோஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. காண்டம் உபயோகிக்காமல் உறவில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் மூலம் ஏற்பட்ட காய்ச்சல் இருந்தால் குணமடையும் என்கின்றனர் நிபுணர்கள்.

Sunday 5 August 2012

வறட்சியில் மூழ்கும் இந்தியா?


பருவ மழை போதாத காரணத்தால் மூன்று வருடங்களில் இந்தியா முதல் தடவையாக வறட்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பசுபிக் சமுத்திரத்தின் ´´எல்லினோ தாக்கம்´´ காரணமாக செப்டம்பர் மாதத்தில் மழை வீழ்ச்சி சராசரியைவிட மிகவும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை துறைத் தலைவரான ஜெனரல் லக்ஷ்மன் சிங் ராத்தோர் கூறியுள்ளார்.


இந்த எல்லினோ தாக்கந்தான் உலகமெங்கிலும் காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.


இந்த மழை வீழ்ச்சிக் குறைவு, ஆசியாவின் மூன்றாவது பெரிய இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள்.


அதனால் பொருளாதார வளர்ச்சி குறைவதுடன், உணவு விலைகளின் விலையும் அதிகரிக்கலாம்.

நித்தியானந்தா, ரஞ்சிதா வெளிநாட்டுக்கு தப்பத் திட்டமா?



நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா கும்பலைச் சேர்ந்த 30 பேரின் பாஸ்போர்ட்களுடன் டெல்லி விமான நிலையத்திற்கு வந்த ஒரு நபரை போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதனால் நேபாளத்திலிருந்து வெளிநாடுக்கு தப்பியோட நித்தியானந்தாவும், அவரது கோஷ்டியினரும் திட்டமிட்டிருந்தனரா எனற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
நித்தியானந்தா மீது பாலியல் புகார்கள் ஏராளமாக உள்ளன. அதேபோல ரஞ்சிதா மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் அந்தரங்கமாக இருந்தது போன்ற காட்சி வெளியானது முதலே இருவரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.
நித்தியானந்தாவுடனேயே ரஞ்சிதா தொடர்ந்து இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர்கள் இருவரும் சேர்ந்து லெனின் கருப்பன் உள்ளிட்ட பல பேர் மீது வழக்குகளையும் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நித்தியானந்தா கும்பலைச் சேர்ந்த நித்தியானந்தா, ரஞ்சிதா உள்ளிட்ட 30 பேரின் பாஸ்போர்ட்களை டெல்லி சர்வதேச விமான நிலையம் முடக்கி வைத்துள்ளது.
கயிலாயத்திலிருந்து எஸ்கேப் ஆகத் திட்டம்?
சில நாட்களுக்கு முன்புதான் நித்தியானந்தா தனது ஆதரவாளர் பட்டாளத்துடன் கயிலாத்திற்குப் போனதாக கூறப்படுகிறது. கயிலாயம் என்று கூறப்படுவது திபெத் பகுதியில் இருப்பதாக தெரிகிறது. நேபாளத்திலிருந்துதான் இங்கு போக வேண்டும்.
இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்துக்கு காத்மாண்டுவிலிருந்து விமானம் மூலம் கவுசிக் என்பவர் வந்து சேர்ந்தார். அவரிடம் பரிசோதனை நடத்தியதில் 32 பாஸ்போர்ட்களை வைத்திரு்நதார். அதில் நித்தியானந்தா, ரஞ்சிதா ஆகியோரின பாஸ்போர்ட்களும் அடக்கம்.
இவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் மொத்தமாக பறிமுதல் செய்துள்ளனர். ஏன் இத்தனை பேரின் பாஸ்போர்ட்களுடன் இவர் வந்தார் என்பது தெரியவில்லை. நித்தியானந்தா உள்ளிட்டோர் நாட்டை விட்டுத் தப்பியோடும் திட்டத்துடன் இருந்தனரா என்பதும் புரியவில்லை.
கவுசிக்கிடம் நடத்திய விசாரணையில் நேபாளத்தில் இந்த பாஸ்போர்ட்களை ஒருவர் கொடுத்ததாக கூறியுள்ளார். நித்தியானந்தா விவகாரத்தில் இந்த பாஸ்போர்ட் முடக்கம் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஆண்மைப் பரிசோதனையிலிருந்து தப்பத் திட்டம்?
நித்தியானந்தாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை செய்ய சம்மன் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவர் பாட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார். பாஸ்போர்ட்கள் சிக்கியிருப்பதைப் பார்த்தால், கயிலாயம் போன நித்தியானந்தா, அப்படியே ரஞ்சிதா உள்ளிட்டோருடன் வெளிநாட்டுக்கு ஓடிப் போய் விடும்திட்டத்தில் உள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.
எப்படியோ இப்போதைக்கு நித்தியானந்தா நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Friday 3 August 2012

இஸ்லாமிய நாகரிகத்தின் ஈடு இணையற்ற வரலாற்றுச் சான்றுகளுள் ஒன்று!



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ் வ பரக்காத்துஹு!

இஸ்லாமிய நாகரிகத்தின் ஈடு இணையற்ற வரலாற்றுச் சான்றுகளுள் ஒன்று -இதோ!

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள்.

அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.

ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள்.

அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன்.

. இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

Wednesday 1 August 2012

மன்னிக்கும் குணம் இருக்கா? உங்களுக்கு இதயநோய் வராது



நமக்கு தீமை செய்தவர்களை பழிவாங்கவேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் படைத்தவர்களுக்கு இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மனிதர்களின் மனதிற்கும், உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

200 பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் 100 பேரிடம் உங்களுக்கு கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்?, அவரை எப்படி பழிவாங்குவதுபோல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

மீதமுள்ள 100 பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஐந்து நிமிடம் கழித்து அதே சம்பவங்களை மீண்டும் நினைத்து பார்க்க வைத்து அவர்களது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. நண்பரின் தவறுக்கு ஆத்திரப்பட்ட 100 பேரின் ரத்தம் அளவிற்கு அதிகமாக வேகமாக பாய்ந்தது. மறப்போம், மன்னிப்போம் பாலிசியை கொண்ட 100 பேரின் ரத்த அழுத்தம் நார்மலாக இருந்ததும் தெரிய வந்தது.

இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த குழுவின் தலைமை பேராசிரியர் டாக்டர் பிரிட்டா லார்சன், “மன்னிக்கும் மனம் இல்லாதவர்களின் ரத்த அழுத்தம் ஆத்திரப்படும்போது மட்டுமின்றி நீண்ட நேர பாதிப்பை சந்திக்கிறது. அதனால், அவர்கள் ரத்த கொதிப்புக்கு ஆளாகி இதய நோயை சந்திக்க நேரிடலாம். அதேசமயம் மன்னிக்கும் குணம் கொண்டவர்களுக்கு இதய துடிப்பு சீராக இருந்ததும் மன்னித்ததால் ஏற்பட்ட மன அமைதி காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து அது பலம் அடைந்ததும் சோதனையில் தெரிந்தது. இது நீண்ட கால அடிப்படையில் அவர்களது ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நன்மை தரும்” என்று கூறியுள்ளார். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எண்ணம் போல் வாழ்வு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே நமக்கு தீமை செய்தவர்களுக்கும் கூட நன்மையே நினையுங்கள் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

"32 பேர் பலியான ரெயில் விபத்து சதி வேலையா?



நேற்று முன்தினம் 32 பயணிகளைப் பலி கொண்ட தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, தனது
அறிக்கையை விசாரணை குழுவிடம் அளித்துள்ளது என்றும் அதில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படவில்லை

என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இக் கோர விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் டி.கே.சிங் தலைமையிலான அதிகாரிகள் நெல்லூரில் விசாரணை தொடங்க உள்ளனர். சக பயணிகள், விபத்தை நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட
உள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் அதிகாலை ஆந்திர மாநிலம் நெல்லூர் நிலையத்துக்கு வந்தது.அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ரயிலின் எஸ்11 பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 32 பேர் பலியானதாகவும், 26 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரைஅப் பெட்டியில் இருந்து 28 சடலங்களே கரிக்கட்டைகளாக மீட்கப்பட்டுள்ளன.அவற்றில் இதுவரை 19 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டன. மீதமுள்ள 9 உடல்கள் ஆணா, பெண்ணா என்று தெரியாத அளவுக்கு உருகுலைந்து போயுள்ளன.

இது விபத்தா, நாச வேலையா - ஆய்வு அடிப்படையில், தீ பிடித்த பெட்டியில் பயணம் செய்த 11 மர்ம ஆசாமிகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அடையாளம் காணப்பட்ட 15 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தீ விபத்து நடந்த பெட்டியில் 72 படுக்கை வசதிகள் உள்ளன. மொத்தம் 72 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், அதில் விஜயாவாடாவை சேர்ந்த 5 பேரும், நாக்பூரை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்யவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, 66 பேர் மட்டுமே பெட்டியில் பயணம் செய்திருக்க
வேண்டும். ஆனால், இருக்கைகளைவிட கூடுதலாக 11 பேர் பெட்டியில் இருந்ததாக சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது எஸ்11 பெட்டியில் 83 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் சந்தேகிக்கும்படி 3 நபர்கள் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பயணம் செய்ய அனுமதித்ததாக பயணச்சீட்டுப் பரிசோதகர் சமனகாந்த்தை
இருப்புப்பாதை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொத்தம் 28 சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. இதில் 20 ஆண்கள், 6 பெண்கள், 2 குழந்தைகள் என தெரியவந்துள்ளது. ஆனால், இந்த பெட்டியில் பயணம் செய்த 11 பேரின் நிலைமை என்ன என்று இதுவரை தெரியவில்லை. அவர்கள் எலும்பு உட்பட முழுவதுமாக கருகி சாம்பலானார்களா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அடையாளம் தெரியாமல் இருக்கும் சடலங்களின்
உடல்பாகங்களை எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நெல்லூர் அரசு மருத்துவமனையில் இந்த சடலங்கள் ஒரு மாதம் வரை அழுகாத வகையில் குளிர்சாதன வசதியுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து கடந்த 2 நாட்களாக ரயில்வே மின்துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது. விபத்து நடந்த இடத்தை முழுமையாக ஆய்வு செய்து, அறிக்கையை நேற்றிரவு விசாரணை அதிகாரி டி.கே.சிங்கிடம் ஒப்படைத்தது. அதில், தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பெட்டியின் 40ம் எண்
சீட்டில் இருந்து தீ பிடித்து 22ம் எண் இருக்கை வரை பரவியது என்றும், அதன்பிறகு பெட்டி முழுவதும் தீ பரவியுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எரிந்த பெட்டியில் 40வது சீட்டின் கீழே பெரிய அளவிலான ஓட்டை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் அல்லது வேறு ஏதாவது ரசாயனம் மற்றும்
வெடிமருந்து பொருட்களை யாராவது சட்டவிரோதமாக சென்னைக்குக் கொண்டுச் சென்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களிடம் விசாரித்தபோது, தீ விபத்து ஏற்பட்டு 4 நிமிடங்களிலேயே பெட்டி முழுவதும் தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது என்றும், அதற்கு முன்பாக 3 முறை வெடி சத்தம் கேட்டது என்றும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விரைவு தொடர்வண்டி விபத்துக்கு மின்கசிவு காரணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட இரசாயன பொருட்களால் விபத்து ஏற்பட்டதா அல்லது சதி வேலை காரணமா என்ற கோணத்தில் காவல்துறை மற்றும் ரயில்வே துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!



லண்டன் ஒலிம்பில் தொடக்க விழாவில் நம் இந்திர வீரர்களின் அணி வகுப்பும் நடந்தது அல்லவா?

அதில் நம் வீரர்களுடன் படு ஸ்டைலாக் ஒரு பெண் இணைந்து நடந்து வந்தாள்.

நம் இந்திய வீரர்கள் அனைவரும் யூனி பார்மில் இருக்க இம் மங்கை மட்டும் மாட்ர்ன் ட்ரஸில் …!

ஆரம்பத்தில் இருந்து யாருமே இதை கவனிக்காத சூழ்நிலையில் நம் மத்திய அமைச்சர்களில் ஒருவர் மறு நாள் – அதுதான் நேற்று மாலை இந்த போட்டோவை பார்த்து விட்டு தன் உயர் அதிகாரிகளிடம் யாருய்யா இது? என்று கேட்டார்.

அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

இதையடுத்து இங்குள்ள அதிகாரிகள் உடனடியாக லண்டன் போயுள்ள சக அதிகாரிகளிடம் விசாரித்த போது …

அவ்ர்களுக்கும் யார் இவ்ர்? என்று தெரிய வில்லையாம்.

அணி வகுப்பு முடிந்த பின் நம் வீரர்களிடம் கை குலுக்கி விட்டு காணாமல் போய் விட்டாராம் அவ்ர்.

இப்போது நம் இந்திய வீரர்கள் பதக்கம் வாங்குவதைப் பற்றி அப்புறம் யோசிக்கலாம் – முதலில் அந்த மர்ம பெண் யார்? என்று கண்டு பிடித்து தகவல் தாருங்கள் என்று டெல்லி மேலிடம் லண்டனில் உள்ள நம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து விசாரித்ததில்–

ராகுல் காந்தியின் காதலி நோயெலா என்னும் பெண் தான் இந்த சிவப்பு ஆடை உடுத்தி- நம் இந்தியாவின் மானத்தை கப்பலில் ஏற்றிய பெண்.

மேலும் இந்த பெண் ஜாகீர் ஷாவின் பேத்தியாகும். இதன் மூலம் காங்கிரஸ் கூடாரத்தில் இன்னுமொரு பெரும் புயல் வீசும்.அது பற்றியும் ஒரு தனிக் கட்டுரை விரைவில் தருகிறேன்.

இந்த பெண் சுஷில் குமாருடன் நடந்து வந்தது பற்றி சுஷில் குமாரிடம் கேட்டபோது எனக்கொன்றும் தெரியாது என கூறினார்.

ஆக்டிங் சீஃப் மிஷன் பிரிகேடியர் முரளிதரன் இதை பெரும் அவமானமாக எடுத்து இந்திய அதிகாரிகளிடம் விசாரிக்க தொடங்கியபோது தான் இந்த விஷயம் வெளியே வந்தது.

முதலில் அசெம்பிளிங் நடந்த இடத்தில் நிறைய இந்தியாவை சார்ந்தவர்கள் மார்ச் ஃபாஸ்ட்டுக்கு போகும் வீரர்களிடம் கை குலுக்கு வாழ்த்தி அனுப்புவது வழக்கம்

அப்படி செய்யும் போது இவரும் வழியனுப்ப வந்திருப்பதாக நினைத்தார்கள்.

ஆனால் அந்த பெண் இவர்களுடன் சிரித்து ஏதேதோ பேசிக் கொண்டே கடைசி வரை அணி வகுப்பிலும் வலம் வந்து பின்னரும் எல்லா வீரர்களிடம் கை குலுக்கி பின்பு நழுவி விட்டார்.