Wednesday 29 February 2012

சுனாமியில் பலியானவர்கள் பேயாக உலா வருகின்றனர்: அச்சத்தில் ஜப்பான் மக்கள்!!


ஜப்பானில் கடந்தாண்டு மார்ச் மாதம் 11ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்ததில் 19 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

மேலும் புகுஷிமா அணு உலை வெடித்ததில் கதிர்வீச்சு பரவி பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.தற்போது சிறிது சிறிதாக அணு உலை சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்கள் பேயாக மாறி பொதுமக்களை பயமுறுத்தி வருவதாக இஷினோமகி நகரில் கடும் பீதி நிலவுகிறது.

இறந்தவர்களின் சத்தங்கள் மற்றும் அலறல்கள் கேட்பதாக பலரும் கூறி வருவதால், மக்கள் சாலையில் நடமாட அஞ்சுகின்றனர்.

இதனிடையே நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியான நபர்களின் ஆன்மா சாந்தியடைய பரிகார பூஜைகளை செய்வதில் மதகுருமார்கள் ஈடுபட்டுள்ளனர்.

நல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள்

திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய் படுத்த ஆரம்பித்து விடுகிறது. யார் மூலமாகவோ கிடைக்கிற பூடக அறிவுரைகளும், தகவல்களும் மனத்தைக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றன.
இதனாலே யே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது. அந்த இரவு அமைதியாகக் கழிய இதோ சில ஆலோசனைகள்…. முதலிரவு என்றாலே அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை. கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை.

முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்கள் உண்டு. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவருக்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கும். அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உடல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது. இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல.

முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதியருக்கு ஹனிமூன் டிஸிசஸ் வரும் வாய்ப்புகள் அதிகமாம். இதில் பல வியாதிகள் அடக்கமாம். பிறப்புறுப்பையும், மூத்திரக்காயையும் வெகுவாகப் பாதிக்கும் இந்த வியாதிகள் அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்பதியருக்குக் கட்டாயம் வருமாம். முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளைத் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடலும், மனமும் லேசாக இருந்தாலே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கானவர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும். அந்த டென்ஷனுடன் உறவு கொள்ளும் போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம்.

முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவது நல்லது. வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும். அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். உறவை பலப்படுத்தும். எச்சிற்பட்டுக் கொள்ளாமல் முத்தமிட்டுக் கொள்ளாமல், உடல் நெருங்காமல் பக்கத்தில் படுத்தாலும் தனித் தனியே படுத்து சீக்கிரமே தூங்கி விடுவது நல்லது. இதுவே நல்ல துவக்கம். முதலில் இருவருக் குமிடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் பிறகான தாம்பத்திய உறவின் துவக்கமே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படை.

பரீட்சை எழுத இருக்கும் மாணவர நீங்கள் ? கட்டயாம் இதை படியுகள் ?


அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

பரீட்சை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள். நாமும் நமது பங்கிற்கு எப்படி படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த இருக்கிறோம். அரசு சலுகை சரிவர கிடைக்காமல் தங்கள் பிள்ளைகளை பல சிரமங்களுக்கிடையில் படிக்க வைத்துக்கொண்டு இருக்கும் பெற்றோர்களுக்காகவும் , மாணவ, மாணவியருக்காகவும் இந்த கட்டுரையை எழுதுகிறோம். கவனமாக படியுங்கள்.



பெற்றோர்களின் கவனத்திற்கு:

தங்கள் பிள்ளைகளின் பரீட்சை நேரம் நெருங்கி விட்டது. இதுவரை எப்படி படித்தார்கள் என்பது முக்கியமல்ல வரும் இறுதித்தேர்வில் எப்படி படிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இன்றுவரை அவர்களின் படிப்பில் தாங்கள் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். இந்த இறுதித் தேர்வுக்காக நீங்கள் உங்களின் நேரங்களை அவசியம் ஒதுக்கி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

முதலில் தங்களின் வரவேற்பு அறையில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி நிகழ்ச்சிகளை தாங்களும் பார்க்காதீர்கள். பிள்ளைகளையும் பார்க்க விடாதீர்கள். முடிந்தளவு தொலைக்காட்சியை நல்ல நிகழ்ச்சிகளுக்கும், செய்திகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தி, ஷைத்தானின் மொத்த உருவமான சினிமா, பாடல்கள், மெகா சீரியல்கள் இவை அனைத்திற்கும் விடை கொடுத்து விடுங்கள். இம்மையிலும் மறுமையிலும் எந்த நன்மையையும் பெற்றுத்தராதவற்றின் பக்கம் நெருங்கலாமா? உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் மேலும் வல்ல அல்லாஹ் கூறுவதைப்பாருங்கள்:

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(அல்குர்ஆன் : 103: 1,2,3).



பரீட்சைக்கு நாம் எப்படி தயாராவது:

திட்டமிடும் காரியத்தைத்தான் ஒழுங்காக நாம் செய்ய முடியும். வெளியூருக்கு போகுமுன் டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். ஊரில் செல்லும் இடங்களை முன் கூட்டியே திட்டமிட்டு விடுகிறோம். அந்த ஊரில் போய் திட்டமிடுவதில்லை. அதுபோல் ஒவ்வொரு தேர்வின் பாடத்திற்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி ஒரு அட்டவணை தயார் செய்து அதன்படி உங்கள் பாடங்களை பல பகுதிகளாக பிரித்து படித்து முடித்து விடுங்கள். மாணவ மாணவியர்களே! நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது. ஒரு கேள்விக்கான பதிலை படித்து முடித்தவுடன் படித்ததை உடனடியாக ஒரு நோட்டில் எழுதி பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கு பரீட்சையில் கைகொடுத்து உங்களுக்கு வெற்றியை கிடைக்கச் செய்யும். இதை தவிர வெறும் மனப்பாடம் எந்த வகையிலும் பயன் அளிக்காது. படித்ததை இரவு நேரங்களில் எழுதிப் பாருங்கள். எழுதிப்பார்ப்பதில் கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள்.

நாட்கள் இருக்கிறது படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். காலத்தை வீண் விரயம் செய்யாமல் படிக்க ஆரம்பித்து விடுங்கள். சென்று போன நாட்கள் திரும்பி வராது என்பதை நினைவில் கொண்டு உங்களின் ஒரு வருட படிப்பிற்காக நீங்கள் பயன்படுத்திய மணித்துளிகள் எத்தனை அந்த மணித்துளிகளில் சில மணி நேரங்கள்தான் உங்களின் தேர்வுக்கான நேரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.



படிக்கும் நேரங்கள்:

பெற்றோர்களே பிள்ளைகளை விடிய விடிய படி படி என்று தொல்லை கொடுக்காதீர்கள். கண் விழித்து படிப்பதால் உடலில் தொந்தரவுகளும், மனச்சோர்வும்தான் ஏற்படும். அப்படி படித்தாலும் மனதில் அதிக நாட்களுக்கு படித்தது ஞாபகம் இருக்காது. அதனால் இரவு 10 அல்லது 10:30க்குள் படித்து முடித்து விட்டு உறங்கச் சொல்லுங்கள். விடியற்காலை 3:30 அல்லது 4 மணிக்கு எழுந்த வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு 2 ரக்காஅத் நபில் தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு படிக்கச் சொல்லுங்கள். இந்த நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். படிப்பதும் நன்றாக மனதில் பதியும். அதோடு ஃபஜ்ர் நேரம் வந்தவுடன் தொழுது விட்டு தொடர்ந்து படிக்கச் சொல்லுங்கள். காலையில் ஒரு மணி நேரம் படிப்பது மற்ற நேரத்தில் 3 மணி நேரம் படிப்பதற்கு சமம் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் படிக்கலாம் என்பதை அவரவர் வசதிக்கு தக்கவாறு நிர்ணயம் செய்து கொள்ளலாம். பள்ளி நாட்களில் 7 முதல் 8 மணி நேரமும் விடுமுறை நாட்களில் 10 முதல் 13 மணி நேரம் என்று தனித்தனியாக நேரங்களை பிரித்து அந்த நேரங்களில் படிக்கலாம்.



உடல் ஆரோக்கியம்:

உடலுக்கு தூக்கம் அவசியமான ஒன்று. இரவில் 5 மணி நேரம் தூங்குங்கள். மதியம் அரை மணி நேரம் குட்டித்தூக்கம் போடுங்கள். இது தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். அதனால் எண்ணெய் பொருட்களை மிக குறைவாக சாப்பிடுங்கள். ஹோட்டல் உணவுகள், ஃபாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்த்து விடுங்கள். தூங்காமல் படிப்பதற்கு அடிக்கடி டீ, காபி அதிகம் குடிப்பீர்கள், இதனால் சுறுசுறுப்பு ஏற்படும். அதே நேரத்தில் உடலில் பித்தத்தை அதிகப்படுத்தி விடும். குறைவாக டீ, காபி குடிப்பது நல்லது. இதைவிட சூடான பால் குடிப்பது சிறந்தது. பகல் நேரங்களில் மோர், இளநீர், பழச்சாறுகள் அவரவர் வசதிக்கேற்றவாறு குடிக்கலாம். நொறுக்குத்தீனி எதுவும் சாப்பிடாதீர்கள். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை மிதமான அளவில் நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள்.



நினைவாற்றல் பெருக:

மனிதர்களின் மூளை சிறியது இது முன்னூறு கோடி நரம்பு செல்களை கொண்டது. நமது மூளையில் உள்ள 'கார்டெக்ஸ்' என்ற பகுதி நாம் கேட்கும் ஒலி, பார்க்கும் ஒளி, நுகரும் மணம், நாவின் சுவை இவைகளை ஆய்வு செய்த பின் நம்மை உணரச் செய்கிறது. தேவையானால் பதிவு செய்தும் வைத்துக்கொள்கிறது. இப்படி பார்க்கும், கேட்கும், உணரும், அறியும் விஷயங்களை ஒன்று சேர்த்து மூளையில் பதிவு செய்வதுதான் 'நினைவாற்றல்' என்பது. வகுப்பில் ஆசிரியர் பாடங்கள் நடத்தும்போது அதிக கவனம் செலுத்தி நம் மனதில் தேவையற்ற கவனச்சிதறல்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொண்டு உன்னிப்பாக கவனித்து மனதில் உள்வாங்கிக்கொண்டால் இன்ஷாஅல்லாஹ் பலன் அளிக்கும். இப்படி பாடங்களை மனதில் பதிய வைத்து மீண்டும், மீண்டும் பாடங்களை படிக்கும்பொழுது நம் மனதில் மறந்து போகாத அளவுக்கு பதிந்து விடும்.

நம்முடைய கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மாணவ மாணவியர்களே! நீங்கள் படிக்கும் பாடங்களை ஆர்வத்துடன் கவனித்து நீங்கள் என்னவாக வர வேண்டும் என்பதை டாக்டர், இன்ஜீனியர், ஆசிரியர், வக்கீல் இப்படி எந்த துறையை விரும்புகிறீர்களோ அதை அடிக்கடி மனதில் நினைத்து மிக ஆர்வத்துடன் படிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக பருக வேண்டும். நீர்தான் உலகில் உயிர் வாழ முக்கியம். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நீர் அதிகம் தேவை. உடல் குளிர்ச்சியாய் இருக்கும்பொழுது கவனம் மிக சுலபமாகி விடும்.



நினைவாற்றலுக்கு கை கொடுக்கும் உணவு

மூளை நரம்பில் நியூரான் என்ற செல் உள்ளது. இந்த செல்தான் கேட்பது, பார்ப்பது, உணர்வது போன்றவற்றை ஒருங்கிணைக்கும். இதற்கு பி1 வைட்டமின் தேவை. இதில் உள்ள தியாமின் என்ற புரதம் நினைவாற்றல் பெருக உதவி செய்கிறது. தியாமின் குறைபாடு ஏற்பட்டால் நினைவாற்றலில் குறை ஏற்படும். அதனால் தியாமின் அதிகமுள்ள கோதுமை, கடலை, தானியங்கள், பச்சைபட்டாணி, சோயாபீன்ஸ் போன்றவைகளை அதிகம் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்களையும் அதிக அளவு சாப்பிட வேண்டும்.(எங்க உம்மாவே காய்கறி சாப்பிடமாட்டார்கள் எனக்கு எப்படி இதையெல்லாம் தருவார்கள் என்று நினைக்க வேண்டாம் - உம்மாவிடம் அவசியத்தை எடுத்து கூறுங்கள்). உணவுதான் இயற்கை மருந்து முடிந்தளவு அவரவர் வசதிக்கேற்றவாறு தியாமின் உணவுகளை சாப்பிட முயற்சித்தால் மூளையின் சக்தி குறையாது. நினைவாற்றலும் பெருகும். தங்களால் முடிந்தவரை பின்பற்றுங்கள்.
(வைத்தியனிடம் கொடுக்கும் பணத்தை வாணிபனிடம் (அரிசி,மளிகைபொருட்கள், காய்கறி, பழங்கள் விற்பவர்)கொண்டு போய் கொடுத்து ஆரோக்கியமாக இருங்கள் என்பது பழமொழி).

மேலும் : ‘‘ ரப்பி ஜித்னி இல்மா ’’ ‘‘இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! ’’ (அல்குர்ஆன் : 20:114) என்று அடிக்கடி பிரார்த்தனை செய்து வாருங்கள்.



மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்:

மாணவ மாணவியரின் மனது ஷைத்தானின் ஆதிக்கமான தொலைக்காட்சியின் மீது ஒன்றி விட்டது. இந்த தொலைக்காட்சிகள் சமூக நலனில் அக்கரை கொண்டு செயல்படவில்லை. பணத்தை குறிக்கோளாக கொண்டு தன்னை, தன் குடும்பத்தை வளப்படுத்திக்கொள்ள மட்டுமே என்று செயல்படுகிறது. அதனால் இதன் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுங்கள். கடந்த காலங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரிடம் தங்களின் அதிக மதிப்பெண்ணுக்கும் பரீட்சையில் வெற்றி பெறவும் உதவியாக இருந்த காரியங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்டபொழுது படித்ததை அனைத்தையும் எழுதிப்பார்ப்பது எங்கள் கட்டாய பழக்கம் என்றார்கள். மேலும் 9ஆம் வகுப்பு முதல் எங்கள் வீட்டில் கேபிள் டிவியை கட் செய்து விட்டோம். பரீட்சைக்கு 4 மாதங்களுக்கு முன்பே கேபிள் டிவியை கட் செய்து விட்டோம் என்று சொன்னார்கள். வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத காட்சிகளைத்தான் இந்த தொலைக்காட்சிகள் காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிறந்த முறையில் படித்து முன்னேற்றம் அடைவதே உங்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அதோடு தாங்களும் தன்னிறைவு பெற்று இந்த சமுதாயத்தில் வீழ்ந்து கிடப்பவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று அடிக்கடி மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். கல்வி பலவிதங்களிலும் எட்டாத சமுதாயத்தில் இருக்கிறோம். நாம் சிறப்பான முறையில் படித்து வெளி வந்து மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு இருங்கள். எக்காரணத்தை கொண்டும் தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுத்து விடாதீர்கள். எனக்கு மறதி இருக்கிறதே என்று கலங்கி நின்று விடாதீர்கள். தாழ்வு மனப்பான்மையோடு இருந்தால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டாது. என்னால் முடியும் எனக்கு இறைவன் உதவி செய்வான் என்ற தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். இறைவனின் உதவி கிடைக்க தினமும் பிரார்த்தனை செய்து வாருங்கள். வல்ல அல்லாஹ் உதவி செய்வான். மேலும் படிப்பின் மேல் தாங்கள் செலுத்தும் ஆர்வமும், கவனமும் கைகொடுக்கும்.



பரீட்சைக்கு செல்வதற்கு முன்:

பரீட்சைக்கு முன் தினம் அதிக நேரம் விழித்திருக்க வேண்டாம். விடியல் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு அன்றைய தினத்தின் பரீட்சைக்கான பாடத்தை மீண்டும் படியுங்கள். மிதமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு முட்ட சாப்பிட்டால் தூக்கம் வரும். வீட்டை விட்டு கிளம்பும் முன் 2 ரக்காஅத் தொழுது பிரார்த்தனை செய்து விட்டு கிளம்புங்கள். சுத்தமான உடை அணிந்து கொள்ளுங்கள். பள்ளிக்கு அரைமணி நேரம் முன்னதாக சென்று விடுங்கள். இது தேவையற்ற பதற்றத்தை உண்டாக்காது. பேனா, பென்சில், ரப்பர் எவையெல்லாம் தேவையோ அவைகளை ஒவ்வொன்றிலும் இரண்டு வைத்திருப்பது நல்லது. மேலும் பரீட்சை ஹால் நுழைவுச் சீட்டு, பரீட்சைக்கான அனைத்து பொருட்களையும், தங்களின் ட்ரெஸ்ஸையும் முதல் நாள் இரவே தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரீட்சைக்கு புறப்படும் நேரத்தில் பொருள்களை காணவில்லை என்று தேடிக் கொண்டு இருந்தால் டென்ஷனாகி வீட்டில் பெற்றோரிடமும் திட்டு வாங்கி பரீட்சையில் கவனக்குறைவை ஏற்படுத்தும்.



பரீட்சை ஹாலில்:

பரீட்சை பேப்பர் வாங்கியவுடன் முதலில் தேர்வின் எண், பெயர், பாடம், நாள் இவைகளை தெளிவாக பேப்பரில் எழுதி விடுங்கள். பிறகு கேள்வித்தாளை வாங்கியவுடன் பதற்றபடாமல் விடை தெரிந்த கேள்விகளை டிக் செய்து கொள்ளுங்கள். பிஸ்மில்லாஹ் சொல்லி முதலில் தெரிந்த கேள்விகளுக்கு கேள்வித்தாளில் உள்ள எண்களை கவனமாக பேப்பரில் எழுதி கையெழுத்து அடித்தல், திருத்தல் இல்லாமல் அழகான முறையில் பதிலை எழுதுங்கள். பிறகு தெரியாத கேள்விகளை யோசித்து எழுதுங்கள். எல்லாம் எழுதி முடித்த பிறகு அண்டர்லைன் இட வேண்டிய இடங்களில் அண்டர்லைன் போடுங்கள். பெல் அடிக்கும் வரை ஹாலில் இருந்து மீண்டும் மீண்டும் கேள்வித்தாளையும் எழுதிய பேப்பரையும் படித்து பாருங்கள். விட்ட கேள்விகளுக்கும் பதில் ஞாபகம் வரும். தவறாக எழுதி இருந்தால் திருத்திக் கொள்ளலாம். பெல் அடிப்பதற்கு முன் பேப்பரை கொடுத்து விடாதீர்கள். பரீட்சை முடிந்து வெளியே வந்தவுடன் விடுபட்ட போன கேள்விகளுக்கு பதில் ஞாபகம் வந்து எழுதாமல் போய் விட்டோமே என்ற கவலை தங்களுக்கு வரலாம். அப்படி வந்தால் கவலையை தூர எறிந்து விட்டு வல்ல அல்லாஹ் போதுமானவன் என்ற நினைப்புடன் அடுத்த பரீட்சைக்கு தங்களை தயார்படுத்துங்கள்.



பெற்றோர்களின் உதவி:

தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு வீட்டின் சூழ்நிலைகளை அமைதியாக்கிக்கொடுங்கள். தாங்கள் செய்ய வேண்டிய உதவிகள் அதிக அளவு அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டும். மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையை வல்ல அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதனால் வல்ல அல்லாஹ் மேல் பாரத்தை போட்டு விட்டு நாம் படித்தோமா? நம் பிள்ளை படிப்பதற்கு என்று சும்மா இருந்து விடாமல் உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டுத்தான் வல்ல அல்லாஹ் மேல் பொறுப்பு சாட்ட வேண்டும்.



எழுத்துப்பயிற்சி:

மாணவ, மாணவியர்களே! நீங்கள் எழுத்துப்பயிற்சியில்தான் கவனக்குறைவாக இருக்கிறீர்கள். அதனால் மீண்டும் உங்களை வலியுறுத்துகிறேன். நாம் மனப்பாடம் செய்வதை தேர்வில் ஒப்பிக்க போவதில்லை. பேப்பரில்தான் எழுதுகிறோம். ஆகையால் படிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் அதிகமாக எழுதி பார்ப்பதற்கு கொடுக்க வேண்டும். அதனால் படித்ததை எழுதிப் பார்ப்பதுதான் சிறந்தது. எழுதுவது வீண் வேலை என்று இருந்து விடாதீர்கள். எழுத அவசியம் முயற்சி செய்யுங்கள். (ஆரம்பத்தில் சிரமமாகத்தோன்றும், பிறகு சுலபமாகிவிடும்). நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள். எழுதியதை வீட்டில் உள்ளவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கொடுத்து திருத்தச்சொல்லுங்கள். யாரும் கிடைக்காத நேரத்தில் தாங்களே திருத்திக்கொள்ளுங்கள். மாணவ, மாணவியரே வல்ல அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் படியுங்கள். தாங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 58:11)

ஜழ்சகல்லாஹ் கைர் சகோ அலாவுதீன்

Tuesday 28 February 2012

கண்களுக்கு ஒளிதரும் பீட்ரூட் கீரைகள்!(Beet Leaves)


அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் காய்கறியான பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் இலைகளான பீட்ரூட் கீரைகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகும். இது மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது.

பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்கின்ற அளவிற்கு பீட்ரூட் கீரையை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஐரோப்பியர்கள் இக்கீரையை விரும்பி தங்கள் உணவை சேர்த்துக் கொள்கின்றனர். இது ஐரோப்பா கண்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட போதிலும் சமீபத்தில்தான் உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது.

ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும், கீரைக்காகவே பீட்ரூட்டைப் பயிரிடுகின்றனர்.. சைபீரியாவில் கால்நடைகளின் உணவிற்காகவே முற்காலத்தில் இந்த கீரையும் கிழங்கும் பயிரிடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. கோழிகள் இக்கீரையை விரும்பி உண்கின்றன. எனவே இது ஒரு கோழித் தீவனமாகவும் பயன்படுகின்றன

சுவையான கீரை

பீட்ரூட்டுக்கு சுகந்தா என்ற என்ற வேறு பெயரும் உண்டு. இந்தியாவில் கூட கிழங்குக்காக மட்டுமின்றி கீரைக்காகவும் இதனை பயிரிடுகின்றனர். இக்கீரையை பொரியலாகவோ, துவரம் பரும்புடன் சேர்த்து கூட்டாகவோ செய்யலாம். பாசிப்பயறு, தட்டைப்பயிறு, முதலியவற்றுடன் சேர்த்துக் கூட்டுக்கறிகள் ஆக்கலாம். இப்பயிர்களுடன் சேர்க்கப்பட்ட கீரை மிகவும் சுவையாக இருக்கும். சாலட் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.

கரோட்டின் உயிர்சத்து

பீட்ரூட் கீரைகளில் நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகள் அதிகம் உள்ளது. இந்நரம்புகளில் கரோட்டின் எண்ணும் உயிர்சத்து அதிகம் உள்ளது. இந்த கரோட்டின் வைட்டமின் ஏ சத்தை அதிகம் சேர்த்து வைக்கின்றன. எனவே இதனை வைட்டமின் ஏயின் சேமிப்புப் பட்டரை என்றே கூறலாம். பச்சையாக உண்பதால் வைட்டமின் ஏ நேரடியாக நம் உடலில் சேருகிறது. இதனை கத்தியைக் கொண்டு பறிக்கக் கூடாது. கையால் திருகி பறிக்கவேண்டும்.

புரதம், தாது உப்புக்கள்

பீட்ரூட் கீரை ஒரு சிறந்த உணவாக அமைவதோடு புரதம் மற்றும் தாது உப்புகள் உயிர்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். தையாமின், ரிபோஃப்ளோவின், நிக்கோடின் அமிலம், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளது.

பீட்ரூட் கீரை சிறுநீரைப் பெருக்கி அதனை மிதமாக வெளியேற்றுகிறது. மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. மலச்சிக்கலைத் தவிர்க்கும் இக்கீரை கல்லீரலுக்கு வலிவு கொடுக்கிறது.

கண்நோய்கள் குணமாகும்

உடலில் ஏற்படும் எரிச்சலுக்கு இந்த இலையில் சாற்றினை தடவ எரிச்சல் தணியும். வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் நோய்களை இக்கீரை போக்குகிறது. கண்ணுக்கு தெளிவையும், பார்வையும், கூர்மையும் ஏற்படுகிறது. உடற்சூட்டால் ஏற்படும் கண் வீக்கம், அழற்சி முதலியவற்றுக்கு இக்கீரையின் சாற்றை கண் இமைகளில் பூச குணம் கிடைக்கும். கீரையை உணவாக உட்கொண்டாலும், கண் நோய்கள் குணமடையும் என்றும் உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Monday 27 February 2012

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்


வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நோன்பு இருந்தால் ஆயுட்காலம் அதிகமாகுமாம்

தொடர்ச்சியான காலப்பகுதிகளில் நோன்புபிடிப்பதால் மூளையைச்சிதைக்கின்றநோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறமுடியும் என அமெரிக்க விஞ்ஞானிகளின்ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
ஒரு கிழமையில் ஒன்று அல்லது இரண்டு நாட்களில்குறித்த காலப்பகுதியில் உணவு உட்கொள்ளாமல் இருப்பதால் அல்ஸ்ஹைமர்ஸ், பார்கின்ஸோன்ஸ் போன்ற நோய்களிலிருந்தும்,ஏனைய கொடிய நோய்களிலிருந்தும் பாதுகாப்புப் பெறமுடியும் என அமெரிக்காவின் போல்டிமோர் பிரதேசத்தில் அமைந்துள்ள மூப்படைதலுக்கான தேசிய நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
"கலோரி உட்கொள்ளும் அளவைக் குறைத்துக்கொள்வது மனிதமூளைக்கு அனுகூலமாக அமையமுடியும்,எனினும் உணவில் கட்டுப்பாட்டைக்
கொண்டுவருவது இதற்கான சிறந்தமுறையாக அமையாது. மாறாக,அளவான உணவை உட்கொண்டு நோன்புபிடிப்பதேஇதற்கான சிறந்தமுறையாகும்" என நரம்புவிஞ்ஞான ஆய்வுகூட நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் மாக்ஸ்மக்ஸன் வான்கூவர் நகரில்
நடைபெற்ற உயர் விஞ்ஞானத்துக்கான அமெரிக்க சங்கத்தின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மரக்கறிகள் கொஞ்சம்சேர்க்கப்பட்ட சிறிதளவான உணவையும்,தேநீரையும் உட்கொள்வதன் மூலம் நாளந்த உணவின் கலோரிப் பெறுமானத்தை 500க்கு குறைக்க முடியமாவதுடன், ஒரு கிழமையில் ஒன்று அல்லது இரண்டுநாட்களில் இப்படியாகச் செய்வதன் மூலம் சிறந்தவொரு பெறுபேறு கிடைக்கப்பெறும் என அமெரிக்காவின் போல்டிமோர் பிரதேசத்தில் அமைந்துள்ள மூப்படைதலுக்கானதேசிய நிறுவனத்தின் ஆய்வில் கிடைக்கப்பெற்ற தெளிவானமுடிவு சான்றுபகர்கின்றது.

சில வேளைகளில் குறைந்த கலோரியைக் கொண்டுள்ள உணவுகள் வாழ்க்கைக்கு நீண்ட ஆயுளைத்தரவள்ளது என விஞ்ஞானிகளால் அறியப்பெற்றுள்ளது. எலிகளுக்கு குறைந்த கலோரியுள்ள உணவுகளை வழங்கி செய்யப்பட்ட ஆய்வில் அவற்றின் ஆயுட்காலம் 40சதவீதத்தால் உயர்வடைந்து காணப்பட்டது.இவ்வாறே மனிதன் போன்ற விலங்கினங்களுக்கும் இது பொருந்தும் என அறியப்பட்டுள்ளது.


நோன்புபிடிப்பதனால் மனிதனுக்கு பலவிதமான சுகாதார அனுகூலங்கள் கிடைக்கின்றது என முன்னைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.வாரத்தில் ஒன்று அல்லது இரண்டுநாட்களில் நோன்புபிடிப்பதால் மனிதனுக்கு சில கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்புப்பெறமுடிவதுடன், அது அவனது ஆயுளையும் அதிகரிக்கவல்லது என இப்புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.

இதேவேளை புனிதஇஸ்லாம் மார்க்கத்தில்,வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைநாட்களில் சுன்னத் நோன்புகள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

Friday 24 February 2012

sardar jokes


Interviewer:
what is your birth date?
Sardar: 13th October
Which year?
Sardar: Oye bewakoof _ _ _ EVERY YEAR

Manager asked sardar at an interview.
Can you spell a word that has more than 100 letters in it?
Sardar replyed: -P-O-S-T-B-O-X.

After returning back from a foreign trip, sardar asked his wife,
Do I look like a foreigner?
Wife: No! Why?
Sardar: In London a lady asked me Are you a foreigner?

One tourist from U.S.A. asked Sardar:
Any great man born in this village???
Sardar: no sir, only small Babies!!!

Lecturer: write a note on Gandhi Jayanthi
So Sardar writes, "Gandi was a great man, but I don't know who is Jayanthi.

When sardar was traveling with his wife in an auto, the driver
adjusted the mirror. Sardar shouted, "You are trying to see my
wife? Sit behind. I will drive.

Interviewer: just imagine youare on the 3rd floor, it caught fire
and how will you escape?
Sardar: its simple. I will stop my imagination!!!

Sardar: My mobile bill how much?
Call centre girl: sir, just dial 123 to know current bill status
Sardar: Stupid, not CURRENT BILL my MOBILE BILL.

Sardar: I think that girl is deaf..
Friend: How do u know?
Sardar: I told I Love her, but she said her chappals are new

Friend: I got a brand new Ford IKON for my wife!
Sardar: Wow!!! That's an unbelievable exchange offer!!!

Teacher: Which is the oldest animal in world?
Sardar: ZEBRA
Teacher: How?
Sardar: Bcoz it is Black & White

Sardar attending an interview in Software Company.
Manager: Do U know MS Office?
Sardar: If U give me the address I will go there sir.

Sardar in airplane going 2 Bombay .. While its landing he shouted: " Bombay ... Bombay "
Air hostess said: "B silent."
Sardar: "Ok.. Ombay. Ombay"

Teacher: "What is common between JESUS, KRISHNA , RAM, GANDHI and BUDHA?"
Sardar: "All are born on government holidays...!!!

Sardar: Miss, Do u called 2 my mobile?
Teacher: Me? No, why?
Sardar: Yesterday I saw in my mobile- 1 Miss Call".
(Had never thought of it)

Sir: What is difference between Orange and Apple?
Sardar: Color of Orange is orange, but color of Apple is not APPLE
Sardar starts shouting in a store......
Where is my free gift with this oil?

Shopkeeper : There is nothing free with this
Sardar: It is written CHOLESTEROL FREE.

"ஈ" என்னும் நோய் பரப்பி...


இன்று நகரத்திலிருந்து கிராமம் வரை எங்கும் பறந்து, திரிந்து வாழும் ஒரு வகை பூச்சி இனம்தான் ஈக்கள். பொதுவாக ஈக்கள் என்றாலே எல்லோருக்கும் அருவெறுப்பு தான் தோன்றும். ஏனெனில், அவை மலம் மற்றும் குப்பைகளிலும் உட்கார்ந்து ... பிறகு, நம் உடலிலும், உண்ணும் உணவுகளின் மீதும் உட்காருவது தான். ஈக்களை முழுமையாக ஒழிக்க, சிறந்த வழி - சுகாதாரமே. அரசும் பல வழிகளில் முயற்சி செய்தும் ஈக்களின் எண்ணிக்கையோ குறைந்த பாடில்லை.

ஈக்களால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் பரவுவதற்கு ஈக்களே முக்கிய காரணியாக இருக்கின்றன.

பொதுவாகவே ஈக்கள் அழுகிப்போன காய்கறிகள் மீதும் மீன் கடைகள், கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, மல ஜல கழிப்பறை, சுகாதாரம் குறைந்த குப்பைத்தொட்டிகள் போன்ற இடங்களில் மிகவசதியாக வாழ்கின்றன.

பெண் ஈ, ஒரு தடவைக்கு 80 முதல் 100 முட்டை கள் வரை இடுமாம்.
ஈக்கள், கொசுக்களைப் போல் நம் இரத்தத்தில் கலக்கக்கூடிய கொடிய நோய்க்கிருமிகளை சுமந்துக்கொண்டு அலைவதில்லை என்றாலும், உணவுப் பொருட்களின் மீது இலட்சக்கணக்கான பாக்டீரியாக்களை இறக்குமதி செய்யும் பணியை செவ்வனே செய்கின்றன என்பதே உண்மை!



ஈக்களின் ஆறு கால்களிலும் அதன் உடலிலும் பல்லாயிரக்கணக்கான உரோமங்கள் உள்ளன. இதனுடைய ஒவ்வொரு காலிலும் வட்டமான, பிசின் போன்ற, ஒரு அமைப்பு உள்ளது. இந்த பிசின், ஒருவித பசை பொருளாகும். கழிவுகளின் மீது, ஈக்கள், உட்காரும்போது கழிவுகளிலுள்ள பாக்டீரியாக்கள் அந்த பிசின் போன்ற அமைப்பில் ஒட்டிக் கொள்கின்றன. ஈ, மீண்டும் நம் மீதோ அல்லது உணவின் மீதோ உட்காரும்போது அந்த பாக்டீரியாக்கள் வெகுஎளிதில் உணவில் கலந்து நம் உடலுக்குள் செல்கின்றன.

இதன் விளைவால் வயிற்றுப்போக்கு, குடற்புழு, உட ல் நமைச்சல், தோல் எரிச்சல், வயிற்றுப்புண், டைபா ய்டு, தொற்றுக் கிருமிக் காய்ச்சல் என எண்ணிலடங்கா நோய்கள் நம்மை தாக்குகின்றன. 'நாங்கள் கொசுக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல' என்பதுபோல் ஈக்களும் தன்பங்கிற்கு ஏராளமான நோய்களைப் பரப்புகின்றன.

தற்போது தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும், கடற்கரை யோரத்தில் வாழும் மக்களும்தான் ஈக்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட இடங்களில் கோழிப்பண்ணைகள் அதிகம் இருப்பதால், அங்கு ஈக்களின் பெருக்கமும் தாக்கமும் மிக அதிகமாக உள்ளது. மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மீன்கள் விற்கப்படும் இடங்களிலும் ஈக்களின் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது.

இப்படி பல வகைகளில் தொல்லைகொடுக்கும் ஈக்களிடமிருந்து நம்மையும், நாம் வாழும் சுற்றுசூழலையும் பாதுகாக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது:

-- அழுகிய பொருட்களை உடனே அப்புறப்படுத்தி அப்பகுதியை தூய்மையாக வைத்திருத்தல்.

-- அசைவ பொருள் கிடங்குகளின் கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு, கிடங்குகளில் தூய்மையை பேணுதல்.

-- வீடுகளைச் சுற்றியுள்ள குப்பைகளை தினமும் அகற்றுதல்.

-- உணவுப் பொருட்கள் உட்பட எந்த பொருளையும் திறந்து வைப்பதை முற்றிலும் தவிர்த்தல்.

-- வீடுகளில் குப்பைகளை சேர்த்துவைக்காமல் அடிக்கடி அப்புறப்படுத்தி விடுதல்.

--கோழிப்பண்ணை போன்ற இடங்களில் முழு சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது. (இதனால் ஈக்களை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தி, அழிக்கலாம்).

-- ஈக்களின் தொந்திரவு அதிகமாக இருந்தால், மஞ்சள் தூளை நீரில் கரைத்து அவைகள் அதிகம் உள்ள இடங்களில் தெளித்தால், ஈக்கள் உள்ளே வருவதை தவிர்ப்பதோடு, தொந்திரவிலிருந்தும் சற்று நிம்மதி பெறலாம்.

Thursday 23 February 2012

தமிழகம் முழுவதும், 1,900 இடங்களில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள்!!!!!!

தமிழகம் முழுவதும், 1,900 இடங்களில்
சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள்!!!!!!

அமைக்க, தமிழக எரிசக்தித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையங்கள் மூலம்,
20 ஆயிரம் தெரு விளக்குகளுக்கு மின்சாரம் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது!!!!

சூரிய சக்தி மின் நிலையம்: தமிழகத்தில்
மின் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில்,
சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு அலுவலக வளாகங்கள், ஓய்வு இல்லங்கள் உள்ளிட்ட பகுதிகளில், முதற்கட்டமாக இவை அமைக்கப்படுகின்றன. மேலும், தமிழகம் முழுவதும் நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் சூரிய மின்சக்தி தெரு விளக்குகள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.



500 வாட் திறன்: வடக்கு, தெற்கு என இரண்டு மண்டலங்களாக, 32 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 1,900 இடங்களில் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில், ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகத்திற்கும் உட்பட்ட இடத்தை தேர்ந்தெடுத்து, 500 வாட் திறனில் மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில், தனியார் மூலம், ஆர்.எம்.யூ., எனப்படும், சிறிய வகை நவீன டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட மின் கட்டமைப்பு அமைத்து, இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் மூலம், சூரிய சக்தி தெரு விளக்குகள் இயங்க வைக்கப்படும்.



20 ஆயிரம் தெரு விளக்குகள்: இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்தம் 20 ஆயிரம் இடங்களில், சூரிய சக்தி தெரு விளக்குகள் அமைக்கப்படும். ஒவ்வொரு நிலையத்திற்கும், 10 விளக்குகளுக்கான மின் இணைப்புகள் வீதம், 1,900 நிலையங்களுக்கு, 19 ஆயிரம் தெரு விளக்குகள் சூரிய சக்தி பெறும். தெரு விளக்கு கம்பங்கள் ஒவ்வொன்றிலும், 20 வாட் திறன் கொண்ட, அதிக ஒளி தரும் பல்புகள் பொருத்தப்படும். இதே போல், 1,000 இடங்களில் தனியாக, சூரிய சக்தி உற்பத்தி செய்யும் தகடுகள் பதித்த, தெரு விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த தகடுகள் தானாகவே சூரிய சக்தியை உற்பத்தி செய்து, அதன் மூலம் இரவில் விளக்குகளை ஒளிர வைக்கும். சூரிய சக்தி கிடைக்காத நேரங்களில், தெரு விளக்குகள் எரிவதில் பிரச்னை ஏற்படாமல் இருக்க, அனைத்து சூரிய சக்தி தெரு விளக்குகளுக்கும், தமிழக மின் வாரியத்தின் மின் இணைப்பும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



பராமரிப்பு: சூரிய சக்தி மின் நிலையப் பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தும் பணிகள், ஐந்தாண்டுகளுக்கு தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம், தமிழகத்தில் மின் வெட்டால், தெரு விளக்குகள் எரியாத பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்

Tuesday 21 February 2012

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரதை குறைத்து சொல்கிறது சீனா

எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் எவ்வளவு என்பதில் சீனா - நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


சீனா - நேபாள எல்லையில் உள்ளது எவரெஸ்ட் சிகரம். இதுதான் உலகிலேயே மிக உயரமானது. இந்தியாவை சேர்ந்த பி.எல்.குலாடி என்ற சர்வேயர் தலைமையிலான குழுவினர், கடந்த 1954ம் ஆண்டு எவரெஸ்டின் உயரத்தை கணக்கிட்டனர். அதற்கு முன்னதாகவே 1852ம் ஆண்டு ராதாநாத் சிக்தர் என்பவர் அதன் உயரத்தை அளந்துள்ளார். அதன்பின் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் மலைகளின் உயரத்தை அளக்கும் போது, அதன் மீது படர்ந்திருக்கும் பனியை கணக்கில் கொள்ள கூடாது. வெறும் மலையின் உயரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே 8844.43 மீட்டர் உயரம்தான் எவரெஸ்ட் உள்ளது. இந்த உயரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நேபாளத்தை சீனா நிர்பந்தப்படுத்தி உள்ளது.

அதன்படி எவரெஸ்ட் சிகரம் 3.57 மீட்டர் உயரம் குறைத்து கணக்கிடப்படும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சீனா - நேபாள எல்லை பிரச்னைகள் தொடர்பாக இந்த மாதம் பேச்சு நடப்பதாக இருந்தது. அதில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன என்ற சர்ச்சை உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட இருந்தது. ஆனால் நேபாளம் கேட்டுக் கொண்டதால் இருதரப்பு பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.

கடந்த 75ம் ஆண்டு நேபாள - சீனா எல்லை வரைபடம் குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் எவரெஸ்டின் உயரம் 8,848.13 மீட்டர் என்று அப்போது சீனா ஒப்புக் கொண்டது. இப்போது சிகரத்தின் உயரத்தில் சர்ச்சை எழுப்பி உள்ளது. இந்த பிரச்னையை மேலும் பெரிதாக்கும் வகையில் அமெரிக்க தேசிய புவியியல் சொசைட்டி ஒரு கணக்கை கடந்த 99ம் ஆண்டு வெளியிட்டது.

இந்த சொசைட்டி கூறுகையில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளந்த போது, 8,850 மீட்டர் உள்ளது. இந்திய சர்வேயர்கள் டிரிக்னோ மெட்ரிக் முறையில் அளந்துள்ளனர். ஜி.பி.எஸ்.தான் நவீன முறை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday 17 February 2012

பதின் பருவக் காதல்: பெற்றோர்கள் ஆலோசனை அவசியம்!

அரும்பாக இருந்து மலரும் பருவம் பதின் பருவம். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதும் இந்த காலம்தான். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இலைமறை காயாக தெரியவேண்டிவை எல்லாம் நடுக்கூடத்திற்கே வந்து சேர்கிறது.

மொபைல்போன், இன்டர்நெட், என கைகளில் தவழும் மின்னணு பொருட்களினால் காதல் பற்றியும், பாலியல் ரீதியான உறவுகள் பற்றியும் பள்ளிக்குழந்தைகளும், பதின் பருவத்தினரும் அதிகம் அறிந்து கொள்ள நேரிடுகிறது. இதனால் பெரும்பாலோர் வாழ்க்கையே தடம் மாறிப்போகிறது. எனவே பதின் பருவ குழந்தைகளை உடைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கண்காணித்து தகுந்த ஆலோசனை வழங்கவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

தற்கொலைக்கும் துணிகின்றனர்

பதின் பருவத்தில் காதல் என்பது அனைவரையுமே தொட்டுப் பார்ப்பது இயற்கை. ஆனால் குழந்தைகள் காதலிக்கிறார்கள் என்றதும் ஊரையே கூட்டி எல்லாருக்கும் சொல்வது மட்டுமல்லாது அவர்கள் ஏதோ செய்யக்கூடாத தவறுகளை செய்வது போல பார்ப்பது அவர்களை தற்கொலை பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

மனநெருக்கடி அதிகரிப்பு, உறக்கம் இல்லாமல் தவித்தல், தனிமையில் உட்கார்ந்து சம்மந்தம் இல்லாமல் யோசித்தல், மன அழுத்தத்துக்கு உள்ளாகுதல் போன்றவை பதின் பருவத்தினரை தற்கொலை வரை கொண்டு செல்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனவே உங்கள் குழந்தைகளை பாதுகாக்க உளவியல் வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக

ஒதுக்குவது ஆபத்து

குழந்தைகள் காதலில் விழுந்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே அவர்களை குற்றவாளிகள் போல நடத்தவேண்டாம். இதுவே அவர்களை மன உளைச்சல்களுக்கு ஆளாக்கும். மாணவப் பரு வத்தில் வரும் காதலால் படிப்பு, எதிர்கால லட்சியத்தில் விழும் கேள்விக் குறிகளை பெற்றோர் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்காக அக்கம்பக்கத்து வீடுகள், உறவினர் வீடுகளுக்கு தகவல் அனுப்பி, குழந்தைகளின் காதல் ரக சியத்தை பரப்பிவிட வேண்டாம். இது அவர்களை எதிர்மறையாக சிந்தனை செய்ய வைத்து விடும்.

வெளியே அழைத்துச் செல்லுங்கள்

பதின் பருவத்தில் புத்திமதி எடுபடவில்லை எனில் சிறந்த மனோதத்துவ நிபுணரிடம் அவர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களின் நெருங்கிய நண்பர், பிடித்த உறவினர் மூலம் நல்ல விஷயங்களை எடுத்துக் கூறி புரிய வைக்கலாம். காதல் வாழ்க்கையால் எதிர்காலத்தை இழந்து தவிப்பவர்களைப் பற்றி எடுத்துக்கூறி நடைமுறை வாழ்க்கை என்ன என்பதை புரிய வைக்கலாம். அவர்கள் விரும்பும் இடங்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தலாம்.

ஆபத்தாகும் தனிமை

மகளோ-மகனோ காதலிப்பது தெரிந்துவிட்டால் கண்கொத்திப் பாம்பாக பின்தொடர்ந்து நிழல்போல் கண்காணிக்க கூடாது. எக்காரணம் கொண்டும் காதல் வயப்பட்ட தங்கள் குழந்தையை தனிமைப்படுத்தவோ, சந்தேக கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது. வழக்கமான அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் வீட்டில் தான் தனிமைப் படுத்தபடவில்லை என்கிற நம்பிக்கை அவர்களிடம் தெளிவை ஏற்படுத்திவிடும். அப்புறம் அவர்களாகவே யோசித்து நல்ல முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் எதிர்ப்பு அதிகமானால்தான் அதற்கான ஆர்வம் அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு தகுந்த ஆலோசனையும், அரவணைப்பும் இருந்தால் அவர்கள் தடம் மாறிப்போக வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

நானும் ஒரு ஹிந்துவே???

தற்காலத்தில் குறிப்பாக ஹிந்துமதவாத அரசியல் வாதிகளும், ஹிந்துத்துவ வளைதளங்களும், ஹிந்துக்கள் என்றால் அனைவரும் ஹிந்துக்கள்தான்,என்ற ஒரு வகைதொகையற்ற கணக்கை காட்டி,குறிப்பாக இஸ்லாம்,கிருத்தவம்,சீக்கியம் அல்லாத இந்தியாவில் உள்ள மக்கள் நார்திகர்கள் உள்பட அனைவரும் ஹிந்துக்கள் என்கிறார்கள். எனவே ஹிந்து என்றால் என்ன, அதில் சாரும் மக்கள் யாவர். என அதன் உண்மை நிலை அறியும் சிறு முயற்சியே இந்த பதிவு... யார் மனதையும் புண்படுத்தும் பதிவு அல்ல,மதநல்லிணக்கப் பதிவு...

தோற்றம்:

ஹிந்து எனும் வார்த்தை பழமை வாய்ந்த பாரசீக மொழியில் முதன் முதலில் அறியப்பட்டது.அது பின்னர் சமஸ்கிருததில் அந்த வார்த்தைக்கு உச்சரிப்பில் ஒப்பான சிந்து,எனும் வார்த்தையை கொண்டு,அப்பகுதி மக்களை குறிக்க ஹிந்து எனும் சொல்லாடலாக உருவானது.சிந்து என்பது இந்திய துணைக்கண்டத்தின் வட மேற்கெ பாயும் பழமை வாய்ந்த சிந்து நதியை குறிக்கிறது. பாரசீக இலக்கியங்களில் "ஹிந்து ஈ ஃபலக்" எனும் வார்த்தை காணப்பட்டது.

பின்னர் ஹிந்து எனும் வார்த்தை பயன் பாடு பிரபலமானது சிந்து நதியின் அருகில் வாழும் மக்களை குறிக்க அரேபியர்களால் பயன்படுத்தப்பட்ட "அல்ஹிந்த்" எனும் வார்த்தை கொண்டே. 13 ஆம் நூற்றாண்டில் தான் ஹிந்துஸ்தான் எனும் வார்த்தை இந்திய துணைக்கண்டத்தினை குறிக்க பிரபலமான மாற்று பெயராக பயன்படுத்த பட்டது.சிந்து சமவெளியை சூழ வாழ்ந்த மக்களின் நிலம் என பொருள்பட அது சொல்லப்பட்டது.

ஹிந்து எனும் வார்த்தை முக்கியமாக புவியியல் ரீதியாக ஒரு பகுதியில் வாழும் மக்களை குறிக்க சொல்லப்பட்டதே அன்றி,ஒரு மதம் சார்ந்த சொல்லாடலாக உருவாக்கப் படவில்லை. அது 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஐரோப்பிய வணிகர்கள் மற்றும் காலனியாதிக்க குழுக்களால் இந்தியாவில் வேத தர்மத்தை பின்பற்றும் மக்களை,குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தின் வடக்கு பகுதியில் வாழும் மக்களை குறிக்கும் சொல்லாக பயன்படுத்த துவங்கப்பட்டது,

இது மேலும் குறிப்பாக மத அடையாளம் கொண்டு,மக்களை அதாவது இஸ்லாம்,கிருத்தவம், ஜைனமதம்,புத்தமதம்,சீக்கிய மதம் என இவை சாராத மக்களை குறிக்க ஹிந்து எனும் வார்த்தை முதன்முதலாக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப் பட்டது.

ஹிந்து எனும் வார்த்தை சமஸ்கிருதமோ,அல்லது திராவிட மொழியிலோ,என எந்த இந்திய மொழியையும் சார்ந்து உருவானதல்ல.பாரதம் என்பதே,இந்திய மொழியில் இந்திய துணைக்கண்டத்தை குறிக்க சொல்லப் பட்ட வார்த்தை. 17ஆம் நூற்றாண்டு வரை இந்திய வரலாற்று நூல்களிலோ, அல்லது இந்திய குறிப்புகளிலோ,ஹிந்து எனும் வார்த்தை பயன்பாட்டில் இல்லை.ஹிந்து எனும் வார்த்தை பொதுப்படையாக இந்தியாவில் வாழும் மக்களை குறிக்கவே பயன்படுத்தப் பட்டாலும்,குறிப்பாக மதம் குலம் சார்ந்த வார்த்தையாக மாற்றப்பட்டது ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் தான். ஹிந்து எனும் சொல்லாடல் வேதத்தை பின்பற்றும் உயர்சாதி பிராமணர்களை குறிப்பாக உணர்த்த 1830களில் ஹிந்துயிஸம் என திரிபு பெற்றது.

ஆதாரம்:
1. The Blackwell Companion to Hinduism. Malden, MA: Blackwell Publishing Ltd. ISBN 1-4051-3251-5.
2. Radhakrishnan, S.;Moore, CA (1967). A Sourcebook in Indian Philosophy. Princeton. ISBN 0-691-01958-4.
3. Tattwananda, Swami (1984). Vaisnava Sects, Saiva Sects, Mother Worship. Calcutta: Firma KLM Private Ltd.. First revised edition.

சரி விஷயத்துக்கு வருவோம்.எனவே ஹிந்து எனும் வார்த்தைக்கான மூலத்தை தெளிவாக பார்க்கும் போது,ஹிந்து என்பது மதம் சார்ந்த சொல்லல்ல.அது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களை இனம் காண பயன்படுத்தப் பட்டது.அது தற்காலங்களில்,அதாவது ஆங்கிலேய ஆட்சியில், அவர்களின் பிரதான கொள்கையான பிரித்தாலும் சூழ்ச்சியின், தலைப்பிள்ளையே இந்த ஹிந்து எனும் மதம் சார்ந்த வார்த்தை. இந்தியர்களை பற்றி அறிந்து அவர்களை அடிமைபடுத்த,போதுமான காரணிகளை ஆராய ஆங்கிலேய குழு ஒன்று முதலில் இந்தியா வந்தது,பல ஆண்டுகள் இந்தியாவில் இருந்து பல பகுதிகளுக்கும் சென்று,மக்களின் வாழ்க்கை முறை,பழக்கவழக்கம்,கலாச்சாரம்,என பலவற்றையும் கண்டு,அவர்களது பல,பலகீனம் என்ன என்பதை ஒரு ஆய்வரிக்கையாக ஆட்சியாளர்களிடம் சமர்பித்தது.

அதில் இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள், பல மதம் சார்ந்த மக்கள், பல மொழி பேசும் மக்கள்,பல இன மக்கள் வாழ்ந்தாலும்,அவர்கள் அனைவரும் இனக்கமாக, ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். அவர்களது,மதம் சார்ந்த கொள்கைகள் எதுவாயினும், அவர்களிடையே, புரிந்துணர்வும், மரியாதையும், அன்பும், அவர்களை ஒற்றுமையாக வாழச்செய்கிறது. அந்த மத ஒற்றுமையை குலைத்து, அவர்களிடையே பிரிவினையை தூண்டுவதின் மூலம் அவர்களை பிரித்து, நாம் எளிதாக உள்ளே நுழையலாம், என அதில் முன்மொழியப்பட்டது... அதனடிப்படையிலேயே, ஹிந்து எனும் மத ரீதியான பிரிவு ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டது....

இது இந்திய சுதந்திர போராட்ட காலத்தில், ஆங்கிலேயர்கள் மேலும் இதற்கு எரியூட்டி, நமது போராட்டத்தை திசைதிருப்ப, மதக்கலவரங்களையும், மோதல்களையும் உண்டாக்கி, அவற்றில் குளிர்காய முனைந்தனர்.. ஆனால் அதையும் தாண்டி, சுதந்திரம் கிட்டியது... ஆனால் அவன் விட்டுச்சென்ற எச்சங்களாக இந்த மதக்கலவரங்கள் தொடர்ந்து, இந்திய திருநாட்டை கூறு போடுகிறது. எனினும் சுதந்திரத்திற்கு பின்னர் ஹிந்து என்பது வெகு காலமாக, அத்துனை சாரம் கொண்ட வார்த்தையாக இல்லை. அன்றைய காலகட்டத்தில் ஒரு சில மதவாதகுழுக்களே அதை தூக்கி பிடித்து நின்றனர். பின்னர் இந்தியாவின் அரசியல் பிரிவுகள் உண்டாகி ஆட்சி பீடத்தின் மீதான மோதல் துவங்கிய போதே... ஒவ்வொருவரும் தனது பலத்தை தான் சார்ந்துள்ள மதத்தை முன்னிருத்தி மக்களை கவரதுவங்கினர்...

அன்றைய காலகட்டம் கொடுமையான தீண்டாமை போன்ற மூட வழக்கங்களால் இருண்டு,ஒருவரை ஒருவர் இழிவு படுத்தி உயர்வு தாழ்வு கற்பித்து.வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருந்த காலகட்டம்.அக்காலத்தில் உயர்சாதியனராக கருதப்பட்ட, ஹிந்துக்கள், தாழ்சாதியில் உள்ளவர்களின் தோல் மேல் கைபோட மறுத்தனர். காலப்போக்கில தீண்டாமை எனும் கைவிலங்குகள் ஒவ்வொரு பகுதியிலும், வன்மையான ஆயுதம் கொண்டு தகர்த்தெரியப்பட,அவர்கள் தங்களின் உயர்சாதி தரத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கப் பட்டனர். அல்ல அல்ல, அனைத்து(பெருவாரியான) மக்களும் சமமான கண்ணியம் பெற்றனர்.இங்கு நான் குறிப்பிடும் வன்மையான ஆயுதம் தந்தை பெரியார்,டாக்டர் அம்பேத்கார் போன்றவர்களை....

ஆனால் பல்வேறுபட்ட சமயம் கொண்ட இங்கே. சைவ தெய்வங்களை வணங்குபவர்கள், அசைவ தெய்வங்களை நாடுவதில்லை. அவரவரது பழக்கம் அவரவருக்குறியதென, வாழ்ந்தார்கள்... வாழ்கிறார்கள். அவர்களுக்குள் சில விஷயங்களில் ஒற்றுமையிருப்பினும், ஒரு சைவ ஹிந்து, ஒரு முஸ்லிமிடம் எங்ஞனம் பழகுவானோ, அதே போல்தான் அசைவ ஹிந்துவிடம் பழகும் வழக்கம். இது இந்திய மக்களிடையெ, பிற ஹிந்துக்களுக்கும், பிற மதத்தவருக்கும் எந்த வேறுபாட்டையும், காட்டவில்லை. எனவே தன்னிச்சையாக சகோதரனாக பழகிய எந்த மனிதனையும் மதம் தாண்டி நோக்கும் கண்ணோட்டம் இந்தியர்களிடையே இருந்தது, இது, பிற்கால அரசியலுக்கு உகந்ததாக இல்லை. எனவே. முன்பு ஆங்கிலேயன் சொன்ன அதே, கொள்கையை கையில் எடுத்து, அதுவல்லாது, மத அடிப்படையிலான, கொள்கைகளை முன்னிருத்தி, அவர்களை, ஒன்றினைப்பதை விட பிற மதத்தவருக்கு எதிராக திருப்பி. அதன் மூலம் தங்களது அரசியல் காய்களை நகர்த்தினார்கள்.

அதனடிப்படையிலே, பல்லாயிரம் தெய்வ வழிபாட்டில் அவரவர் இஷ்ட தெய்வங்களை வணங்கி வந்தவர்களை நீ ஹிந்து, அவன் முஸ்லிம், அவன் கிருத்தவன், என இனம் காட்டி, அவன் காணாத வேதத்தையும்,தெய்வங்களையும் அவனுக்கு அறிமுகப்படுத்தி, இதுவும் உன் தெய்வம், இதை அவன் அவமதிக்கிறான், என பழித்து, மத கலவரங்களை உண்டாக்கி, அதன் வழியே ஆட்சிபீடத்தை சுவைத்தனர், எனவே "ஹிந்து" என்ற மதப்பொருள் கொண்ட வார்த்தை, ஆட்சி மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டு, பின்னர் அதே காரணங்களுக்காக இன்று மேலும் கூர் படுத்தப்பட்டது,கூர் படுத்தப்படுகிறது.என்பதே உண்மை...

ஹிந்து மதம் பற்றி விவேகானந்தர்:

விவேகானந்தர் கூற்றுப்படி, ஹிந்துமதம் என்பது சரியான பொருள்தரும் சொல்லே அல்ல. அது வேதங்களை அடிப்படையாக கொண்ட மதமாதலால். அது சனாதனதர்மம், அல்லது வேதாந்தம் என்றே சொல்வது சரியாகும்.மேலும் அதை பின்பற்றுபவனை ஹிந்து என்றல்ல வேதாந்தி என சொல்வதே சரியானது. ஹிந்து வேதங்கள், சில வழிமுறைகளையும் வாழ்க்கை முறைகளையும், வணக்க நெறிகளையும், கடவுள் கொள்கைகளையும் உள்ளடக்கியது. அதை பின்பற்றுபவனே அந்த மதத்தை சார்ந்தவனாவான்.

கம்யூனிச கொள்கையை பின்பற்றாதவன் கம்யூனிஸ்ட் அல்ல
இஸ்லாத்தை பின்பற்றதவன் இஸ்லாமியன் அல்ல.
ஏசுவை பின்பற்றதவன் கிருத்தவன் அல்ல.
புத்தரை பின்பற்றாதவன் புத்தமதத்தவன் அல்ல

எனவே வேதங்களை அடிப்படையாக கொண்ட ஒரு மதத்தில்

அந்த வேதத்தை பின்பற்றாதவனும், ஹிந்து,
அந்த வேதங்களை அறியாதவனும் ஹிந்து,
அந்த வேதத்தின் படி வாழாதவனும் ஹிந்து,
அந்த வேதம் கூரும் தெய்வங்களை வணங்காதவனும் ஹிந்து,
அந்த வேதத்தை பொய் எனசொல்பவனும் ஹிந்து,
அந்த வேதங்களை மறுப்பவனும் ஹிந்து,
அந்த வேதத்தை விமர்சிப்பவனும் ஹிந்து, என்பது முற்றிலும் உகந்ததாகவே இல்லை. அது அறிவுக்கு ஏற்ப்புடையாதாகவும் இல்லை. சுயநலவாதிகளின் நலத்திற்காக மக்களிடையே பின்னப்பட்ட சூழ்ச்சி வலையே...

எனவே"ஹிந்து" என்பது மதம் சாராத சொல்லேயாகும்.. அது, ஒரு நிலம் சார்ந்த மக்களை குறித்து சொல்லப்படும் சொல்லாகவே தன்னை முன்னிருத்துகிறது...

எனவே....

ஹிந்து வேதத்தை பின்பற்றாதவனுமான
ஹிந்து வேதங்களை அறியாதவனுமான,
ஹிந்து வேதத்தின் படி வாழாதவனுமான,
ஹிந்து வேதம் கூரும் தெய்வங்களை வணங்காதவனுமான,
ஹிந்து வேதங்களை மறுப்பவனுமான,

இந்திய மண்ணில் பிறந்த யாரும் ஹிந்துவே... மதம், இனம், மொழி, கலாச்சாரம், என அனைத்தையும் தாண்டி இந்திய குடிமக்கள் யாவரும் ஹிந்துக்களே...

மொழி, இனம், மதம் தாண்டி இன்னபிற நாட்டு மக்களான அரேபியாவில் பிறந்தவன், தன்னை அரேபியன் எனவும், ஆப்ரிக்காவில் பிறந்தவன் தன்னை ஆப்பிரிக்கன் எனவும், ஐரோப்பாவில் பிறந்தவன் தன்னை ஐரோப்பியன் எனவும் குறிப்பிடும் போது இந்தியாவில் பிறந்த மக்களை குறிக்கும் சொல்லான "ஹிந்து என்பது இந்தியர் அனைவரையும் குறிக்கும் சொல்லேயாகும்...."

"ஒரு நாத்திகனுக்கு, உள்ள கடவுள் மறுப்பை தவிர,

ஹிந்து வேதத்தை பின்பற்றாமை,
ஹிந்து வேதங்களை அறியாமை,
ஹிந்து வேதத்தின் படி வாழாமை,
ஹிந்து வேதம் கூரும் தெய்வங்களை வணங்காமை,

"என ஒரு நாத்திகனுக்கு பொருந்தகூடிய மெற்சொன்ன அம்சங்கள் ஹிந்து மதத்தை பொருத்தவரை எனக்கும் பொருந்துவதால், ஓரிரை கொள்கையை ஏற்று வாழும் ஒரு முஸ்லிமான நானும் ஒரு ஹிந்துவே"...

"புவியியல் அமைப்பின் படி இந்தியா மண்ணில் பிறந்து,இஸ்லாம் எனும் மார்க்கத்தை எனது வாழ்வியல் நெறியாக ஏற்று,அதன்படி வாழும் நானும் ஒரு ஹிந்துவே"....

உலக சமயங்களில் இயற்கை மதம் எது?

உலக சமயங்களில் இயற்கை மார்க்கம்

உலகில் தோன்றிய சமயங்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று தொன்மையானவை. (Ancient Religions) இவை யூத மதம், இந்து மதம்,

புத்த மதம், கிறித்தவ மதம், இஸ்லாமிய மதம் என உயரிய சமயங்களாக வகைப்படுத்துகிறார்கள். மற்றொன்று சிறு சமயங்கள். அவை இந்தியாவில் தோன்றிய ஜைனம், சீக்கியம், சீனாவின் டாவோயிசம், ஜப்பானின் ஷிண்டோயிஸம் போன்றவை.

இவையெல்லாம் மனிதனை அன்பு நெறியிலும் அறவழியிலும் பண்படுத்தி அமைதியான உயர்ந்த வாழ்வு வாழத் தோன்றியவை! ஆனால் இந்த மதங்கள் யாவும் அப்படிப்பட்ட உயர்ந்த நிலையை அடைந்திருக்கின்றதா?

ஒருபுறம் யூதர்கள் பாலஸ்தீனிய மண்ணை ஆக்கிரமித்து அங்கே தனக்கென ஒரு நாட்டை வல்லரசுகளின் பக்க பலத்தோடு பலவந்தமாக ஆக்கிரமித்து

செய்து வரும் அழிவுகளும் அக்கிரமங்களும் நெஞ்சை வெடிக்கச் செய்கின்றன. மறுபுறம் அமெரிக்க ஏகாதிபத்திய கிறித்தவ நாடு உலகிலுள்ள நாடுகளை யெல்லாம் ஆட்டிப்படைப்பதையும், குறிப்பாக முஸ்லிம் நாடுகளை அணுகுண்டு களால் அழித்துவருவதையும் அப்பாவி மக்களை கொன்றுகுவித்து வருவதையும் பார்க்க முடிகிறது.’அன்பே சிவம்’ என்னும் தத்துவத்தைக் கொண்ட இந்து மதத்தினர் இஸ்லாமியர்களை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பதையும் பாபரி மஸ்ஜிது போன்றஅவர்களின் வழிபாட்டுத்தலங்களை இடித்துத் தரை மட்டமாக் குவதையும் காணும்போது மதங்கள் மனிதனை அழிக்கும் ஆயுதங்களா? என எண்ணத்தோன்றுகிறது.

இன்று மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், இனத்தின் பெயரால் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் வெட்டிக் கொள்வதையும் ஒருசமுதாயம் மற்றொரு சமுதாயத்தை அழ்த்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இவர்கள் மிருகங்களைவிட படு மோசமாகச் சென்றுகொண்டிருக் கின்றனர். இதற்குகக் காரணம் என்ன?

1. தன்னைப்படைத்த இறைவன் யார்?
2. அவனது வல்லமையும் ஆற்றலும் என்ன?
3. மனித சமுதாயம் மேம்பட அவன் வழங்கிய வாழ்க்கை நெறி என்ன?
என்பதைப் புரிந்து கொள்ளாததேயாகும்.

அது மட்டுமல்ல ஆதி மனிதன் யார்? அவனது இயற்கை மார்க்கம் எது?
அது கூறும் அன்பு நெறி என்ன? அவன் வழிபட எழுந்த ஆதி ஆலயம் எது? என்பதையெல்லாம் ஒவ்வொருவரும் தெரிந்தாகவேண்டும். அப்போது தான் மனிதர்களுக்கிடையே சாந்தி, சமாதானம், அமைதி யாவும் நிலவும். ஆதி மார்க்கத்தில் அனைவரும் இணைந்து கைகோர்த்து நின்றால் தான் மனிதன் வெற்றி பெற முடியும்! இம்மை மறுமைப் பேறுகளைப் பெற முடியும்!

ஆதி மார்க்கம்-இயற்கை மார்க்கம் எது?

ஆதி மார்க்கம் (இயற்கை மார்க்கம்) எதுவென ஆராயும் போது அது ‘ இஸ்லாம்’ தான் விடை என்பதற்கு மனித சமுதாயத்திற்கு அருளப்பட்டவேதங்களிலும், இந்து மத இதிகாசங்களிலும், புராணங்களிலும் மிகத் தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன.

உலகம் தோன்றியது முதல் இறைவனால் அருளப்பட்ட முதல் மார்க்கம் இஸ்லாம் தான்! அந்த மார்க்கத்தை போதிப்பதற்காகத்தான் ஆதி இறைதூதர் ஆதம் முதல் இறுதி இறை தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வரை ஒரிலட்சத்திற்கும் மேற்பட்டோர் இறைவனால் அனுப்பப்பட்டார்கள்.

இறைதூதர் அனைவரும் போதித்தது என்ன?
‘ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபடவேண்டும். அவனுக்கு எதையும், எவரையும் இணையாக்கக் கூடாது. என்ற ஏகத்துவக் கொள்கையைத்தான் அவர்கள் அனைவரும் மக்களுக்குப் போதித்தார்கள். அது மட்டுமல்ல, சிலை வணக்கத்தையும், குல வழக்கத்தையும,படைப்பினங்களை வணங்குவதையும் வன்மையாகக் கண்டித்தார்கள்.

இறைதூதர்கள் அனைவரின் ஒரே குரல்

‘ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபடவேண்டும். அவனுக்கு எதையும், எவரையும் இணையாக்கக் கூடாது. என்ற ஏகத்துவக் கொள்கையைத்தான் அவர்கள் அனைவரும் மக்களுக்குப் போதித்தார்கள். அது மட்டுமல்ல, சிலை வணக்கத்தையும், குல வழக்கத்தையும,படைப்பினங்களை வணங்குவதையும் வன்மையாகக் கண்டித்தார்கள்.
இந்த ஏகத்துவத்தைத் தான் இறைதூதர் யாவரும் ஒரே குரலாக எடுத்துரைத்ததாக
அல்-மாயிதா 4:36,
அல்-அஃராஃப் 7:72, 7:65,7:73,7:85,
ஹூத் 11:50, 11:61, !!:84,
அந்நஹ்ல் 16:36,
அல்-முஃமினூன் 23: 23, 23: 32, 27:45,
அல்-அன்கபூத் 29: 16, 29:36, 71:3

போன்ற அத்தியாயங்களில் சுமார் 37 இடங்களில் திருமறை குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது. எல்லா தூதர்களும் போதித்த இந்த உண்மையைத்தான்,எல்லா வேதங்களும்,குறிப்பாக இந்து வேதங்களும் இதனைத் தெளிவு படுத்துகின்றன.

கிறித்தவ வேதங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மூன்று தெய்வ(திரித்துவக்) கொள்கைக்கு எதிராகக் கூறுவதைப் பாருங்கள்:-

இயேசு கிறிஸ்து தன்னுடைய சமூகத்தவரான இஸ்ரவேலர்களிடம் ‘உன் கடவுளாகிய கர்த்தரையே நீ வணங்க வேண்டும்.அவர் ஒருவருக்கே நீ பரிசுத்த

சேவை செய்ய வேண்டும். (லூக்கா 4:8) என்று போதனை செய்திருக்கிறார்.

‘தேவன் ஒருவன் தான். அவன் ஒருவனைத்தான் வணங்க வேண்டும’. என்று போதிக்கவே மெய்தேவன் அனுப்பி வைத்தான் என்று கிறித்தவ வேதநூல்கள் கூறுகின்றன.

லா இலாஹ இல்லல்லாஹ் ஈஸா ரஸூலுல்லாஹ்.’வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹவைத்தவிர வேறு யாருமில்லை ஈஸா(அலை)அவர்கள்

அல்லாஹ்வின் தூதராவார்கள்’ என்னும் இஸ்லாமியக் கொள்கையை ஈஸா(அலை)-(இயேசு) அவர்கள் முழங்கி வந்தார்கள். இதை பைபிள் இவ்வாறு கூறுகிறது:-

‘ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீ அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்’ (யோவான் 17:30)

இந்து வேதங்கள் கூறுவதைப் படியுங்கள்:-
யார் அசம்பூதி (இயற்கை)யை வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றனர். (அதர்வண வேதம் 40:9)
அவன் ஆதி தேவன். பிறப்பில்லாதவன். (பகவத் கீதை 10:12)
அந்த வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் தான்! (ரிக் வேதம் :6:45:16)

லா இலாஹ இல்லல்லாஹு – வணக்கத்திற்குரியோன் அல்லாஹவைத்தவிர வேறு எவருமில்லை என்னும் இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை எந்த

கருத்துச்சிதைவும் இல்லாமல் வேதங்களின் பிரம்ம சாத்திரம் கூறுகிறது.

‘ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தே கின்ஜன்’
பொருள்:இறைவன் ஒருவனே! அவனுக்கு யாதொரு இணையுமில்லை. இல்லவே இல்லை.

‘ஏகம் ஏவம் அத்விதியம்’
பொருள் : அவன் ஒருவனே! அவனுக்கு யாதொரு இணையுமில்லை.
அடுத்து ரிக் வேதம் (6:45:16) பின்வருமாறு கூறுகிறது.

‘யா இக் இத் முஸ்திஇ’
பொருள் : வணக்கத்திற்குரியவன் இறைவள் ஒருவனே !
இன்னும் ஏகத்துவத்தை வலியுறுத்தும் சுலோகங்கள் ஏராளம் இந்து வேதங்களில் காணப்படுகின்றன.

ஆனால் தங்கள் வேதங்களிலுள்ள இந்த உண்மையைப் புரியாத பாமர கிறித்தவர்களும், இந்துக்களும்,மக்களின் அறியாமையைத் தங்களின் மூலதனமாக வைத்துப் பிழைப்பு நடத்தும் மத குருமார்களும், போலி மதவாதிகளும் மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தைப் புரியாது கண்டதையெல்லாம் கடவுளர்களாக நம்பி வாழும் அவல நிலையைத்தான் எங்கணும் காண முடிகிறது.

இதனால் ஏக இறைவனான அல்லாஹ்வையும், ஆதி மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தையும் மறந்து நரகப்படுகுழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

பல தெய்வ வணக்கம் எவ்வாறு ஏற்பட்டது?

பண்டைய நாகரிகத்தின் தந்தை நூஹ் (அலை)

வாழ்ந்த இடம் : மொசப்பட்டோமியா. (இப்போதைய ஈராக்)
யூப்ரடீஸ், டைகிரீஸ் நதிகளுக்கிடையே உள்ள நிலப்பகுதிகளுக்கு மொசப்பட்டோமியா (mesopotomia) என பெயர் வழங்கப்படும். நதிகளுக்கு இடைப்பட்ட இடம் என்பது அதன் பொருள். அதுவே இன்று ஈராக் என்று அழைக்ப்படுகிறது.

உலகிலேயே மிகப்பழமையான ஒரு நாகரீகம் அது மொசப்பட்டோமியாவில் வாழ்ந்த சுமேரியர்களுடையது தான் என்று பல வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இந்த சுமேரிய நாகரீகமானது கி.மு.6000 அல்லது 7000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று H.G.Wells தன்னுடைய A History of the world என்னும் நூலில் கூறுகிறார்.

நூஹ் நபியின் பிரச்சார தலைநகர் மெசப்பொட்டோமியாவாக இருந்தது என அபுல் கலாம் ஆஸாத் குர்ஆன் தஃப்ஸீரில் குறிப்பிடுகிறார்.

நூஹ்(அலை) அவர்கள் ஏக தெய்வக் கொள்கையைப் போதித்த போது மிகச் சொற்பமானவர்களே ஏற்றுக் கொண்டனர். மிகப் பெரும்பான்மையினர் வழிகேட்டிலேயே இருந்தனர். இதனால் நூஹ்வையும் அவரைப் பின்பற்றியவர்களையும் கப்பலில் பயணம் செய்யக்கட்டளையிட்டு நிராகரிப்போர்களை பிரளயத்தால் அழித்தான். முடிவில் நீர்வற்றி கரை தென்பட்டபோது நூஹுடைய கப்பலானது ஜூதி (அரராத்) என்னும் மலையில் தங்கியது.

கப்பலிலிருந்து வெளியேறிய நூஹின் சந்ததிகள் பூமியின் பல பாகங்களுக்கும் சென்று குடியேறி தங்கள் சந்ததிகளைப் பெருக்கிக் கொண்டனர்.

இந்த தூஃபான் பிரளயம் குறித்து குர்ஆனும் ( 71:22-26, 21:76,77) பைபிளின் பழைய ஏற்பாடும் ஆதியாகமம் (அத்தியாயம் 6-9), இந்து வேதம் பவிஷிய புராணமும் (பிரதிசர்ஹபர்வ 1:4) கூறுகின்றன. இவ்வாறு இஸ்லாமிய கிறித்தவ இந்து வேதங்கள் தவிர புராதனமான நூல்களிலும் இது குறித்துக் குறிப்புகள் காணப்படுகின்றன.

950 ஆண்டுகள் வாழ்ந்த நபி நூஹ்(அலை) அவர்களே சுமேரியராகவும், சுமேரிய நாகரிகத்தின் தந்தை என்றும் வரலாறு வர்ணிக்கப்படுகிறது. சுமேரிய நாகரிகத்திற்குப்பிறகே மற்ற பண்டைய நாகரிகங்கள் அனைத்தும் தோன்றின. என்று வரலாற்று ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர்.

சந்ததிகள்
நோவாவுடைய சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று புத்திரராகள் மூலமாகவே மனித சமுதாயம் மீண்டும் பரவத் தொடங்கியது என்று பைபிள்ஆதியாகமம் கூறுகிறது.

மஹா நுவ்வுடைய சமூகத்தார்களில் முக்கியமானவர்களான ஷாம், ஹாம், யாகுத் என்னும் பெயர்களில் அறியப்படுகின்றவர்கள் மூலமாகவே மீண்டும் மனித சமுதாயம் பல்கிப் பெருகியது என்று பவிஷிய புராணம் கூறுகிறது.நோவாவுடைய சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று புத்திரராகள் மூலமாகவே மனித சமுதாயம் மீண்டும் பரவத் தொடங்கியது என்று பைபிள்ஆதியாகமம் கூறுகிறது.மஹா நுவ்வுடைய சமூகத்தார்களில் முக்கியமானவர்களான ஷாம், ஹாம், யாகுத் என்னும் பெயர்களில் அறியப்படுகின்றவர்கள் மூலமாகவே மீண்டும் மனித சமுதாயம் பல்கிப் பெருகியது என்று பவிஷிய புராணம் கூறுகிறது.


1. ஹாம்
நூஹுடைய குமாரர் ஹாம் மூலமாக உருவாகியதே பண்டைய எகிப்து நாகரீகமாகும்

2. ஸாம்
இவர் மூலமாகவே அரேபியா,சிரியா,ஈராக் நாகரீகம் உருவானது. பாபிலோனியா, அசீர்யா,கால்தியா. பினீசியா நாகரீகங்களும் உருவாயின.

நோவாவுடைய சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று புத்திரராகள் மூலமாகவே மனித சமுதாயம் மீண்டும் பரவத் தொடங்கியது என்று பைபிள்ஆதியாகமம் கூறுகிறது.மஹா நுவ்வுடைய சமூகத்தார்களில் முக்கியமானவர்களான ஷாம், ஹாம், யாகுத் என்னும் பெயர்களில் அறியப்படுகின்றவர்கள் மூலமாகவே மீண்டும் மனித சமுதாயம் பல்கிப் பெருகியது என்று பவிஷிய புராணம் கூறுகிறது.நூஹுடைய குமாரர் ஹாம் மூலமாக உருவாகியதே பண்டைய எகிப்து நாகரீகமாகும்இவர் மூலமாகவே அரேபியா,சிரியா,ஈராக் நாகரீகம் உருவானது. பாபிலோனியா, அசீர்யா,கால்தியா. பினீசியா நாகரீகங்களும் உருவாயின.இப்றாஹீம் நபியின் சந்ததிகளும் ஸாம் வழி வந்தவர்கள். இவர்களை ஸாம் சந்ததியர்கள் (செமிட்டிக்குகள்-ஸாம், சந்ததியினர்) என வரலாற்றாசிரியர்கள் அழைக்கின்றனர்.

3. யாபித்
யாபிதின் குமாரர்கள் தீவுகளுக்குச் சென்று குடியேறினர். இவர்களே இந்தியாவுக்கும் வந்திருக்க வேண்டும். இந்தியாவும் ஒரு தீவு தான்.

4. நுஃபூர்
அரபி வரலாற்றாசிரியரும் உலகப்பயணியுமான அலி இப்னுல் ஹுஸைன் அல்-மஸ்வூதி, (கி.பி 956) தன்னுடைய ‘முரூஜுத் தஹப் வ மஆதினுல்

ஜவ்ஹர்’ என்னும் உலக வரலாற்நு நூலில் ‘நூஹுடைய மற்றொரு குமாரனாகிய நுஃபூர் தன்னுடைய சந்ததிகளுடன் சிந்து நோக்கி பயணமாகி அங்கே

தங்கினார். சிந்து நதிக்கரையினில் வாழ்ந்த ஆதி வாசிகள் நுஃபூருடைய சந்ததிகளேயாவார்கள் என்றும்,

மேலும் அதே நூலில் மற்றொரு இடத்தில் நூஹுடைய மகன் யாப்பேத், அவருடைய மகன் ஸுபேல்(துஃபேல்) அவருடைய மகன் அபூர் அல்லது

அமூர் சிந்து சென்று தங்கி தங்கள் சந்ததிகளைப் பெருக்கி பரவி வாழ்ந்தனர்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.(யாபிதின் மற்றொரு பெயரே நுஃபூர் எனக் குறிப்பிடப்படுகிறது) எவ்வாறாயினும் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த சைந்தியர்கள் அல்லது திராவிடர்கள் நூஹுடைய மகனுடைய சந்ததியினரே என்பதில் வரலாற்றாசிரியர்களிடையே மாற்றுக் கருத்து இல்லை.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஸாம் : அரபுகளின் தந்தை என்றும் ஹாம் அபிசீனியர்களின் தந்தையென்றும் யாபித் உரோமர்களின் தந்தை என்றும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர் :

ஸமுரா(ரலி) ஆதாரம் அஹ்மத்

திராவிடர்கள்

புராதனமான காலங்களில் குலத்தலைவன் பெயரில் தான் குலம், கோத்திரம் உருவாகும். செமட்டிக் வம்சம் ‘ஸாம்’ என்னும் குலத்லைவன் பெயரில் உருவானது போல யாபிதின் பெயரால் திராவிடர் குலம் உருவானது. ‘திரு’ என்னும் அடைமொழிச் சொல் பண்டைய இலக்கியங்களில் சிறப்பைக்காட்டப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். யாப்பித் என்னும் பெயருக்கு முன்னால் திரு சேர்க்கப்படும் போது ‘திருயாபித’ என்றாகிறது. அதுவே ‘திராவிடர்’ என என மறுவியிருக்கலாம்.

இறை தூதர்கள்-தீர்க்கதரிசிகள் – என்று சொல்லப்படுபவர்களைத்தான் மனுக்கள் என்று இந்து கிரந்தங்கள் குறிப்பிடுகின்றன.

மனுக்கள் அநேகம் பேர் உண்டு. மனுக்கள் மானிட சமுதாயத்தின் பிதாமகன் ஆவார். சமுதாய நெறியை விட்டும் புறம்பாகச் செல்லாது காத்து வந்த தெய்வீக புருடர்களே மனுக்கள். எகிப்து, பாரசீகம், கிரேக்கம், ரோமாபுரி முதலிய நாடுகளுக்கு தர்ம சாத்திரங்கள் வகுத்துக் கொடுத்தவர்கள் அந்நாட்டு மனுக்கள் ஆவார்கள். என்று இந்து புராணங்கள் கூறுகின்றன. (மனுதர்ம சாஸ்திரம்) பக்கம் 5 பைபிள் கூறும் நோவாவும், குர்ஆன் கூறும்

நூஹும்,பவிஷ்ய புராணம் கூறும் மஹா நுவுவும் ஒருவரே. ‘நுவு’ என்னும் பெயருக்கு முன்னால் மஹா (Great) என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டு ‘ மஹா நுவு’ என்று கூறப்பட்டு அதுவே பிறகாலத்தில் மருவி ‘மநு’ வாகியது. என்றும் கூறப்படுகிறது. எனினும் மநுக்கள் அநேகம் பேர் உண்டு என்றும் குறிப்பிட்டது மஹாநுவுக்குப்பின் வந்த இறைத்தூதர்களையாகும்.

இந்த மனுக்களை சத்திய வரதன் (உண்மையாளர்) என மஹாபாரதம் கூறுகிறது. இதிலிருந்து மநு திராவிடர்களுடைய பெரிய குலத்தலைவராக இருந்தார் எனப் புரிந்து கொள்ளலாம்.
சிந்து நதிக்கரையில் வாழ்ந்த ஆதிவாசிகளின் (திராவிடர்களின்) கடவுள் கொள்கை ஏக தெய்வக்கொள்கையாகத்தான் இருந்தது என்பது பல வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். சுமேரிய நாகரிகத்தந்தை நூஹ்வின் கொள்கை ஏக தெய்வக்கொள்கை யாகத்தானிருந்தது. அதுபோல நூஹவின் குமாரர் யாபிதின் மூலமாக உருவான திராவிட சமூகத்தின் கொள்கையும் ஏக தெயவக் கொள்கைதான் என்பதில் வரலாற்றாசிரியர்களிடேயே கருத்து ஒற்றுமை உள்ளது.

‘ஓம்’ என்பது திராவிடர்களின் கடவுளின் பெயராகும். ‘தீதிவிகன்’ அக்கடவுளின் குணங்களில் ஒன்றாகும் என்று மௌலானா ஆபுல் கலாம் ஆஸாத் தம்முடைய தஃபஸீருல் குர்ஆனில் கூறியுள்ளார். சமஸ்கிருதத்தில் ‘ஓம்’ என்பதன் துல்யமான பொகுள் ‘இந்துவான்’ அதாவது ‘ஏகன்’ ஆகும். அந்த கடவுளுடைய அதிகாரம் ‘ சகல வர்க்கங்களின் மீதும் ஆற்றல் உள்ளவன்’ அவனுடைய கட்டளைக்குக் கட்டுப் பட்டே சர்வ தேவர்களும் நடக்கின்றனர்.
‘தீதிவிகன்’ அவனுடைய ஒரு குணம் ஆகும். ‘எந்நிலையிலும் உறங்காது கண்காணிப்பவன்’ என்பது பொருள்.

‘தன்னைத்தூக்கமோ உறக்கமோ மறதியோ பீடிப்பதில்லை என்று இறைவன் குர்ஆனில் குறிப்பிடுவதும் இந்த அர்த்தத்திலேயாகும். (அபுல் கலாம்ஆஸாத் குர்ஆனின் தர்ஜுமா பாகம்1, பக்கம் 129,130)

Wednesday 15 February 2012

மரங்களை வெட்டுங்கள்!!

சமீபத்தில் ஒரு forward mail ல் வந்த விஷயம் உங்கள் பார்வைக்கு.....

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!

தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழும் உதடுகள்!!


முத்தம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளனர் நம்மவர்கள். உணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன.
உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் அநேக நன்மைகள் விளைகின்றனவாம். அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது போல உணர்ச்சிகளை உணர்ச்சிகளால் தூண்டுவது. அதே சமயம் முத்தமிடுவதன் மூலம் நோய்கள் பரவுதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 வாட்ஸ் மின்சாரம்
ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம். (ஆகா மின்சார உற்பத்திக்கு இப்படி ரொமான்டிக்கான ஒரு வழி இருக்கப்பா..இத விட்டுட்டு எங்கெங்கையோ கரண்ட்டை தேடுறாய்ங்களே..)

மனிதர்கள் தங்கள் உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை குறைப்பதற்கு என்னென்னவோ உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து 15 நிமிடம் தொடர்ந்து கொடுத்துகொள்ளும் இதழ் முத்தத்தில் 30 கலோரிகள் குறைகிறது. இது அரைமணி நேராம் மாய்ந்து மாய்ந்து நடக்கும் நடைபயிற்சிக்கு சமமானது. முத்தம்தான் உடலுறவுக்கான முதல் தூண்டுதல். உதடு பிரியாமல் கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தைவிட, உதடு பிரிந்து உதடுகளில் கொடுக்கும் முத்தத்திற்கு ஆரோக்கியம் அதிகம்.


முத்தத்தில் சில சிக்கல்களும் உண்டு. உதடுகளை தயார்படுத்துவதற்கு முன்பு அதையும் தெரிந்து கொள்வது நல்லது. மிகவும் ஆழமாக கொடுக்கப்படும் முத்தத்தால், சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படும் என்கிறார்கள்.

ஜப்பானில் அப்படி ஒரு சம்பவம் அந்தக் காலத்தில் நடந்துள்ளதாம். ஒரு ஜப்பானியப் பெண்ணும், ஆணும் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பெண் ஆர்கஸத்தை அடைந்தபோது அந்த ஆண், தனது காதலியின் உதடுகளைக் கவ்வி நீண்டநேரம் ஆழமான முத்தத்தைக் கொடுத்துள்ளான். செக்ஸ் உச்சத்தை அடைந்ததால் ஏற்பட்ட ரத்த அழுத்தத்துடன், இந்த ஆழமான முத்தமும் சேர்ந்து, மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டாளாம்.

அதேபோல சீனாவில் ஒரு பெண் மிகவும் ஆழமான முத்தத்தை வாங்கியபோது அவளது காது செவிடாகி விட்டதாம்.

இது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வாயோடு வாய் பொருத்தி, உதடுளை இறுக்கமாக கவ்வியபடி ஆழமாக முத்தம் கொடுக்கும்போது வாய்க்குள் காற்று புக முடியாத நிலை ஏற்படுகிறது. இது பிரச்சினையைத் தரும் என்பது உண்மைதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பது இன்னொரு எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

செக்ஸ் உறவில் முத்தம் தவிர்க்க முடியாத ஒன்று. செக்ஸ் ‘யுத்தமே’, முத்தத்தில் ஆரம்பிப்பதுதான். இப்படிப்பட்ட முத்தத்தை ஹாலிவுட் சினிமாப் படங்கலில் மிக அழகாக சித்தரித்துள்ளதையும் நாம் காண முடியும்.

உலகிலேயே முதல் முறையாக முத்தக் காட்சிஇடம்பெற்ற படம் ஹாலிவுட் படம்தான். 1896ம் ஆண்டு முதல் முத்தக் காட்சி ஹாலிவுட் படம் ஒன்றில் இடம் பெற்றது. அதேபோல முதல் முறையாக பிரெஞ்சு முத்தம் இடம் பெற்ற ஆண்டு 1961ம் ஆண்டாகும்.

அதேபோல 1926ம்ஆண்டு ஜான் பாரிமோர் என்ற ஹாலிவுட் கலைஞர் நடித்த படத்தில் கிட்டத்தட்ட 127 முத்தக் காட்சிகள் இடம் பெற்றிருந்ததாம். இன்று வரை இதுதான் முத்த ரெக்கார்டாக உள்ளது.

மோகம் தரும் முத்தத்தில் சில வகை…

ப்ரீஸ் கிஸ்.
இது படு வேடிக்கையானது. சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வாயைத் திறந்து, உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய்க்குள் பாஸ் செய்யுங்கள். உங்களது நாவால்தான் பாஸ் செய்ய வேண்டும், அப்படியே துப்பக் கூடாது. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றிருக்கும்.

பிரெஞ்ச் கிஸ்.
இது உலகப் புகழ் பெற்றது. சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை ‘இங்கிலீஷ் கிஸ்’ என்றுதான் அழைக்கிறார்களாம்.

ப்ரூட்டி கிஸ்.

இதுவும் கிட்டத்த ப்ரீஸ் முத்தம் போன்றதுதான். ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு ஒன்றை எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களது பார்ட்னரின் உதட்டுடன் வைத்து அழுத்துங்கள். அது நசுங்கி வழியும்போது இருவரும் இணைந்து அதைப் பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்கலாம்.

ஹாட் அன்ட் கோல்ட் கிஸ்.

முதலில் உங்களது பார்ட்னரின் உதடுகளை சிறிது நேரம் மென்மையாக சுவையுங்கள். அதன் பின்னர் சற்று பலமாக ஊதுங்கள். முதலில் குளிர்ந்து போயிருக்கும் உதடுகள், நீங்கள் ஊதுவதன் திடீர் வெப்பத்தை சந்திப்பார் உங்களது பார்ட்னர். கூடவே இன்னொன்னும் கிடைக்குமா என்று கோரிக்கையும் வைப்பார்.

லிக் கிஸ்.

முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் உதடை, அது மேல் உதடாகவும் இருக்கலாம், கீழுதடாகவும் இருக்கலாம், மெதுவாக உங்களது உதட்டால் தடவிக் கொடுங்கள். உணர்ச்சிகள் தூண்டப்படுவதை அனுபவிப்பீர்கள். பிறகு முத்தத்திற்குப் போகலாம்.

நெக் நிப்பிள் கிஸ்.
உதடுகளில் முத்தமிடுவதற்கு முன்பு உங்களது பார்ட்னரின் கழுத்தை மென்மையான முத்தத்தால் ஒரு ‘சுற்று சுற்றி’ விட்டு பின்னர் உதடுகளுக்கு் போங்கள்.

டாக்கிங் கிஸ்.
இது படு ஜாலியானது, கூடவே உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இருவரும் நேருக்கு நேர் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இருவரது உதடுகளும் நெருக்கமாக இருக்க வேண்டும். உதட்டோடு உதடு உரச, ஆனால் முத்தம் தரக் கூடாது, எதையாவது சிறிதுநேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருங்கள். உதடுகள் உரசும், உணர்வுகள் தூண்டப்படும், உள்ளங்கள் நெருங்கி வரும், பின் தொடர்ந்து வரும் உறவு வலுப்படும்.

சொல்லிக் கொண்டே போகாலம் முத்தத்தின் கதையை. உடல்கள் இணைவது மட்டும் உறவுகள் அல்ல, அன்பும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு முத்தம் ஒரு நல்ல கருவி என்பதால் முத்தத்தில் ஆரம்பியுங்கள் உங்கள் இனிய உறவுகளை.

நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க……


என்னதான் அழகாக மேக் அப் செய்து அலுவலகம் கிளம்பினாலும் பேருந்து நெரிசலில் சிக்கி முகம் டல்லாகிவிடுகிறதே என்ற கவலை சிலருக்கு உண்டு. நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க அழகு நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் இதோ உங்களுக்காக.

ஐஸ்கட்டி ஒத்தடம்
அலுவலகம் கிளம்புவதற்கு முன் சில ஐஸ் கட்டிகளை காட்டன் துணியில் எடுத்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில் சிறிது நேரம் ஒற்றி எடுங்கள். இதனால் சருமம் புத்துணர்வு பெறும். பின் உங்கள் விருப்பப்படி பவுடர் அல்லது மேக்-அப் போட்டுக் கொண்டால் அடுத்த ஐந்து மணி நேரம் வரை முகம் அப்படியே இருக்கும்.

"குளிர்ந்த நீரில் "யூடிகோலன்" (Eaudecologne) என்ற லோஷனை கலந்து முகத்தில் தெளித்துக் கொண்டால், முகம் பளிச் என்றிருக்கும். பொதுவாக முகத்தில் சதை தளர்வாகத் தெரியும்போதுதான் வயதான தோற்றம் ஏற்படும். இந்த லோஷனை உபயோகிக்கும்போது, தளர்ந்த சதை இறுகி முகத்தில் பொலிவு கூடும்.

உடையில் கவனம் அவசியம்
உடை விஷயத்தில் அதிக கவனம் தேவை. உங்களுக்கான சரியான அளவுடன் நேர்த்தியாக உடுத்துங்கள். காலையில் மீட்டிங் இருந்தால் காட்டன் புடவை உடுத்தலாம். அதே மீட்டிங் மாலையில் இருக்கும் பட்சத்தில், காட்டன் சீக்கிரமே கசங்கி விட வாய்ப்புண்டு என்பதால் அதைத் தவிர்க்கலாம். காட்டன், சிந்தடிக் என்று எந்த உடை அணிந்தாலும், அதிகம் லூசாகவும் இல்லாமல், மற்றவர்கள் கண்களை உறுத்தும் வகையில் மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல், சரியாக அணிவது புத்துணர்ச்சியோடு தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும்.

ஃபேஷ் வாஷ் உபயோகிக்கலாம்

காலையில் போடும் மேக்-அப் மாலை வரைக்கும் தாங்காது. எனவே சிலர், மேக்-அப் லேசாகக் கலைந்தால்கூட அதன் மேலேயே மீண்டும் போட்டுக் கொள்கின்றனர். இது தவறு. ஏனெனில், ஏற்கெனவே போட்டிருக்கும் மேக்-அப் சரும துவாரங்களை அடைத்திருக்கும். அதன் மீதே மறுபடியும் பவுடர் அல்லது மேக்-அப் போடுவது உங்கள் முகத்தில் படிந்திருக்கும் வியர்வையையும் அழுக்கையும் மேலும் அதிகமாக்கும்.

அதனால் சிரமம் பார்க்காமல் நடுவில் ஒருமுறையாவது முகத்தைக் கழுவி விட்டோ, "வெட் டிஷ்யூ" பேப்பர் கொண்டு நன்றாகத் துடைத்து விட்டோ மீண்டும் மேக்-அப் போட்டுக் கொள்வதே சிறந்தது. முகம் கழுவ சோப்பைக் காட்டிலும் ஃபேஸ் வாஷ் உபயோகிப்பது நல்லது.

சரியான ஃபவுண்டேசன்

முகத்திற்கு ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுக்கும்போது, அவரவர் நிறத்துக்கேற்ற ஷேட்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். ஏ.சி அறையில் வேலை செய்பவர்கள் லோஷன் ஃபவுண்டேஷனையும், ஏ.சி இல்லாத அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் கிரீம் அல்லது கேக் ஃபவுண்டேஷனையும் உபயோகிக்கலாம்.

லைட் கலர் லிப்ஸ்டிக் உபயோகிப்பதுதான் தற்போது ஃபேஷன். புதிதாக லிப்ஸ்டிக் உபயோகிக்கத் துவங்குகிறவர்களும் லைட் கலர் லிப்ஸ்டிக் போடலாம்.லிப்ஸ்டிக் வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் கலர்லெஸ் லிப்ஸ்டிக், லிப் பாம் அல்லது வேஸலின் போட்டுக் கொள்ளலாம்.
ஸ்கின் டானிக்
கண்ணுக்கு ஐ லைனர் மற்றும் லைட் ஷேடில் ஐ ஷேடோ போடுவது முகத்துக்குக் கூடுதல் கவர்ச்சியைத் தரும். மஸ்காராவில் இப்போது "ஐ காஷா பென்சில்"கள் வந்துள்ளன. அவற்றை உபயோகிப்பது கண்ணுக்கு புதுப் பொலிவைத் தரும்.

ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரித்த சாறு முகத்திற்கு ஏற்றது. இதற்கு "ஸ்கின்டானிக்" என்று பெயர். அடிக்கடி இந்தத் தண்ணீரால் முகத்தைக் கழுவினால், முகம் பளபளப்பாக இருக்கும். கண்ணுக்குக் கீழே உள்ள கருவளையமும் மறைந்து விடும்"

எண்ணெய் வழிவதை தடுக்க

தலைக்கு எண்ணெய் வைத்தாலே சில மணித் துளிகளில் எண்ணெய் வழிய ஆரம்பித்துவிடும். அதற்காக எண்ணெய் வைக்கா விட்டாலும் கூந்தல் வறண்டுவிடும் இதை தவிர்க்க இரவு நேரங்களில் எண்ணெய் வைத்துவிட்டு காலையில் தலைக்கு குளிப்பது முகத்திற்கு புத்துணர்ச்சி தரும். இல்லாவிட்டால் பிசுபிசுப்பு தன்மை இல்லாத எண்ணெய்களை தலைக்கு உபயோகிக்கலாம். இது முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்கும்.

புத்துணர்ச்சி தரும் புன்னகை

என்னதான் மேக் அப் போட்டாலும் கடுகடு முகத்தோடு இருந்தால் அது பிரயோசனம் இல்லை. இன்முகமும், கனிவான பேச்சுமே நமக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதோடு பிறரையும் மகிழ்வடையச் செய்யும். எனவே எப்போதும் சிரித்த முகத்துடன், கனிவான வார்த்தைகளையே பகிர்ந்து கொள்ளுங்கள். அது கூடுதல் அழகையும் புத்துணர்ச்சியையும் தரும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

ஆண்களின் சிக்ஸ் பேக் உடற்கட்டு பெண்களை கவருமா?

பெண்களை கவர ஆண்கள் பல வழிகளை கையாளுகின்றனர். குறிப்பாக சிக்ஸ்பேக் மூலம் உடற்கட்டை மேம்படுத்துகின்றனர். இதன் மூலம் பெண்களை வசீகரிக்க முடியும் என நம்புகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண்களை சுண்டி இழுப்பது ஆண்களின் உடல் நலமே என ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கருப்பு, வெள்ளை நிற ஆண்கள் மற்றும் சிக்ஸ்பேக் உடற்கட்டு ஆண்களின் போட்டோக்களை பெண்களிடம் கொடுத்து கருத்து கேட்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் கூடிய ஆண்களை பிடிக்கவில்லை.

உடல் நலமிக்க திடகாத்ரமான கவரக்கூடிய நிறத்தை கொண்ட ஆண்களையே அவர்கள் விரும்புவது தெரிய வந்தது. இவர்கள் மூலம்தான் உடல் ஆரோக்கியமான குழந்தைகளை பெற முடியும் என அவர்கள் கருதுகின்றனர்.

காதலிக்க பெண்கள் தேவை தகுதிகள்

1..10th பெயிலாகிருக்கணும்(disky--நாங்கலாம் 7வது பாஸ்.
.பாஸ் தான பெருசு அதான்)

2.. அப்பன் வசதியாக இருக்கணும்(disky--வீட்டோட
... மாப்பிள்ளையா செட்டில் ஆகிடலாம்)

3..அப்பா செல்லமா இருக்கணும்(disky--செலவுக்கு
பாக்கெட்மணி கிடைக்கும்)

4..மொக்கை போட தெரியணும்(disky--நேரம் போகணும்லா)

5..பொண்ணு அழகா இருக்கணும்(disky--நாலுபேர்கிட்ட
பெருமையா சொல்லணும்லா)

6..குறைந்தது ஒரு தங்கை இருக்கணும்(disky--அட
போங்கப்பா கூச்சமா இருக்கு)

7..இருசக்கர வாகனம் இருக்ககூடாது(disky--நாங்க லிப்ட்
குடுத்தால்தான் கிக்)

8..அதிக தோழிகள் இருக்கணும்(disky--கண்ணுக்கு
குளிர்ச்சியா சைட் அடிக்கலாம்லா)

9..ஆண் நண்பர்கள் இருக்ககூடாது(disky--போட்டிலாம்
போட முடியாது)

10.பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனின் ரசிகையா இருக்கணும்
(disky--தியேட்டர்லயும் காதல் பண்ணலாம்)

சட்ட திட்டங்கள்:
1..அழகான பெண்களுக்கு முன்னுரிமை வழங்கபடும்

2..ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் கிடைக்கபெற்றால்
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கபடுவர்

3..விண்ணப்பிக்கும் அனைவருடைய பெயர்களும்
பொன்னெழுத்துகளால் கல்வெட்டில் பதிக்கபடும்
4..விண்ணப்பதாரர்களில் பேர் குலுக்கல் முறையில்
தேர்ந்தெடுக்கபட்டு உபரியாக சேர்த்துகொள்ளபடுவார்கள்
5  காதலியின் அப்பன்
பணத்தில் 5 iphone 4s மொபைல் பரிசளிக்கபடும்

6..தள்ளுபடியாகும் விண்ணப்பதாரர்களுக்கும் ஆருதல்
பரிசு வழங்கபடும்

7..தேர்ந்தெடுக்க படும் காதலிக்கு 1 வருட உத்திரவாதம்
வழங்கபடும்

8..முகநூலை போல் ஒருவர் பல பெயர்களில்
விண்ணபிக்ககூடாது மீருகிறவர்களின் விண்ணப்பம்
சுவாமி நித்யானந்தாவுக்கு forward செய்யபடும்

9..தேர்ந்தெடுக்கபட்டபின் வெளியேற நினைப்பவர்களுக்கு
ஒரே பிரசவத்தில் 16 பெண் குழந்தைகள் பிறக்கும் என
பில்லி சூனியம் வைத்து சாபம் வழங்கபடும்

10.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் dec31 2012
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நான்தான்,என் சொந்த ஊர்
என் மாவட்டம்,என் மாநிலம்
என் நாடு..என் கோடு
என் மொபைல் நம்பர்

Saturday 11 February 2012

அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?,

அழகில் சிறந்தவர்கள், ஆண்களா? பெண்களா?, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம்?, பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?, ஆண்கள் எந்த விஷயத்தில் கோட்டைவிடுகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா? உளவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே... *

பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.

 * ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள். * குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

 ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு மறந்துவிடுவார்கள்.

 * ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.

* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.

 * ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்... இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.

* பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசைகளையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்'. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்துவிடுவார்கள்.

* பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள். - சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கானவர்களாகவும் இருப்பார்கள்

நினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் தான்! ஆய்வில் தகவல்!!


மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது.
கனடாவின் மொன்றியல் பல்கலைக்கழக மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர். இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர்.

ஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மலரும் நினைவுகள் உள்ளிட்டவைகளை ஞாபகம் வைத்து பின்னொரு நாளில் வெளிப்படுத்துவதில் பெண்களை காட்டிலும் ஆண்களை முன்னணியில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதன் முடிவுகள் தற்போது இண்டர்நேசனல் ஜர்னல் ஆப் சைக்கோபிசியாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மீன் சாப்பிடுங்க! இதயநோய் எட்டிப் பார்க்காது!!`

முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் போன்றவற்றினால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

15 முதல் 49 வயதுவரை உடைய 49000 பெண்களிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இதயநோய் பாதிக்கப்பட்டவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கு வாரம் 3 நாட்களுக்கு மீன் உணவு கொடுக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை குறித்து பின்னர் கேள்வி கேட்கப்பட்டது. அதில் மீன் உணவு உட்கொண்டவர்களுக்கு இதயநோய் பாதிப்பு குறைந்தது தெரியவந்தது.

ஒமேகா கொழுப்பு அமிலம்

மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்தநாளங்களில் படிவதை தடுக்கிறது.

இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வயதான பெண்களுக்கு

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வறுத்த மீனை சாப்பிடுவதை காட்டிலும், இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டொனால்டுலாயிட் ஜோன்ஸ் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

சராசரியாக 63 வயது உள்ள பெண்கள் 84 ஆயிரம் பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது ஓவன் முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிட்ட பெண்களுக்கு இதயநோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்து இருப்பது தெரியவந்தது.

இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்கள் நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது.

ஓவனில் பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கறுப்பு மீன்கள், சாலமோன் மீன்கள், இதர துனா மற்றும் வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் சிறந்த பலன் அளிப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போவதுடன் அத்தகைய உணவு தயாரிப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வறுத்த மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதல் ஆகிறது எனவும் அந்த ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இளவயதில் செக்ஸ் வைத்துக் கொள்வது எதிர்காலத்தில், நரம்பு மண்டலத்தை பாதிக்கும்?


இளம் வயதில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது எதிர்காலத்தில் மூளை செயல்பாடுகள், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். டீன்ஏஜில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் கலாசாரம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பிறந்து 40 நாட்கள் ஆன பெருச்சாளிகளை வைத்து ஆய்வு நடத்தினர். நன்கு வளர்ந்தவை, மீடியம் வயதில் இருப்பவை, இளம் எலிகள் என மூன்றாக பிரிக்கப்பட்டன.

செக்ஸ் உணர்வை தூண்டும் ஊசி போட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர், எலிகளிடம் மருத்துவ ரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆராயப்பட்டன.


இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது:
மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது இளம் வயது எலிகளின் செயல்பாடுகள் செக்ஸ் உறவுக்கு பிறகு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் அன்றாட செயல்பாடுகளில் சுணக்கம், சோர்வு காணப்பட்டது. நரம்பு மற்றும் மூளை செயல்களும் பாதிக்கப்பட்டிருந்தன.


அன்றாட உணவைக்கூட உண்ணாமல் ஒரே இடத்தில் முடங்கி கிடந்தது. சரியான பருவத்தில் இருந்த எலிகள் வழக்கம்போல இருந்தன.
இளம் பருவத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது மூளை, நரம்புமண்டல வளர்ச்சியை பாதிக்கும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாக தெரிகிறது. மனிதர்களுக்கும் இது பொருந்தும். இதன் பாதிப்பு உடனடியாக இருக்காது என்றாலும் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.

tamil joke

ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியுமாம் ...

அப்போ எனக்கு மனைவியா வாறவளின் மனதை புரிந்துகொள்ள சின்ன வீடு செட்டப் பண்ணுவது
குற்றமா ?

நாட்டாமை தீர்ப்பை சொல்லு ..!!!
 
 
 
பெண் : ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?? ?
கஸ்டமர் கேர்: ஆமாம் சொல்லுங்க மேடம்
பெண்: என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டு ஐ விழுங்கிட்டான்..
கஸ்டமர் கேர்: அப்படினா டாக்டர் கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம்

பெண்: இல்லை சார் அதுல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி. அவன் பேசும்போது காசு போகுமா சார்
கஸ்டமர் கேர்: ?????????????
 
 சார், நான்
திருநெல்வேலிக்கு புதுசு..அல்வா வாங்கனும்,
இருட்டுக்கடை எங்கே இருக்கு?

சாரி சார், இப்போ
எல்லாக்கடையுமே இருட்டுக்கடைதான்
 
 
 
 
 
 

Friday 10 February 2012

மூன்றுஅமைச்சர்களும் ரசித்து பார்த்த செக்ஸ் வீடியோ இதுதான் !! (வீடியோ இணைப்பு)

கர்நாடக சட்டசபையில் இருந்த போது நேற்றுமுன்தினம் அமைச்சரின் செல்போனுக்கு ஆபாச படங்கள் எம்எம்எஸ்சில் அனுப்பப்பட்டுள்ளன.

அதில் உள்ள காட்சிகளை பார்க்க எம்எல்ஏக்கள் உள்பட அனைத்து தரப்பினருமே ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 3 அமைச்சர்களும் வேறு வழியின்றி தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

பதவி பறிபோக காரணமாக இருந்த ஆபாச காட்சிகள் இப்போது மற்றவர்களுக்கு செல்போன் மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் பரவி வருகின்றன. இதனால் கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.