Wednesday 23 May 2012

உலகின் மிகப்பெரிய அதி உயர கோபுரத்தை இன்று நீங்களும் பார்க்கலாம்



உலகின் மிகப்பெரிய, அதி உயர கோபுரம் என்று அழைக்கப்படும் டோக்கியோ ஸ்கை டிரீ இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபட்டது. அதிவேக எலிவேட்டர்கள் மூலம் சுமார் 8,000 பார்வையாளர்கள் இன்று இந்த உலகின் அதி உயர கோபுரத்திலிருந்து உலகைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோபுரம்634 மீட்டர்கள், அதாவது 2080 அடி உயர கோபுரமாகும் இது.

சீனாவில் உள்ள கேன்டன் கோபுரம் 600மீ,அதாவது 1968.5 அடி உயரம் கொண்டது. அதனையும் தாண்டி விட்டது டோக்கியோ ஸ்கை டிரீ. ஆனால் துபாயில் உள்ள புர்ஜ் கலிப்பா என்ற விடுதி 828 மீட்டரக்ள் உயரம் கொண்டது, அதாவது2,717 அடி உயரம் கொண்டது. ஒரு கட்டிடம் என்ற அளவில் இது மிக உயரமானது.

ஆனால் டோக்கியோ ஸ்கை டிரீ ஒரு கோபுரம் என்ற அளவில் உலகின் மிக உயரமானதாகும். இந்த கோபுரம் தொலைக்காட்சி, ரேடியோ ஆகியவற்றின் ஒலி/ஒளி பரப்பு கோபுரமாகச் செயல்படவுள்ளதோடு, சுற்றுலாப் பயணிகளின் பெரும் கவர்ச்சியாகவும் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: