Wednesday 18 April 2012

கூகுளையே செதைச்சுப்புட்டாங்கப்பா... !


... நீங்க கூகுல் சேர்ச் பாக்ஸ் லே --- GOOGLE GRAVITY னு டைப் பண்ணுங்க. வழக்கம் போலே லட்சம் லிங்க் காட்டும். அதுலே முதல் லே வர்ற லிங்கை க்ளிக் பண்ணுங்க...

( mrdoob .com னு ஒன்னு வருதா..? )
...அதுலே ஒரு செர்ச் பாக்ஸ் வருது இல்லே..? ஏதோ ஒன்னு டைப் பண்ணுங்க..
என்ன காட்டுது...?

எப்பூடி...?


Saturday 14 April 2012

3 – அன்று ஆச்ச‌ரியம் இன்று அய்யோ பாவம்


ரிலீஸாவதற்கு முன் பரபரப்பாகப் பேசப்பட்டது போல ‌ரிலீஸுக்குப் பின்பும் செய்திகளில் அடிபடுகிறது ஐஸ்வர்யா தனுஷின் 3. முன்பு பரபரப்பாக இப்போது ப‌ரிதாபமாக.

சென்னையில் 3 படத்துக்கு ர‌ஜினி படம் அளவுக்கு ஓபனிங் இருந்தது. முதல் மூன்று தினங்களில் 1.3 கோடியை வசூல் செய்து அனைவரையும் ஆச்ச‌ரியப்படுத்தியது. ஆனால் இதன் சென்ற வார இறுதி வசூல் 12.8 லட்சங்கள் மட்டுமே. சென்னையின் நிலைமை இப்படியென்றால் பிற இடங்களின் நிலையை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக தெலுங்கில் 3 படத்தை நட்டிகுமார் 4.5 கோடிக்கு வாங்கினார். ஆனால் படம் ஒரு கோடியை வசூலித்தால் பெ‌ரிய விஷயம் என்கிறார்கள். படம் பெரும் நஷ்டம் என்பதை நட்டிகுமாரே ஒப்புக் கொண்டிருக்கிறார். கேரளாவிலும் படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் இந்தியில் படத்தை வெளியிடவா என்ற தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

Wednesday 11 April 2012

Facebook இல் மீண்டும் Spam கவனம்…!!



சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.
Dailymotion

yahoo

மேலே உள்ளது நண்பர்கள் பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் பேஸ்புக்கில் வந்த செய்தி. இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்,

எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் இது போல காட்டும். அதாவது உங்கள் பேஸ்புக் கணக்கை அந்த அப்ளிகேசன் அணுகுவதற்கு அனுமதி கேட்கும். மேலுள்ள படத்தை நன்றாக பாருங்கள்.

This app may post on your behalf, including videos you watched, films you watched and more.

அதாவது நீங்கள் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்கள் கணக்கில் இருந்து செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும். இதன் மூலம் Spamசெய்திகளை அனுப்புவதற்கு நீங்களே அனுமதி அளிக்கிறீர்கள்.

அவ்வாறு க்ளிக் செய்த பின் அது அந்த தளத்திற்கு சென்றுவிடும். அங்கு நீங்கள் எதை க்ளிக் செய்கிறீர்களோ அவையும், சில சமயம் க்ளிக் செய்யாதவைகளும் நீங்கள் பார்த்ததாக உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிடும்.
இதனை தவிர்ப்பது எப்படி?
இவற்றிலிருந்து தவிர்க்க வேண்டுமெனில் இது போன்ற சுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். தவறுதலாக க்ளிக் செய்தாலும் Dailymotion, Yahoo போன்ற Third-Party Applications-களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
ஏற்கனவே நீங்கள் க்ளிக் செய்து அனுமதி கொடுத்துவிட்டீர்கள் என்றால் அந்த அப்ளிகேசன்களை உங்கள் கணக்கிலிருந்து நீக்கிவிடுங்கள்.
அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?
உங்கள் பேஸ்புக் கணக்கில் Account settings என்பதை க்ளிக் செய்து, இடது புறம் உள்ள Apps என்பதை க்ளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்திவரும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும்.

மேலே உள்ள Dailymotion, Yahoo என்பதற்கு பக்கத்தில் உள்ள X குறியீடை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள். இது போன்ற அனைத்து அப்ளிகேசன்களையும் நீக்கிவிடுவது சிறந்தது.

என் பரிந்துரை:
எக்காரணம் கொண்டும் Third Party Application-களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
சிறு வேண்டுகோள்:
இது பேஸ்புக்கில் தற்போது பரவிவரும் முக்கிய பிரச்சனை என்பதால் தாங்கள் இந்த தகவலை பேஸ்புக்கில் பகிர்ந்தால் பலர் இதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.

Monday 9 April 2012

தாய்ப்பால் கொடுங்க! தாய்க்கும் அது நல்லது!!


பிறந்த குழந்தைகளுக்கு அத்தியாவசியமான உணவு தாய்ப்பால். தாய்மையும், தாய்பாலும் பெண்களுக்கு இறைவன் அளித்த சிறப்பான வரம். அதனால்தான் வெறுமனே இருந்த மார்பில் குழந்தை பிறந்த நொடியில தாய்ப்பால் சுரக்கிறது. இதனை உடனடியாக குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நீர்மத் தங்கம்

குழந்தை பிறந்த உடன் சுரக்கும் தாய்ப்பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை நீர்மத்தங்கம் என்று அழைக்கின்றனர். இதில் உயர்தர ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. எனவேதான் பிறந்த குழந்தைக்கு உடனே இந்த தாய்ப்பாலை கொடுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகிவிடும். இது தவிர குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, ஒவ்வாமை, டைப் 2 நீரிழிவு, உடல்பருமன் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது.

ஆரோக்கியம் அவசியம்

குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்புக்காக அந்தப் பெண் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.

சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாய் எடுத்து வந்தால்தான், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும். தாய்ப்பால் சுரப்பும் குறைந்துவிடும்.

தாய்ப்பால் சுரப்பு

தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை. சில பெண்களுக்கு மார்பகம் பெரியதாக இருக்கும். ஆனால், தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறியதாக இருக்கும். அதேநேரம், தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்துதான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடும்.

சில தாய்மார்களுக்கு குழந்தை பெற்றெடுத்த சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பு வெகுவாக குறைந்து விடும். இதற்கு காரணம் அவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளாததும், ஹார்மோன் சுரப்பு குறைபாடும்தான்.

தாய்க்கும் நன்மைகள்

தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. குழந்தையை நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் ஆக்ஸிடோசின் சுரக்கிறது. இதனால் தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கிறது.

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு டைப் 2 நீரிழிவு, மனஅழுத்தம், மார்பகப்புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுவதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள். எனவே ஆறுமாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், சேய்க்கும் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Sunday 8 April 2012

கடல் நீர் எப்படி உப்பானது ?


கடலில் இருந்து பெறப்படும் உப்பு நீரைக் கொண்டு உப்பு தயாரிக்கப்படுவதை அனைவரும் அறிவோம். ஆனால் கடல் நீர் எப்படி உப்பானது என்பது பலருக்குத் தெரியாது.

உலகம் தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. உலகின் ஆரம்பம் முதல் 0.75 பில்லியன் ஆண்டுகள் வரை பூமி குளிராமல் சூடாக இருந்தது. தண்ணீர் அனைத்தும் ஆவி ரூபமாக பூமியைச் சுற்றி மேகமாக இருந்தது.

பின்னர் ஒரு மழை..... பல நூற்றாண்டுகளாய் கடும் மழை. மழை விழுவதும், பூமியில் பட்டு ஆவியாவதும், குளிர்வதும், கொட்டுவதுமாக.. கடல் தோன்றியது.

கடல் முழுவதும் நல்ல தண்ணீர்.

அடுத்த 3.25 பில்லியன் ஆண்டுகளாக கடல் ஆவியாகி மேகமாக நிலத்தில் பெய்து, ஆறாகப் பெருகி கடலில் கலந்து, இதே போல் பல கோடி முறை திரும்பத் திரும்ப நடந்ததால் கடல் நீர் நிலத்தின் அரிமானத்தால் உவர்ப்புடையதாக மாறிவிட்டது. இது நான் சொன்னதல்ல. ஆய்வாளர்களின் கணிப்பு.

Saturday 7 April 2012

தாமதமாகும் புதிய ‘நானோ சிம்’ தொழில் நுட்பம்!


ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் பயன்படுத்தப்படும் சிம்கார்டு தொழில் நுட்பத்தில் புதுமை வரவிருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான சிம்கார்டு தொழில் நுட்பத்தை முடிவெடுப்பதில் ஹார்ட்வேர் தயாரிப்பாளர்களிடையே இன்னும் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான புதிய சிம்கார்டு தொழில் நுட்பம் நானோ சிம்மாக இருக்கும் என்று தெரிகிறது.

ஐரோப்பியன் டெலிகம்யூனிகேசனஸ் ஸ்டேன்டர்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (இடிஎஸ்ஐ) கூறும்போது இந்த புதிய நானோ சிம் தொழில் நுட்பத்திற்கான வாக்கெடுப்பு வரும் மே மாதம் வரை இருக்காது என்று கூறுகிறது.

இந்த வாக்கெடுப்பு தள்ளிப்போனதற்கான காரணம் பல நிறுவனங்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதாகும்.

ஏனெனில் ஆப்பிள், மோட்டோரோலா மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்கள் தங்களுக்கு என்ற சொந்தமான தொழில் நுட்பங்களை வைத்திருக்கின்றனர். அதனால் இந்த புதிய நானோ சிம் தொழில் நுட்பத்தை அந்நிறுவனங்கள் ஏற்க சில காலம் ஆகும் என்று தெரிகிறது.

வழக்கமாக சிம் கார்டுகள் வாடிக்கையாளர்களின் போன் எண்களை சேகரித்து வைத்திருக்கும். ஆனால் இந்த புதிய நானோ சிம் தொழில் நுட்பம் மேலும் பல தகவல்களை சேமித்து வைக்கும்.

இந்த புதிய நானோ சிம் கார்டு தொழில் நுட்பம் வர சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

2000 ஊழியர்களை பணிநிறுத்தம் செய்தது யாகூ!(yahoo)


2000 ஊழியர்களை தங்களது நிறுவனத்திலிருந்து பணிநிறுத்துவதாக பிரபல இணைய நிறுவனமான யாகூ உறுதிப்படுத்தியுள்ளது. தங்களது நிறுவனத்தை சிறியதாக, சுறுசுறுப்பானதாக,அதிக இலாபமுடையதாக, பாவனையாளர்கள் விரும்பும் விதத்தினுடையதாக, புத்தாக்க சிந்தனையுள்ளதாக மாற்றுவதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த இணையத்தளமான யாகூ நிறுவனம், மின்னஞ்சல் சேவை, தேடுதல் சேவை, செய்திச் சேவை, குழுமக் கலந்துரையாடல் சேவை, விளம்பர சேவை, வீடியோ பகிரல், விளையாட்டுக்கள், சமூக இணையத்தள சேவைகள் உட்பட ஏராளமான சேவைகளை வழங்குகிறது.

1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாகூ நிறுவனம், ஓர் ஆண்டுக்கு 700 மில்லியன் மக்களை தனது தளத்திற்கு வருகைதரச் செய்கிறது.

யாகூ நிறுவனத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த யாகூ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் தொம்ஸன், தங்களுடைய நிறுவனத்தின் இலக்கான பாவனையாளர்களையும் விளம்பரதாரர்களையும் முன்னிறுத்துதல் என்பதை நிறைவேற்றுவதற்காக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார். தங்களுடைய இலக்கை நிறைவேற்ற ஆக்ரோஷமான முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், எனினும் தங்களுடைய நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களுக்கு வழங்கிய சேவைகளை தாங்கள் மிகவும் நன்றியுடன் நினைவுகூருவதாகவும் தெரிவித்தார்.

2000 ஊழியர்களை பணிநிறுத்துவதன் மூலம் யாகூ நிறுவனம் 375 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வருடந்தோறும் சேமிக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு இந்த 2000 ஊழியர் பணிநீக்கம் இறுதியானதாக அமைய வாய்ப்பில்லை எனவும், இது தொடர வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

5 வயது சிறுமிக்கு திருமணம்: இங்கிலாந்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு!!



இங்கிலாந்தில் கடந்தாண்டில் மட்டும் இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்த 400 சிறுமிகளுக்கு கட்டாயத் திருமணம் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் கீழ் குழந்தை திருமண தடுப்பு பிரிவு செயல்படுகிறது.

இந்த பிரிவு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளை சேர்ந்த 400 சிறுமிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அந்த சிறுமிகளில் 5 வயது குழந்தையும் உண்டு. கடந்த 2008ம் ஆண்டில் 1,618 குழந்தை திருமண தடுப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 2010ம் ஆண்டில் இது 1,735 ஆக அதிகரித்தது. பின்னர் 2011ம் ஆண்டில் 1,500 ஆக குறைந்துள்ளது.

பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளி விடுமுறையின் போது குழந்தைகளை சொந்த நாட்டுக்கு அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தாலும் முழு அளவில் தடுக்க முடியவில்லை. எனவே குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோருக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர பரிசீலித்து வருகிறோம் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உங்களது காதல் உண்மை காதலா?? ஒரு முறை பரிச்சித்து பாருங்கள்!!

உங்களதும் உங்களின் விருப்பத்திற்குரியவரது பெயர்களை இங்கே இருக்கும் கட்டங்களில் இட்டால் இருவருக்குமிடையில் எவ்வளவு பொருத்தம் என்பதை அறிந்துகொள்ளலாம். முயற்சியுங்கள்!!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!


கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 8 வரை உயர்த்த அரசு எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

இந்தியாவில் பெட்ரோலின் விலையை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்வால் கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கச்சா எண்ணை பேரலுக்கு 109 அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் தற்போது 134 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துவிட்டது.

இந்த விலை உயர்வால் எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனவாம். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோலால் லிட்டருக்கு ரூ.7.20 வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த இழப்பை சரி செய்ய பெட்ரோலின் விலையை உயர்த்துவது என்று எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி லிட்டருக்கு ரூ. 8 வரை உயர்த்தப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.

தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்கட்ட கூட்டம் நடந்து வருவதால் இந்த விலை உயர்வை அமல்படுத்த முடியாது. அதனால் இம்மாதம் 30-ந்தேதி கூட்டத்தொடர் முடிவடைந்தபின் விலை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

மத்திய அரசின் வசம் இருந்த பெட்ரோலிய விலை நிர்ணயம், எண்ணை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சர்வதேச அளவில் பெட்ரோலிய விலை உயரும் போதும், இறங்கும் போதும் அதற்கேற்றாற் போல் இந்தியாவிலும் பெட்ரோலிய விலையில் ஏற்ற இறக்கங்கள் செய்யப்பபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் டீஸல் விலை நிர்ணயம் இன்னும் அரசு வசமே உள்ளது. இப்போது டீஸல் விலையும் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அஜித்தின் ”பில்லா 2” பற்றிய கெட்ட செய்தி…!


”பில்லா 2” படத்தில் அஜித்தின் அதிரடியான நடிப்புகள் மற்றும் படம் பற்றிய ருசிகரமான நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் ஒரு கெட்ட செய்தியும் வந்துள்ளது.

அது என்னவென்றால் ”பில்லா 2” ரிலீஸ் தேதி ஜூன் மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மே 25 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். எனவே படத்தின் வரவை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிபார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

தற்போது இப்படி ஒரு செய்தி வந்து ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல். ஜூன் மாதம் வரை காத்திருக்கவும் செய்திருக்கிறது. ஆனால் படத்தின் பாடல்கள் இந்த மாதத்தில் எந்த தேதியிலும் வெளியாகும் என தெரிகிறது.

Tuesday 3 April 2012

ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும்


1) தொலைநோக்கியை (Telescope)
கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அவர் எத்தனையாம்
ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தார்?
Galileo Galilei, Italy, 1593.



2) ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர்
எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு ஆகாய விமானத்தை கண்டுபிடித்தார்?
Wright Brothers, America, 1903.



3) துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தார்?
Macmillan, Scotland, Year ?.



4) மின்பிறப்பாக்கியை (Dynamo) கண்டுபிடித்தவர்
யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர்
எத்தனையாம் ஆண்டு மின்பிறப்பாக்கி
யை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1831.



5) டைனமைற்றை (Dynamite) கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு டைனமைற்றை கண்டுபிடித்தார்?
Alfred Nobel, Sweden, 1867.



6) ஒக்சிஜனை (Oxygen) கண்டுபிடித்தவர் யார்? அவர்
எத்தனையாம் ஆண்டு ஒக்சிஜனை கண்டுபிடித்தார்?
Joseph Priestley on 01 – August – 1774.



7) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர்
யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர்
எத்தனையாம்
ஆண்டு தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தார்?
John Logie Baird, England, 1926. (Born in Scotland)


8) தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்? அவர்
எத்தனையாம்
ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்தார்?
Alexander Graham Bell, 1876.



9) தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார்?
Henry Mill, England, 1714. 10) பென்சிலினை (Penicillin) கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு பென்சிலினை கண்டுபிடித்தார்?
Allen Fleming, Scotland, 1928.



11) மின்மாற்றியை (Transformer ) கண்டுபிடித்தவர்
யார்? அவர் எத்தனையாம்
ஆண்டு மின்மாற்றியை கண்டுபிடித்தார்?
Michael Faraday, 1831 — William Stanley, 1885
(Modern Transformer)



12) மின்கலத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு மின்கலத்தை கண்டுபிடித்தார்?
Anastasio Volta , Italy, 1807.



13) குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர்
யார்? அவர் எத்தனையாம் ஆண்டு குருதிச்
சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார்?
William Harvey, 1628.



14) புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார்?
Isaac Newton, England, 1687.



15) Transistor இனை கண்டுபிடித்தவர் யார்? அவர்
எத்தனையாம் ஆண்டு Transistor
இனை கண்டுபிடித்தார்?
மூன்று பௌதீகவியலாளர்களின்
கூட்டு முயற்சியால் Transistor
கண்டுபிடிக்கப்பட்டது அவர்களின் பெயர் விபரம்:- John Bardeen, Walter Brattain, William Shockley,
1947.



16) கணனியை (Automatic Calculator)
கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அவர் எத்தனையாம்
ஆண்டு கணனியை கண்டுபிடித்தார்?
Wilhelm Schickard , German, 1623.



17) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண்
யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர்
எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற்
சிகரத்தை சென்றடைந்தார்?
Junko Tabei, Japan, 16 – May – 1975.



18) இரசாயணவியலில் நோபல் பரிசு பெற்ற
தம்பதிகள் யார்? அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
அவர்கள் எத்தனையாம் ஆண்டு நோபல்
பரிசினை பெற்றார்கள்?
Frederic Joliot & Irene Curie, France, 1935.



19) வட துருவத்தை சென்றடைந்த முதல் மனிதன் யார்?
அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எந்த ஆண்டில்
வட துருவத்தை சென்றடைந்தார்?
Robert Edwin Peary, American, 06 – April – 1909.



20) துணைக்கோள்களற்ற (Moons)
இரண்டு கோள்கள் எவை?
Mercury, Venus.



21) அணு குண்டை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு அணு குண்டை கண்டுபிடித்தார்?
Robert Oppenheimer, America, 1945.



22) மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்
விளக்கை கண்டுபிடித்தார்?
Thomas Alva Edison, America, 1879.

23) ஒலிபெருக்கியை கண்டுபிடித்தவர் யார்? அவர்
எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு ஒலிபெருக்கியை கண்டுபிடித்தார்?
Horace Short, Britain, 1900.



24) நுணுக்குக்காட்டியை (Microscope)
கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அவர் எத்தனையாம் ஆண்டு நுணுக்குக்காட்ட
ியை கண்டுபிடித்தார்?
Janssen, Netherlands, 1590.



25) பக்ரீரியாவை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு பக்ரீரியாவை கண்டுபிடித்தார்?
Leeuwenhock, Netherlands, 1683.



26) வாயு அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு வாயு அடுப்பை கண்டுபிடித்தார்?
Robert Wilhelm Bunsen, Germany, 1855.



27) இரும்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு இரும்பை கண்டுபிடித்தார்?
Henry Bessemer, England, 1856.



28) Benzene இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம்
ஆண்டு Benzene இனை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1825.



29) X – ray இனை கண்டுபிடித்தவர் யார்?அவர் எந்த
நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு X -
ray இனை கண்டுபிடித்தார்?
Wilhelm Conrad Rontgen, German, 1895.



30) X – ray இனை கண்டுபிடித்தவரு
க்கு எத்தனையாம் ஆண்டு நோபல்
பரிசு வழங்கப்பட்டது?
1901 ஆம் ஆண்டு (First Nobel Prize for Physics In)