Wednesday 15 August 2012

சந்தானத்தின் கேள்வியும் பிரபலங்களின் பதில்களும்.




இந்திய சுதந்திர தினத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக 'நாட்டிற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?' என்கின்ற கேள்வியை நகைச்சுவை நடிகர் சந்தானம் அவர்கள் சில முன்னணி சினிமா பிரபலங்களிடம் கேட்கின்றார், அதற்க்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்பதுதான் இப்பதிவு. இது முழுக்க முழுக்க கற்பனையே; யாரையும், எதையும் புண்படுத்துவது நோக்கமல்ல.......
கமல்ஹாசனிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

கமல் :- வெல், இதை கேள்விக்கு பதிலளிக்கணுமின்னா ....... சுதந்திர காலத்தில நம்ம முன்னோர்கள் எவ்வளவு பாடுபட்டிருக்கிறாங்க எங்கிறத நாம நினச்சு பாக்கணும், அப்புறம் அமெரிக்கா எப்பிடி நல்ல வளத்தோட இருக்கிறாங்க எங்கிறத நாம தெரிஞ்சிக்கணும், நான் தசாவதாரம் பண்ணும்போது அமெரிக்காக்கு மூணு வாட்டி போயிருந்தன்,ஒவ்வொரு தடவையும் அமேரிக்கா பாக்கிறத்துக்கு புதுமையா இருக்கும், அந்த நேரங்களில் சின்ன வயசில எங்க தெருவில இருந்த....

சந்தானம் :- சார் கேள்விக்கு பதில் வரலையே....

கமல் :- நான் பதிலுக்குத்தான் வந்துகிட்டிருக்கிரன்......

சந்தானம் :- (உங்ககிட்டயிருந்து பதில் வாறதுக்குள்ள அடுத்த சுதந்திர தினம் வந்திருமே) பரவால்ல சார் நீங்க நின்னு நிதானமா ஜோசிச்சு பதில் சொல்லுங்க, இவரு நோட் பண்ணிக்குவாரு, டேய் தம்பி இங்கவா; சார் சொல்றதை நோட் பண்ணிக்கோ..... எனக்கு வயிறு கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு, நான் கிளம்புறன், நீங்க இவர்கிட்ட தெளிவா பதிலை சொல்லுங்க...
நடிகர் விஜயிடம்
சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

விஜய் :- இந்த குடியரசு தின நன்னாளிலே...

சந்தானம் :- சார் இது சுதந்திர தினம்!!!!

விஜய் :- இருக்கட்டுமே, அதனால என்ன? எல்லாம் நம்ம காந்தி தாத்தா வாங்கி குடுத்ததுதானே?????

சந்தானம் :- (சுத்தம்) சார் அதுவந்து.......

விஜய் :- இப்ப அதுவா முக்கியம்; மேட்டருக்கு வாங்க; நான் நாட்டுக்கு செய்த மிகப்பெரும் சேவையாக நினைப்பது இந்திய தேசத்திற்கு ஒரு டாக்டரை உருவாக்கியதுதான்.

சந்தானம் :- யாராவது பசங்களை படிக்க வச்சு டாக்டராக்கினீங்களா ??

விஜய் :- யோவ்; நான் என்னை சொன்னன், ஐ ஆம் டாக்டர் விஜய்...

சந்தானம் :- (ஏன் அதோட நிறுத்தீட்டா(ய்)? அப்பிடியே 'மொக்கை' 1 டெரா ஹேட்ஸ், 'பிளேட்' 1 ஜீடா பைட்ன்னும் சொல்லன்.. ) சரிசார்; நன்றி, நாங்க கிளம்பிறம்!!!!!!

இயக்குனர் விஜயிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

இயக்குனர் விஜய் :- அன்று வெள்ளையன் எம் மண்ணிலே எமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல வளங்களை சுருட்டிக்கொண்டு சென்றான். அதற்க்கு பதிலடியாக நானும் என்சக சில இயக்குனர்களும் சேர்ந்து வெள்ளையனின் திரைப்படங்களை அவனுக்கு தெரியாமல் இங்கு ஆட்டையை போட்டுக் எம் மண்ணுக்கு கொண்டு வந்துள்ளோம், கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம், கொண்டு வருவோம்!!!!

சந்தானம் :- இப்பிடி ஒரு பதிலை சத்தியமா நான் எதிர்பாக்கல, எனி வே, மிக்க நன்றி.
'தமிழன்' சீமானிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

சீமான் :- என் நாடு ஈழத்திற்கு என்ன செய்தது? அங்கு வாழும் எம் இனத்தின் விடிவிற்கு ஒன்றுமே செய்யாத இத்தேசத்தின் இன்றைய அரசியல் சுயலாப சக்திகளுக்கு சரியான பாடம் புகட்டுவேன்...

சந்தானம் :- கோபப்படாதீங்க சார், நீங்க நாட்டிற்கு என்ன செய்தீங்கென்னுதானே கேட்டன்....

சீமான் :- எனக்கு ஈழத்திற்கு செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கு....

சந்தானம் :- (அதுக்கு நீ ஈழத்துக்குத்தான் போகணும் ) சாரிசார், தப்பான ஆள்கிட்ட கேள்வியை கேட்டிட்டன், நான் வாறன்சார்.
டீ.ராஜேந்தரிடம்
சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

டீ.ராஜேந்தர் :- நான் என்ன செய்யலையின்னு கேளு!!!!

சந்தானம் :- சரிசார், நீங்க நாட்டுக்கு என்ன செய்யலை ?

டீ.ராஜேந்தர் :- டேய் நான் நாட்டுக்கு என்ன செய்தனின்னு கேளு!!!!

சந்தானம் :- (யார்ரா அவன்? என்னை இவன்கிட்ட கூட்டியாந்தது...) சரிசார் இப்ப என்னதான் சொல்லப்போறீங்க??

டீ.ராஜேந்தர் :- அப்பிடி கேளு; வெய்யிலுக்கு தேவை மோரு, என் பையனுக்கு தேவை பீரு(Beer), ஓட்டுறதுக்கு தேவை காரு (Car), கிரிக்கட்டுக்கு தேவை போரு (Four), ரோட்டுக்கு தேவை தாரு, வீட்டுக்கு தேவை டோரு (Door), நாட்டுக்கு தேவை பாரு (Bar)...

சந்தானம் :- (முதல்ல இந்த இடத்தைவிட்டு மாறு, இல்லை மூஞ்சீல விடுவன் சேறு) சூப்பரா சொன்னீங்க சார், இந்தமாதிரி பேச உங்க ஒருத்தராலதான் முடியும்.......
எஸ்.ஜே.சூர்யாவிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

எஸ்.ஜே.சூர்யா :- நான் நிறைய பொண்ணுங்களை....

சந்தானம் :- பொண்ணுங்களை!!!!!!

எஸ்.ஜே.சூர்யா :- யோவ், எதுக்கு இப்பிடி பறக்கிறா(ய்)? படிக்கவைக்கணுமின்னு இருக்கிறன் எண்டு சொல்லவந்தன்.

சந்தானம் :- சார் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, 'படி'க்கத்தானே!!!!!!

எஸ்.ஜே.சூர்யா :- ஆமாய்யா....

சந்தானம் :- நல்ல முயற்சி சார், பாராட்டுக்கள்.......
நமீதாவிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க? மேடம்

நமீதா :- ஹாய் மச்சான்..... எப்பிடி இருக்கிறது?

சந்தானம் :- (என் அப்பன்கூட உங்கம்மா பொறந்தாளா ? இல்லை என் அம்மாகூட உங்கப்பன் பொறந்தானா ? இல்லை உன் அக்கா தங்ககச்சியை நான் கட்டினனா? இல்லை என் அண்ணன் தம்பியை நீ கட்டினியா? இல்லை நானும் நீயும் தோஸ்தா? எதுக்கு இப்ப இந்த மச்சான்? ) நான் இப்பவரை நல்லாத்தான் இருக்கிறன், நீங்க பதில் சொல்லுங்க மேடம்....

நமீதா :- எனக்கு காந்தி தாத்தா பிடிக்கும்.

சந்தானம் :- கதர் சட்டை இல்லாம கலர் சட்டையா இருந்தாலும், காந்தித் தாத்தா வேட்டி சைசில ட்ரெஸ் பண்ணியிருக்கிறதை பாக்கிறப்பவே அது தெரியுது மேடம்...... நீங்க நாட்டுக்கு என்ன நல்லது பண்ணியிருக்கிறீங்க?

நமீதா :- நான் விஜயகாந்த் சார், அர்ஜுன் சார் கூட படத்தில நடிச்சிருக்கு....

சந்தானம் :- புரியல மேடம் !!!!

நமீதா :- விஜகாந்த் சார், அர்ஜுன் சார் படங்கள்ல நிறைய தீவிரவாதிகள் பிடிக்கும், அது நாட்டுக்கு செய்யும் சேவைதானே? அவங்க கூட நான் நடிச்சது ராமர் பாலம் கட்ட அணில் ஹெல்ப் செஞ்சது போலதானே?

சந்தானம் :- (வாட் எ கிரேசி லேடி..... ) ஓகே மேடம், சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
சிம்புவிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

சிம்பு :- ஆக்சுவலி நான் என்ன சொல்ல வாறேன்னா; எனக்கு சுதந்திர தினம்னா ஞாபகத்துக்கு வாறது என்கூட இருக்கிற பசங்க எல்லாம் என்னை பாடச்சொல்லி, என்னோட பாட்டுக்கு கிளாப் அடிச்சு ஜாலியா இருக்கிறதுதான். என்னாலையே நம்பமுடியாத சில விசயங்களை என்னையும் அறியாம நான் செய்யிறதை எனக்கே அப்ப நம்ப முடியாம இருக்கும்.

சந்தானம் :- நான், எனக்கு, என், என்னை, என்னோட, என்னாலையே, என்னையும், எனக்கே; இந்த சொல்லுகள் இல்லாம உங்களால பேச முடியாதா?

சிம்பு :- எனக்கு அப்பிடியெ பேசி பழகிடிச்சு, என்னாலையே உடனடியா அதை கன்ரோல் பண்ண முடியல, நான் நினைச்சா முடியும், ஆனா எனக்குத்தான் இதையெல்லாம் ஜோசிக்க நேரமில்லையே, ஏன்னா நான் ரொம்ப பிசி.

சந்தானம் :- சரி பதிலை சொல்லுங்க?

சிம்பு :- ஆக்சுவலி நான் என்ன சொல்ல வாறன்னா.........

சந்தானம் :- ரொம்ப நன்றிசார் நான் கிளம்பிறன்.
கவுண்டமணியிடம்

சந்தானம் :- நாட்டிற்காக நீங்க(ள்) என்ன செய்திருக்கிறீங்க?

கவுண்டமணி :- நீ என்ன பண்ணியிருக்கிறா(ய்)

சந்தானம் :- (என்ன பதில் சொன்னாலும் இந்தாளு நம்மள நாஸ்தியாக்காம விடமாட்டான்...) நான் எதுவும் பண்ணல சார்.

கவுண்டமணி :- அப்ப என்ன மயி...துக்கு மைக்கையும் கமராவையும் தூக்கிகிட்டு இங்க வந்தா(ய்)?

சந்தானம் :- (ஆகா சனியன் சடை போட ஆரம்பிச்சிடிச்சு, இனி பொட்டு வச்சு பூ வைக்காம போகாதே) இல்லைசார் பேட்டி எடுக்க சொன்னாங்க!!

கவுண்டமணி :- அவங்க ஆயிரம் சொல்லுவாங்க மான்(Man), நீ உடனே மைக்கை தூக்கீட்டு வந்திடுவியா? கன்றி புரூட்ஸ்; இந்தா 1 ரூபா, போ, போயி அந்த மூலைக் கடையில வாழைப்பழம் வாங்கீட்டுவா?

சந்தானம் :- (என்னது வாழைப்பழமா??? ) சார் நான் உங்களை பேட்டி எடுக்க வந்தவன் சார்!!!!

கவுண்டமணி :- ஆ..ஆ... இவரு பெரிய முதல்வன் அர்ஜுனு, நான் ரகுவரன், பேட்டி எடுக்க வந்திட்டாராம். என்னோட மாடுலேசனை கொப்பி அடிக்கிற நாய்க்கு பந்தாவை பாரு. போ, போயி பழம் வாங்கீட்டுவா!!!

சந்தானம் :- (சீனியர் ஆட்டிஸ்ட் கேக்கிறாரு, வாங்கித்தான் குடுப்பமே) இந்தாங்க சார் வாழைப்பழம், நீங்க இன்னும் பதில் சொல்லலையே!!!!

கவுண்டமணி :- இந்த மூஞ்சிக்கெல்லாம் பதில் சொல்றதில்லை.

சந்தானம் :- அதுக்காக நான் வேற மூஞ்சிய மாத்திக்கவா முடியும்?

கவுண்டமணி :- ஓ...., கவுண்டருக்கே கவுண்டரா? அம்புட்டு பெரிய பிஸ்தாவா நீ?

சந்தானம் :- அய்யய்யோ நீங்க எவளவு பெரிய அப்பாட்டக்கரு, உங்க முன்னாடி நானெல்லாம்....

கவுண்டமணி :- இப்ப எதுக்கு இப்பிடி பம்மிறா(ய் )? உனக்கு நான் பதில் சொல்லனுமின்னா நான் கேக்கிற 3 விசயத்தில ஒண்ணை கொண்டுவா?

1) கருங்கல்லு வேர்
2) கருவாட்டு இரத்தம்
3) கொக்கு மூத்திரம்

சந்தானம் :- (கவுண்டர் கவுண்டர்தான்) சரி அண்ணே நான் அப்புறமா உங்களை சந்திக்கிறன்.

கவுண்டமணி :- தம்பி பாத்துப்போ, தெருவில நாலஞ்சு சொறிநாய்கள் நிக்கும்,பாவம் அதுகள கடிச்சு வச்சிராத.....

சந்தானம் :- (தப்பிச்சன்டா சாமி) .............



No comments: