Saturday 17 March 2012

நாகரீக உடை அணிந்தால் மரண தண்டனை கிடைக்கும்


இன்றைய இளைஞர்கள் நாகரீக உடைகள் அணிவதிலும், தலைமுடியை அலங்காரம் செய்து கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால் ஈராக் நாட்டில் வாழும் இளைஞர்கள் இத்தகைய செயலில் இறங்கினால் உயிருக்கு தான் ஆபத்து. இவை கீழ்த்தரமான செயல் என அங்குள்ள தீவிரவாதிகள் கருதுகிறார்கள்.

கடந்த மாதத்தில் கருப்பு நிறத்தில் இறுக்கமான பேண்ட் அணிந்த மற்றும் முடி அலங்காரத்தை மாற்றி அமைத்துக் கொண்ட சுமார் 15 இளைஞர்கள் கற்களால் அடித்து கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி இளைஞர்களின் நீண்ட பெயர் பட்டியலையும் வெளியிட்டு திருந்தி நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதை மீறினால் இவர்களுக்கும் தண்டனை கிடைக்கும்.

No comments: