Saturday 14 April 2012

3 – அன்று ஆச்ச‌ரியம் இன்று அய்யோ பாவம்


ரிலீஸாவதற்கு முன் பரபரப்பாகப் பேசப்பட்டது போல ‌ரிலீஸுக்குப் பின்பும் செய்திகளில் அடிபடுகிறது ஐஸ்வர்யா தனுஷின் 3. முன்பு பரபரப்பாக இப்போது ப‌ரிதாபமாக.

சென்னையில் 3 படத்துக்கு ர‌ஜினி படம் அளவுக்கு ஓபனிங் இருந்தது. முதல் மூன்று தினங்களில் 1.3 கோடியை வசூல் செய்து அனைவரையும் ஆச்ச‌ரியப்படுத்தியது. ஆனால் இதன் சென்ற வார இறுதி வசூல் 12.8 லட்சங்கள் மட்டுமே. சென்னையின் நிலைமை இப்படியென்றால் பிற இடங்களின் நிலையை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.

முக்கியமாக தெலுங்கில் 3 படத்தை நட்டிகுமார் 4.5 கோடிக்கு வாங்கினார். ஆனால் படம் ஒரு கோடியை வசூலித்தால் பெ‌ரிய விஷயம் என்கிறார்கள். படம் பெரும் நஷ்டம் என்பதை நட்டிகுமாரே ஒப்புக் கொண்டிருக்கிறார். கேரளாவிலும் படத்தின் வசூல் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் இந்தியில் படத்தை வெளியிடவா என்ற தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

No comments: