Sunday 8 April 2012

கடல் நீர் எப்படி உப்பானது ?


கடலில் இருந்து பெறப்படும் உப்பு நீரைக் கொண்டு உப்பு தயாரிக்கப்படுவதை அனைவரும் அறிவோம். ஆனால் கடல் நீர் எப்படி உப்பானது என்பது பலருக்குத் தெரியாது.

உலகம் தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. உலகின் ஆரம்பம் முதல் 0.75 பில்லியன் ஆண்டுகள் வரை பூமி குளிராமல் சூடாக இருந்தது. தண்ணீர் அனைத்தும் ஆவி ரூபமாக பூமியைச் சுற்றி மேகமாக இருந்தது.

பின்னர் ஒரு மழை..... பல நூற்றாண்டுகளாய் கடும் மழை. மழை விழுவதும், பூமியில் பட்டு ஆவியாவதும், குளிர்வதும், கொட்டுவதுமாக.. கடல் தோன்றியது.

கடல் முழுவதும் நல்ல தண்ணீர்.

அடுத்த 3.25 பில்லியன் ஆண்டுகளாக கடல் ஆவியாகி மேகமாக நிலத்தில் பெய்து, ஆறாகப் பெருகி கடலில் கலந்து, இதே போல் பல கோடி முறை திரும்பத் திரும்ப நடந்ததால் கடல் நீர் நிலத்தின் அரிமானத்தால் உவர்ப்புடையதாக மாறிவிட்டது. இது நான் சொன்னதல்ல. ஆய்வாளர்களின் கணிப்பு.

No comments: