Sunday 26 November 2017

அணு ஆயுத தாக்குதலுக்கு வடகொரியா பட்டியல்


https://பியாங்யாங்: அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகும் வடகொரியா குறி வைத்துள்ள 16 பகுதிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் இலக்காக அமெரிக்காவின் நியூயார்க், வெள்ளை மாளிகை உள்ளிட்ட 16 பகுதிகளுக்கு குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் வெளி விவகார அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் அதிகார வட்டத்திற்குள் வரும் சில பகுதிகள் என தெரிய வந்துள்ளது. வடகொரியா இலக்காக குறிவைத்துள்ள பகுதிகள் அனைத்தும் குடியிருப்புகள் மிகுந்த பகுதியாக இருப்பதால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
வெளியான பட்டியலின் அடிப்படையில் அமெரிக்காவின் முக்கிய பகுதிகள் அனைத்தும் அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாக உள்ளன. குறிப்பாக வெள்ளை மாளிகை மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் சிறப்பு கவனத்தை பெறுகின்றது. இது
போலவே ஜப்பான் நகரங்கள் பல மக்கள் தொகை மிகுந்த பகுதியாகும்.

Saturday 29 December 2012

நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை..


ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன்
சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து,ஒருநாள் நீங்க வீட்லஇருந்து பசங்களை பார்த்துக்கோங்க..
காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து
சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
செஞ்சுதான் பாருங்களேன்..என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில் இருக்க..இவள் ஆபீஸ் போனாள்..
ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..

முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..

வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்
வருபவர்களை கண்டித்தாள்..கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட
நினைத்தபோது,ஓர் அலுவலரின் மகள் திருமண
வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண
மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம்
ஒன்றை சொல்லிவிட்டு,மணமக்களின்
கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..
பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..
அவள் சாப்பிட்டதை விட,பிள்ளைகளுக்கும்
கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,
கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்
இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும்,பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
அத்தனையும் குரங்குகள்..சொல்றதை கேட்க மாட்டேங்குது..படின்னா படிக்க மாட்டேங்குது..
சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல
படுக்க வச்சிருக்கேன்..பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள
கெடுத்து வச்சிருக்கே என்று பாய..

அவளோ,அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...
என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்
பிள்ளைகள்..

விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
‘ஏங்க..இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?
இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
ஓஹோ ,அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும்
ஒன்று புரிந்தது..

இல்லாள் என்றும் ,மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்தொடங்கி நம் மூதாதையர்கள்
சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும்பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..

அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்
அளப்பரியது..

ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு,இது பெண்ணுக்கு என்று
குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில்ஒரு குடும்பம்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
கணவன்மீது மனைவியோ,மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும்
மனநிலையை கொண்டிருந்தால்தான்
எல்லா வளமும்பெற்று பல்லாண்டு வாழ
முடியும்...

மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்..

Friday 28 December 2012

டெல்லி பலாத்கார சம்பவம்



நம் தேசிய கீதத்தில் பாடியவாறு எல்லாப் பெண்களையும் தங்கை, அக்காவாக நினைக்க வேண்டும் என்ற வாதம் வெகுவாக நம் நாட்டில் அதும் டெல்லி பயங்கரம் பின்னர் பரவி வருகிறது...

இது முற்றிலும் குபீர் சிரிப்பை கிளப்புகிறது... பொதுவாக இயற்க்கை முறையிலே ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்து புடித்துவிட்டால் அவன் மனதில் சில ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து அவளை காதலிக்கவோ, அவளை முழுமையாக அடையவோ நினைப்பான் அது தான் உலக நியதி.. இவ்வாறு நடக்காவிட்டால் நானோ அல்ல இதனை படிக்க நீங்களோ பிறந்திர்க்க மாட்டோம்...

பெண்கள் நீங்கள் ஆண்களை குறை கூறுவதை விட்டு விட்டு சற்று சிந்தித்து உங்கள் ஆடை முறைகளில் சில கட்டுப்பாடுகள் என்ற கூற முடியாது சில மாற்றங்கள் செய்தால் தற்போது தலைவிரித்து ஆடும் குற்றங்கள் முழுமையாக தடைபடாவிட்டாலும் சிறிது குறையும்...

ஆம் பெரு நகரங்களில் "மச்சான் இந்த பொண்ணு எதுக்குடா ஷால் போட்ருக்கா" என்று பல இளைங்கர்களை கேக்க தூண்டுபவர்களும் நீங்களே.. பின்னர் அங்க தொட்டுடான் இங்க தொட்டுடான் என்று கூச்சலிடுவதில் என்ன நியாயம்?? அசிங்கப்பட்டது அசிங்கப்பட்டது தானே...

அது மட்டுமா சில இடங்களில் "இதுக்கு நீங்க ட்ரெஸ்ஸே போட்ருக்க வேணாமே" என்று கேள்வி கேக்க வைப்பதும் நீங்களே.. ஆம் பொது இடங்களில் சற்று யோசித்து உங்கள் ஆடை முறையில் மாற்றம் கொண்டு வாருங்கள்..

ஒருவனுக்கு ஒருத்தி என்று கோட்ப்பாட்டில் உங்களுக்கு நம்பிக்கையும் ஆசையும் இருந்தால் சிந்தியுங்கள்.. இது கட்டாயமாக்கப்படும் செயல் இல்லை தனி மனித சுதந்திரம், தனி மனித கோட்பாடு.. உங்கள் இஷ்டம் உங்கள் முடிவு உங்கள் கையில் தான், இல்லையெனில் வரவிருக்கும் எதிர்மறையான ஆபத்துகளை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்

ஆண் சமுதாயத்தை மட்டும் என்றும் குறை கூற வேண்டும் என்ற நோக்கில் சிந்திக்காமல் நாமும் வரும் முன் காப்போம் என்று சிந்திக்க தொடங்குங்கள்... உங்களிடம் உள்ள குறைகளை முதலில் சரி செய்து விட்டு மற்றவரை குறை கூறுங்கள்

Tuesday 6 November 2012

கணவன் மனைவி புரிந்து நடந்து கொள்ளக்கூடியவை பற்றி ஒரு பார்வை !!!



கணவன், மனைவி மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.
கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்.

1.குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?
2.கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?
3.குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?
4.குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?
5.வரவு, செலவை வரையறுப்பது எப்படி?
6.குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன ?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?

தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.

குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .’நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா?’ என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். ‘மக்கு, மண்டு, மண்டூகம் – போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.
பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
உங்கள் பங்கு என்ன?

உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.

1. அன்பாகப் பேசுவது
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3.வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5.சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9.ஒன்றாக பயணம் போக விரும்புவது.
10. பணிவு
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.

எதற்கும் யார் பொறுப்பு?

நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை? நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள பத்து கட்டளைகள்

பத்து கட்டளைகள்

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

சிக்கன் 65 சாப்பிட விருப்பமா? முதல்ல இதப்படிங்க !!



சிவப்பு நிறத்தில் மொறு மொறு என்று பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் உணவு சிக்கன் 65. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பிரபலமடைந்து வரும் இந்த உணவு கோழிக் கறியை வறுத்து செய்யப்படுகிறது. சிக்கன் 65 கண்ணைக் கவரும் விதத்தில் கலராக தெரியவேண்டும் என்பதற்காக சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம் மனித உடலுக்கும், குடலுக்கும் ஆபத்தை ஏற்படு
த்தக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

சிக்கன் 65 அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள், மரபணு பாதிப்புகளும் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் ரசாயனம் கலந்த மாமிச உணவுகளை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செயற்கை நிறங்கள்

உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அணுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எட்டு வகையான நிறங்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு. ஆனால் இதை யாரும் கடை பிடிப்பதில்லை.

அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும் என்று பிரபல குடல்நோய் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.

கழுத்துக் கழலை நோய்

சிக்கன் 65ல் துணிகளுக்கு சாயம் ஏற்றப் பயன்படும் சூடான் டை, மெட்டானில் எல்லோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதுவே குடல் புற்றுநோய், சிறுநீராகக் கோளாறு, மரபணு கோளாறுகளை ஏற்படுத்துகின்றனவாம். அதேபோல் உணவில் சிவப்பு நிறத்தை கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த செயற்கை நிறங்களை இனிப்புகளில் மட்டுமே சேர்க்கவேண்டும். காரவகைகளில் சேர்க்க அனுமதி கிடையாது.

மக்களின் மனதில் உணவைவிட உணவின் நிறம்தான் பளிச்சென்று பதிந்து உள்ளது. சிக்கன் 65 என்றால் சிவப்பு நிறமாக இருக்கவேண்டும் என்றும், அப்படி இருந்தால் மட்டுமே சிக்கன் 65 என்றும் நினைக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டே வியாபாரிகளம் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிறுவர்களுக்கு ஆபத்து

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.

இதேபோல் ரசாயனம் கலந்து பதப்படுத்தப்பட்டுள்ள பன்றி இறைச்சி, கோழிக்கறி போன்றவைகளை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கிரில்டு சிக்கன் சாப்பிடுவதும் ஆபத்து என்று கூறி சிக்கன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

Sunday 16 September 2012

2012 இல் அதிகம் சம்பாதித்த 30 இணையத்தளங்கள் விபரம்


1. Google
முதலாம் இடத்தில் இருப்பது Google தான்.


நிறுவுனர்கள் : Larry Page and Sergey Brin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$691.29
வருடாந்த சராசரி வருமானம் :$22,000,000,000

2. Amazon

நிறுவுனர் : Jeff Bezos
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$607.05
வருடாந்த சராசரி வருமானம் :$19,200,000,000

3. Yahoo
நிறுவுனர் : Jerry Yang and David Filo
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$228.31
வருடாந்த சராசரி வருமானம் :$7,200,000,000

4. eBay
நிறுவுனர் : Pierre Omidyar
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$199.45
வருடாந்த சராசரி வருமானம் :$ 6,300,000,000

5. Msn/Live
நிறுவுனர் : Nathan Myhvoid
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$102.00
வருடாந்த சராசரி வருமானம் :$ 3,200,000,000

6. Paypal
நிறுவுனர் : Luke Nosek, Max Levchin and Peter Thiel
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$71.40
வருடாந்த சராசரி வருமானம் :$2,250,000,000

7. iTunes
நிறுவுனர் : Jeff Robin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$60.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,900,000,000

8. Rueters
நிறுவுனர் : Marshal Vace
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$60.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,900,000,000

9. Priceline
நிறுவுனர் : Jesse Fink
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$59.6
வருடாந்த சராசரி வருமானம் :$1,850,000,000

10. Expedia
நிறுவுனர் : Added Mark Schroeder
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$46.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,450,000,000

11. NetFlix
நிறுவுனர் : Reed Hastings
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$38.00
வருடாந்த சராசரி வருமானம் :$1.100.000,000

12. Travelocity
நிறுவுனர் : Terry Jones
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$38.00
வருடாந்த சராசரி வருமானம் :$1.100.000,000

13. Zappos
நிறுவுனர் : Nick Swinmurn
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$31.70
வருடாந்த சராசரி வருமானம் :$1,000,000,000

14. Hotels.com
நிறுவுனர் : David Litman
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$31.70
வருடாந்த சராசரி வருமானம் :$1,000,000,000

15. AOL
நிறுவுனர் : Erik Prince
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$30.50
வருடாந்த சராசரி வருமானம் :$960,000,000

16. Orbitz
நிறுவுனர் : Jeff Katz
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$28.00
வருடாந்த சராசரி வருமானம் :$870,000,000

17. Overstock
நிறுவுனர் : Robert Brazell
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$27.00
வருடாந்த சராசரி வருமானம் $834,000,000

18. Myspace
நிறுவுனர் : Tom Anderson
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$25.00
வருடாந்த சராசரி வருமானம் $800.000.000

19. Skype
நிறுவுனர் : Niklas Zennstrom
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$18.00
வருடாந்த சராசரி வருமானம்: $550,840,000

20. Sohu
நிறுவுனர் : Zhang Chaoyang
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$14.00
வருடாந்த சராசரி வருமானம்: $430,000,000

21. Buy.com
நிறுவுனர் : Robb Brock
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$12.68
வருடாந்த சராசரி வருமானம்: $400,000,000

22. StubHub
நிறுவுனர் : Eric Baker
செக்கன் ஒன்றிற்கான வருமானம் : $13.00
வருடாந்த சராசரி வருமானம்: $ 430,000,000

23. Alibaba
நிறுவுனர் : Jack Ma
செக்கன் ஒன்றிற்கான வருமானம் : $10.00
வருடாந்த சராசரி வருமானம்: $315,000,000

24. Facebook
நிறுவுனர் : Mark Zuckerberg
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.50
வருடாந்த சராசரி வருமானம்: $300,000,000

25. YouTube
நிறுவுனர் : Chad Hurley, Jawed Karim and Steve Chen
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.50
வருடாந்த சராசரி வருமானம்: $300,000,000

26. Blue Nile
நிறுவுனர் : Mark Vadon
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.40
வருடாந்த சராசரி வருமானம்: $295,000,000

27. Tripadvisor
நிறுவுனர் : Stephen Kaufer
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$8.20
வருடாந்த சராசரி வருமானம்: $ 250,000,000

28. Getty Images
நிறுவுனர் : Mark Getty
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$7.40
வருடாந்த சராசரி வருமானம்: $230,000,000

29. Bidz
நிறுவுனர் : Garry Itkin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$6.70
வருடாந்த சராசரி வருமானம்: $200,000,000

30. NYTimes
நிறுவுனர் : Henry Jarvis Raymond
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$6.00
வருடாந்த சராசரி வருமானம்: $175,000,000

Thursday 13 September 2012

"இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: உலக முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது!


நியூயார்க்:இறைவனின் இறுதித் தூதரான, முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களை மிகக் கேவலமாக விமர்சிக்
கும் திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த அவதூறான திரைப்படம் லிபியாவில் முஸ்லிம்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பே அங்குள்ள அமெரிக்க தூதர் உள்பட நான்குபேரின் படுகொலைக்கு வழிவகுத்தது.

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிரான எதிர்ப்புகளும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களும் நேற்று(புதன்கிழமை) அரபு நாடுகளில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக இடம்பிடித்தன. ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைப்புகள் இத்திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளன.

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படங்களும், கார்ட்டூன்களும் உலகிற்கு புதியதல்ல. ஆனால், தற்போதைய சம்பவத்தின் பின்னணியில் கிறிஸ்தவ-யூத லாபியின் ஆதரவு இருக்கிறதா? என்பதுக் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘அல் குத்ஸ் அல் அரபி’ பத்திரிகை தனது எடிட்டோரியலில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சியோனிச லாபிதான் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் என்று ப்ரஸ் டி.வி கூறுகிறது. கலிஃபோர்னியாவில் சாம் பாசிலி என்ற யூதன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளான். இரண்டு மணிநேரம் நீண்ட இத்திரைப்படத்தை எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவர் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து யூ ட்யூப் சமூக வீடியோ இணையதளத்தில் தர ஏற்றம் செய்ததைத் தொடர்ந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. கிட்டத்தட்ட 5 மில்லியன் டாலர் செலவழித்து தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் பின்னணியில் 100க்கும் மேற்பட்ட யூத அமைப்புகள் நிதியுதவி அளித்துள்ளதாக டெய்லி மெயில் கூறுகிறது.

இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் ‘innocence of muslims’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இறைத்தூதரின் உருவம் போல் கற்பனையில் அவதூறாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரமும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. யூ ட்யூபில் வெளியான 13 நிமிட டிரைலரிலும் இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 2010-ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் பிரதியை எரிக்க அழைப்பு விடுத்த கிறிஸ்தவ பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸின் அவதூறான கருத்துக்களை நியாயப்படுத்தும் காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இச்சம்பவம் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கும் வேளையிலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான யூதன் சாம் பாசிலி மீண்டும் இஸ்லாத்தை மோசமாக விமர்சித்து பேட்டியளித்துள்ளான். இஸ்லாம் ஒரு புற்றுநோய் என்று கருத்து தெரிவித்த பாசிலி தனது திரைப்படம் ஒரு அரசியல் சினிமா என்று கூறியுள்ளான். மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த அவதூறான அவமதிக்கத்தக்க தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறுகிறான். இத்திரைப்படம் ஏற்படுத்திய கொந்தளிப்பை தொடர்ந்து பாசிலி தலைமறைவாகிவிட்டான். தாக்குதலுக்கு பயந்து ரகசிய இடத்தில் பாசிலி ஒளிந்து இருப்பதாக கூறப்படுகிறது.