Monday 30 July 2012

மாணவிகளின் ஆடைகளை களைந்து, அந்தரங்க உறுப்புகளை தொட்டு பாடம் நடத்திய பேராசிரியர்



சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரம். இங்குள்ள நர்சிங் பல்கலைக்கழகத்தில் யு ஜியாவோஹூவா என்ற பேராசிரியர் பணியாற்றினார். கடந்த மாதம் நர்சிங் மாணவிகளுக்கு தேர்வு நடந்தது.



அப்போது, மாணவிகளின் ஆடைகளை கழற்ற சொல்லி இருக்கிறார் யு. பேன்டையும் கழற்றி மாணவி களின் அந்தரங்க உறுப்புகளை தொட்டுப் பார்த்து சோதனை நடத்தி உள்ளார்.



நோயாளிகளின் உடலை எப்படி பரிசோதனை செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிப்பதற்காக, தங்கள் உடலையே மாணவிகள் தொட்டு பார்க்கும் வகையில் தேர்வு நடத்தியதாக யு கூறினார்.

தான் சொல்வது போல் செய்யாவிட்டால், மாணவிகளை பெயிலாக்கி விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதற்கு பயந்து யு சொன்னபடி மாணவிகளும் ஆடைகளை களைந்துள்ளனர்.



அந்த நேரத்தில் சில மாணவிகளின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு யு விளக்கம் அளித்துள்ளார். பேராசிரியரை எதிர்த்து பேச தைரியம் இல்லாத மாணவிகள், அவர் சொன்னது போல் செய்துள்ளனர். ஆனால், அவருடைய நடவடிக்கை குறித்து தங்கள் குமுறல்களை ஆன்லைனில் கொட்டி தீர்த்து விட்டனர். இதனால் சீன மக்கள் அதிர்ச்சி அடைந்து கடும் கண்டனம் தெரிவித்தனர்.



இதையடுத்து மாணவ, மாணவிகளிடம் மன்னிப்பு கேட்கும்படி பேராசிரியர் யுவுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அத்துடன் அவரை வேலையில் இருந்து அதிரடியாய் நீக்கி உள்ளது. இந்த சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments: