Wednesday 21 March 2012

இந்தத் தோல்வியை ஒரு பொருட்டாக கருதத் தேவையில்லை-விஜயகாந்த்




சென்னை: இடைத் தேர்தல் என்பது தமிழகத்தில் ஒரு சடங்காக மாறி விட்டது. கடந்த திமுக ஆட்சியின்போது 11 முறை இடைத் தேர்தல்களில் அதிமுக தோல்வியுற்றது. எனவே சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தேமுதிக 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டையும் பறி கொடுத்தது. இதுகுறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பண பலத்தைப் பிரயோகித்து இந்தத் தேர்தலை சந்தித்தது ஆளும் கட்சியான அதிமுக.

இந்தத் தேர்தலே உழைப்பிற்கும், பண பலத்திற்கும் இடையிலான போட்டியாகவே இருந்தது. அதில் பண பலம் வென்றுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது 11 இடைத் தேர்தல்கள் நடந்தன. அதில் ஒன்றில் கூட அதிமுக வென்றதில்லை.

பொதுத் தேர்தலில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், இடைத் தேர்தல்களில் பிரதிபலிப்பதில்லை. மேலும் தமிழகத்தி்ல இடைத் தேர்தல் என்பது ஒரு சடங்காக மாறி விட்டது. எனவே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக உழைப்போம், தொடர்ந்து போராடுவோம் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

No comments: