Wednesday 1 August 2012

லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!



லண்டன் ஒலிம்பில் தொடக்க விழாவில் நம் இந்திர வீரர்களின் அணி வகுப்பும் நடந்தது அல்லவா?

அதில் நம் வீரர்களுடன் படு ஸ்டைலாக் ஒரு பெண் இணைந்து நடந்து வந்தாள்.

நம் இந்திய வீரர்கள் அனைவரும் யூனி பார்மில் இருக்க இம் மங்கை மட்டும் மாட்ர்ன் ட்ரஸில் …!

ஆரம்பத்தில் இருந்து யாருமே இதை கவனிக்காத சூழ்நிலையில் நம் மத்திய அமைச்சர்களில் ஒருவர் மறு நாள் – அதுதான் நேற்று மாலை இந்த போட்டோவை பார்த்து விட்டு தன் உயர் அதிகாரிகளிடம் யாருய்யா இது? என்று கேட்டார்.

அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

இதையடுத்து இங்குள்ள அதிகாரிகள் உடனடியாக லண்டன் போயுள்ள சக அதிகாரிகளிடம் விசாரித்த போது …

அவ்ர்களுக்கும் யார் இவ்ர்? என்று தெரிய வில்லையாம்.

அணி வகுப்பு முடிந்த பின் நம் வீரர்களிடம் கை குலுக்கி விட்டு காணாமல் போய் விட்டாராம் அவ்ர்.

இப்போது நம் இந்திய வீரர்கள் பதக்கம் வாங்குவதைப் பற்றி அப்புறம் யோசிக்கலாம் – முதலில் அந்த மர்ம பெண் யார்? என்று கண்டு பிடித்து தகவல் தாருங்கள் என்று டெல்லி மேலிடம் லண்டனில் உள்ள நம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து விசாரித்ததில்–

ராகுல் காந்தியின் காதலி நோயெலா என்னும் பெண் தான் இந்த சிவப்பு ஆடை உடுத்தி- நம் இந்தியாவின் மானத்தை கப்பலில் ஏற்றிய பெண்.

மேலும் இந்த பெண் ஜாகீர் ஷாவின் பேத்தியாகும். இதன் மூலம் காங்கிரஸ் கூடாரத்தில் இன்னுமொரு பெரும் புயல் வீசும்.அது பற்றியும் ஒரு தனிக் கட்டுரை விரைவில் தருகிறேன்.

இந்த பெண் சுஷில் குமாருடன் நடந்து வந்தது பற்றி சுஷில் குமாரிடம் கேட்டபோது எனக்கொன்றும் தெரியாது என கூறினார்.

ஆக்டிங் சீஃப் மிஷன் பிரிகேடியர் முரளிதரன் இதை பெரும் அவமானமாக எடுத்து இந்திய அதிகாரிகளிடம் விசாரிக்க தொடங்கியபோது தான் இந்த விஷயம் வெளியே வந்தது.

முதலில் அசெம்பிளிங் நடந்த இடத்தில் நிறைய இந்தியாவை சார்ந்தவர்கள் மார்ச் ஃபாஸ்ட்டுக்கு போகும் வீரர்களிடம் கை குலுக்கு வாழ்த்தி அனுப்புவது வழக்கம்

அப்படி செய்யும் போது இவரும் வழியனுப்ப வந்திருப்பதாக நினைத்தார்கள்.

ஆனால் அந்த பெண் இவர்களுடன் சிரித்து ஏதேதோ பேசிக் கொண்டே கடைசி வரை அணி வகுப்பிலும் வலம் வந்து பின்னரும் எல்லா வீரர்களிடம் கை குலுக்கி பின்பு நழுவி விட்டார்.

No comments: